NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மகள்களுக்கு சொத்துரிமை இல்லாததால் மீண்டும் திருமணம் செய்து கொண்ட இஸ்லாமிய தம்பதியர்
    இந்தியா

    மகள்களுக்கு சொத்துரிமை இல்லாததால் மீண்டும் திருமணம் செய்து கொண்ட இஸ்லாமிய தம்பதியர்

    மகள்களுக்கு சொத்துரிமை இல்லாததால் மீண்டும் திருமணம் செய்து கொண்ட இஸ்லாமிய தம்பதியர்
    எழுதியவர் Sindhuja SM
    Mar 12, 2023, 10:45 am 0 நிமிட வாசிப்பு
    மகள்களுக்கு சொத்துரிமை இல்லாததால் மீண்டும் திருமணம் செய்து கொண்ட இஸ்லாமிய தம்பதியர்
    1956 வரை இந்தியாவில் எந்த பெண்ணுக்கும் சொத்துரிமை இல்லாமல் தான் இருந்தது.

    தங்களது முழு சொத்தையும் மகள்களுக்கு வழங்கும் உரிமை முஸ்லீம் வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ் இல்லை என்பதால், ஒரு கேரள தம்பதியினர் மதச்சார்பற்ற சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் தங்கள் திருமணத்தை பதிவுசெய்ய முடிவு செய்தனர். இதனையடுத்து, கேரளாவை சேர்ந்த வழக்கறிஞரும் நடிகருமான சி.சுக்கூர் மற்றும் அவரது மனைவி ஷீனா ஆகியோர் மார்ச் 8ஆம் தேதி மீண்டும் தங்கள் திருமணத்தை பதிவு செய்தனர். இந்தியாவில் முஸ்லீம்களுக்கான சொத்துரிமை, ஷரியத் சட்டம் 1937ஆல் நிர்வகிக்கப்படுகிறது. இந்த சட்டத்தின்படி, சுக்கூரின் சொத்துகளில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே அவரது மகள்களுக்கு செல்லும், மீதமுள்ள சொத்துக்கள் சுக்கூரின் சகோதரருக்கு சொந்தமாகும். ஆண்கள் மட்டுமே சொத்துரிமை வைத்திருக்க வேண்டும் என்பது தான் பல நூற்றாண்டுகளாக உலகம் முழுவதும் பின்பற்றப்பட்டு வருகிறது.

    1956ஆம் ஆண்டு வரை எந்த பெண்ணுக்கும் சொத்துரிமை இல்லை

    1956 வரை இந்தியாவில் எந்த பெண்ணுக்கும் சொத்துரிமை இல்லாமல் தான் இருந்தது. அதாவது, தந்தையின் சொத்துக்கள் மகனுக்கு மட்டுமே சொந்தமாக இருக்கும். மகள்கள் மற்றும் மனைவி, தந்தை/கணவரை மட்டுமே நம்பி வாழ வேண்டும். இது 1956ல் கொண்டுவரப்பட்ட இந்து வாரிசுரிமைச் சட்டத்தால் மாற்றப்பட்டது. இந்த சட்டம் இந்து பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை வழங்குகிறது. ஆனால், இஸ்லாமியர்களுக்கு இருக்கும் சட்டத்தில் அதற்கான வழியில்லை. ஆனால், தந்தை எப்போது வேண்டுமானாலும் தன் முழு சொத்தையும் மகள்களுக்கு பரிசாக வழங்கலாம். சுக்கூரும் இதுபோல தன் சொத்துக்களை மகள்களுக்கு வழங்கி இருக்கலாம். ஆனால், அவர் முஸ்லீம் சட்டத்தில் மாற்றம் வேண்டும் என்பதை உலகிற்கு கூறுவதற்காகவே மதச்சார்பற்ற சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் தன் மனைவியை மீண்டும் திருமணம் செய்துள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    இந்தியா
    கேரளா

    இந்தியா

    இந்தியாவின் UPI சேவையால் அசந்து போன ஜப்பான் அமைச்சர் ஜப்பான்
    மணிப்பூர் வன்முறை: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு மணிப்பூர்
    மல்யுத்த வீரர்கள் பதக்கங்களை கங்கையில் வீசினால் நாங்கள் தடுக்க மாட்டோம்: காவல்துறை  டெல்லி
    மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு உதவிய LeT தலைவர், பாகிஸ்தான் சிறையில் உயிரிழந்தார்  மும்பை

    கேரளா

    தமிழ்நாடு டாஸ்மாக் மதுபான கடையில் கம்ப்யூட்டர் பில்லிங் முறை தமிழ்நாடு
    தென்னிந்திய அளவில் யானைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்  தமிழ்நாடு
    ஜூன் 4ஆம் தேதி கேரளாவில் பருவமழை தொடங்கும்: வானிலை ஆய்வு மையம் இந்தியா
    சுற்றித்திரியும் அரிக்கொம்பன் காட்டு யானையினை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை  தேனி

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023