NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மதுரை அரசு மருத்துவமனை - கர்ப்பிணிகள் அடுத்தடுத்து உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மதுரை அரசு மருத்துவமனை - கர்ப்பிணிகள் அடுத்தடுத்து உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்
    மதுரை அரசு மருத்துவமனை - கர்ப்பிணிகள் அடுத்தடுத்து உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்

    மதுரை அரசு மருத்துவமனை - கர்ப்பிணிகள் அடுத்தடுத்து உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்

    எழுதியவர் Nivetha P
    Oct 03, 2023
    12:38 pm

    செய்தி முன்னோட்டம்

    மதுரை மாநகராட்சிக்குட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து பரிந்துரையின் பேரில், கர்ப்பிணிகள் பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைகளில் உயர் சிகிச்சைக்காக அனுப்பப்படுவது வழக்கம்.

    அவ்வாறு அனுப்பப்படும் கர்ப்பிணிகள் அடிக்கடி உயிரிழப்பதாகவும், ஆரம்ப சுகாதாரநிலையங்களின் மருத்துவர்கள் சரிவர சிகிச்சையளிக்காமல் அவசரநிலையில் இங்கு அனுப்புவதால் தான் இந்த உயிரிழப்பு ஏற்படுவதாகவும் கடந்த சில நாட்களாக தொடர் புகார்கள் எழுந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    விசாரணை 

    மேலும் ஓர் கர்ப்பிணி உயிரிழப்பு 

    அதன்படி கடந்த மாதம் மதுரை அரசு மருத்துவமனையில் 2 கர்ப்பிணிகள் உயிரிழந்திருந்த நிலையில், கடந்த 29ம் தேதி வண்டியூர் பகுதியினை சேர்ந்த கர்ப்பிணி ஒருவர், குழந்தை பிறந்த சில நிமிடங்களில் உயிரிழந்துள்ளார்.

    இந்நிலையில் மருத்துவ நிர்வாகம் அவருக்கு டெங்கு பாதிப்பு உள்ளதாக கேஸ் ஷீட்டில் குறிப்பிட்டுள்ளனர்.

    இதுகுறித்து ஆரம்ப சுகாதாரத்துறை மருத்துவர்கள், மாநகராட்சி நகர்நல அலுவலர் வினோத்துக்கு புகாரளித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

    விசாரணை 

    மதுரைக்கு விரைந்த விசாரணை குழு

    இதனைத்தொடர்ந்து, வினோத் நேரில் சென்று மருத்துவமனையில் அந்த கர்ப்பிணியின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    இறந்த கர்ப்பிணியின் ரத்த மாதிரிகள் எடுத்து சோதனை செய்துள்ளார். அதில், அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏதும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

    இதுகுறித்து வினோத் மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் கூறியுள்ளார்.

    அவர் இந்த விவகாரம் குறித்து அமைச்சரிடம் கொண்டுசெல்லவே அவரது உத்தரவின் பேரில், சென்னையிலிருந்து உயர்மட்ட விசாரணைக்குழு நேற்று(அக்.,2)மதுரைக்கு விரைந்துள்ளது.

    மருத்துவமனை 

    கேஸ் ஷீட்டில் திருத்தம் செய்துள்ள விவகாரம் 

    மேலும் ஆட்சியர் சங்கீதா மேற்கொண்ட தணிக்கையில் ஏற்கனவே உயிரிழந்த கர்ப்பிணிகளின் கேஸ் ஷீட்டிலும் திருத்தம் செய்தது தெரியவந்துள்ளது.

    இதனிடையே உயர்மட்ட விசாரணை குழு அதிகாரிகள், ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், மதுரை அரசு மருத்துவமனை டீன், மாநகராட்சி நகர்நல அலுவலர் வினோத் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளது என்று தெரிகிறது.

    இதற்கிடையே, அரசு மருத்துவமனை சங்கத்தலைவர் செந்தில் இதுகுறித்து அறிவிப்பு ஒன்றினை அண்மையில் வெளியிட்டுள்ளார்.

    போராட்டம் 

    பணிநீக்கம் செய்யும் வரை போராட்டம் - அரசு மருத்துவமனை சங்கத்தலைவர்

    அவர் கூறியதாவது, "மாநகராட்சி நகர்நல அலுவலர் வினோத் இறந்த கர்ப்பிணியின் உடலில் இருந்து சட்டவிரோதமான முறையில் ரத்த மாதிரிகள் எடுத்துள்ளார். இது சட்டத்துக்கு புறம்பானது என்பதால் அவரை பணி நீக்கம் செய்யும்வரை நோயாளிகள் பாதிக்காதவாறு போராட்டம் மேற்கொள்ளவுள்ளோம்" என்று கூறியுள்ளார்.

    தொடர்ந்து அவர், பிரசவத்தின் பொழுது ஒருவர் உயிரிழந்தால் அதுகுறித்து விசாரிக்க தனி குழு ஒன்று உள்ளது என்றும்,

    அவருக்கு சந்தேகம் ஏற்பட்ட பட்சத்தில் அந்த தணிக்கை குழுவிடம் முறையிட்டிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

    ஆனால் வினோத் அவ்வாறு செய்யாமல் மருத்துவமனையின் பெயரினை கெடுக்கும் வகையில் செயல்பட்டுள்ளார் என்றும் கூறியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அரசு மருத்துவமனை
    போராட்டம்
    மதுரை
    டெங்கு காய்ச்சல்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    அரசு மருத்துவமனை

    தமிழக அரசு மருத்துவமனைகளில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம் - மா.சுப்ரமணியம் கொரோனா
    நாமக்கல் மாவட்டம் விஷ ஊசிப்போட்டு 300 பேர் கொலை?-அரசு மருத்துவமனையில் விசாரணை  காவல்துறை
    தூத்துக்குடியில் கிராம நிர்வாக அதிகாரி படுகொலை - 4 தனிப்படை அமைப்பு  தூத்துக்குடி
    சேலம் அரசு மருத்துவமனை ஆவின் பாலகத்தில் திடீர் சோதனை நடத்திய அதிகாரிகள்  சேலம்

    போராட்டம்

    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு விமான சேவைகள்
    2வது நாளாக தொடரும் ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் - 2 ஆசிரியர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு சென்னை
    கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி -அமைச்சர் மா.சுப்பிரமணியம் உறுதி தமிழக அரசு
    நிரந்தர பணி கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் ஒப்பந்த செவிலியர்கள் சென்னை

    மதுரை

    மதுரை மெட்ரோ ரயில் திட்டம் - வைகை ஆற்றின் நடுவே மண் பரிசோதனை துவங்கியது  ரயில்கள்
    திமுக கட்சியிலிருந்து மிசா பாண்டியன் சஸ்பெண்ட் - பின்னணி குறித்த தகவல்கள்  திமுக
    மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோயில் தக்கரும், தொழிலதிபருமான கருமுத்து கண்ணன் காலமானார் கோவில்கள்
    மதுரையில் ஜல்லிக்கட்டு காளையை சீராக கொண்டு சென்ற மணமகள்  ஜல்லிக்கட்டு

    டெங்கு காய்ச்சல்

    தேசிய டெங்கு தினம் 2023: டெங்கு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்! ஹெல்த் டிப்ஸ்
    டெங்கு தடுப்பூசி: 3வது கட்ட சோதனை விரையில் தொடங்க இருக்கிறது  இந்தியா
    டெங்கு காய்ச்சல் பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - பொது சுகாதாரத்துறை  சென்னை
    கேரளாவில் அதிகரிக்கும் டெங்கு - தமிழகத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம்  சுகாதாரத் துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025