NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மகள்களுக்கு சொத்துரிமை இல்லாததால் மீண்டும் திருமணம் செய்து கொண்ட இஸ்லாமிய தம்பதியர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மகள்களுக்கு சொத்துரிமை இல்லாததால் மீண்டும் திருமணம் செய்து கொண்ட இஸ்லாமிய தம்பதியர்
    1956 வரை இந்தியாவில் எந்த பெண்ணுக்கும் சொத்துரிமை இல்லாமல் தான் இருந்தது.

    மகள்களுக்கு சொத்துரிமை இல்லாததால் மீண்டும் திருமணம் செய்து கொண்ட இஸ்லாமிய தம்பதியர்

    எழுதியவர் Sindhuja SM
    Mar 12, 2023
    10:45 am

    செய்தி முன்னோட்டம்

    தங்களது முழு சொத்தையும் மகள்களுக்கு வழங்கும் உரிமை முஸ்லீம் வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ் இல்லை என்பதால், ஒரு கேரள தம்பதியினர் மதச்சார்பற்ற சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் தங்கள் திருமணத்தை பதிவுசெய்ய முடிவு செய்தனர்.

    இதனையடுத்து, கேரளாவை சேர்ந்த வழக்கறிஞரும் நடிகருமான சி.சுக்கூர் மற்றும் அவரது மனைவி ஷீனா ஆகியோர் மார்ச் 8ஆம் தேதி மீண்டும் தங்கள் திருமணத்தை பதிவு செய்தனர்.

    இந்தியாவில் முஸ்லீம்களுக்கான சொத்துரிமை, ஷரியத் சட்டம் 1937ஆல் நிர்வகிக்கப்படுகிறது.

    இந்த சட்டத்தின்படி, சுக்கூரின் சொத்துகளில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே அவரது மகள்களுக்கு செல்லும், மீதமுள்ள சொத்துக்கள் சுக்கூரின் சகோதரருக்கு சொந்தமாகும்.

    ஆண்கள் மட்டுமே சொத்துரிமை வைத்திருக்க வேண்டும் என்பது தான் பல நூற்றாண்டுகளாக உலகம் முழுவதும் பின்பற்றப்பட்டு வருகிறது.

    இந்தியா

    1956ஆம் ஆண்டு வரை எந்த பெண்ணுக்கும் சொத்துரிமை இல்லை

    1956 வரை இந்தியாவில் எந்த பெண்ணுக்கும் சொத்துரிமை இல்லாமல் தான் இருந்தது. அதாவது, தந்தையின் சொத்துக்கள் மகனுக்கு மட்டுமே சொந்தமாக இருக்கும். மகள்கள் மற்றும் மனைவி, தந்தை/கணவரை மட்டுமே நம்பி வாழ வேண்டும்.

    இது 1956ல் கொண்டுவரப்பட்ட இந்து வாரிசுரிமைச் சட்டத்தால் மாற்றப்பட்டது. இந்த சட்டம் இந்து பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை வழங்குகிறது.

    ஆனால், இஸ்லாமியர்களுக்கு இருக்கும் சட்டத்தில் அதற்கான வழியில்லை. ஆனால், தந்தை எப்போது வேண்டுமானாலும் தன் முழு சொத்தையும் மகள்களுக்கு பரிசாக வழங்கலாம்.

    சுக்கூரும் இதுபோல தன் சொத்துக்களை மகள்களுக்கு வழங்கி இருக்கலாம். ஆனால், அவர் முஸ்லீம் சட்டத்தில் மாற்றம் வேண்டும் என்பதை உலகிற்கு கூறுவதற்காகவே மதச்சார்பற்ற சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் தன் மனைவியை மீண்டும் திருமணம் செய்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கேரளா

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    இந்தியா

    தங்க கடத்தலில் ஈடுபட்ட ஏர் இந்தியா நிறுவன விமான ஊழியர் கேரளா
    இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டதற்கு காரணம் இந்தியா - இலங்கை வெளியுறவு அமைச்சர் இலங்கை
    'பொட்டு ஏன் வைக்கவில்லை': மகளிர் தினத்தன்று பெண்ணிடம் கத்திய பாஜக எம்பி பாஜக
    அமிர்தசரஸ் பொற்கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு திரௌபதி முர்மு

    கேரளா

    கேரளாவில் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை-அரசு பெண் மருத்துவர் முன் நிர்வாண போஸ் கொடுத்த வாலிபர் கைது இந்தியா
    கேரளா பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமீனில் விடுதலை - சிறையில் கொடுமை உத்தரப்பிரதேசம்
    கர்ப்பமாக இருக்கும் கணவன்: குழந்தையை வரவேற்க தயாராகும் திருநர் தம்பதி வைரல் செய்தி
    கேரள திருநர் தம்பதி ஜியா-ஜஹாத்துக்கு குழந்தை பிறந்தது திருநர் சமூகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025