NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ரேணுகாசாமி கொலை வழக்கு: கன்னட நடிகர் தர்ஷனுக்கு ஜூலை 4-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரேணுகாசாமி கொலை வழக்கு: கன்னட நடிகர் தர்ஷனுக்கு ஜூலை 4-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

    ரேணுகாசாமி கொலை வழக்கு: கன்னட நடிகர் தர்ஷனுக்கு ஜூலை 4-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

    எழுதியவர் Sindhuja SM
    Jun 22, 2024
    06:26 pm

    செய்தி முன்னோட்டம்

    ரேணுகாசாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா மற்றும் மற்ற மூன்று குற்றவாளிகளையும் ஜூலை 4-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    தர்ஷனின் ரசிகரான ரேணுகாசாமியின் கொடூரமான கொலை தொடர்பாக நடந்து வரும் விசாரணையின் இந்த சமீபத்திய தகவலை சிறப்பு அரசு வழக்கறிஞர் (SPP) பிரசன்ன குமார் வழங்கியுள்ளார்.

    இன்று சிறப்பு அரசு வழக்கறிஞர் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் காவலில் வைக்கக் கோரவில்லை. எனினும், அந்த நான்கு குற்றவாளிகளையும் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    தர்ஷன், பிரதோஷ், வினய், தன்ராஜ் ஆகியோரை பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அவர்கள் ஜூலை 4ம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் இருப்பார்கள்.

    கர்நாடகா 

    ரேணுகாசாமியை கொடூரமாக கொலை செய்த அவலம் 

    33 வயதான ரேணுகாசாமி என்பவரை கொலை செய்ததாக தர்ஷன் ஜூன் 11 அன்று கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தர்ஷனின் சக நடிகரும் தோழியுமான பவித்ரா கவுடாவுக்கு தர்ஷனின் ரசிகரான ரேணுகாசாமி ஆபாசமான மெசேஜ்களை அனுப்பியதாக கூறப்படுகிறது.

    அதனால் கோபமடைந்த தர்ஷன், தனது ரசிகர் மன்ற உறுப்பினரை அனுப்பி ரேணுகாசாமியை கொலை செய்ய சொன்னதாக ஆதாரங்கள் கூறுகின்றன.

    தர்ஷனின் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த ராகவேந்திரா என்பவர், நடிகர் தர்ஷனுடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி ரேணுகாசாமியை ஆர்ஆர் நகரில் உள்ள ஒரு கொட்டகைக்கு அழைத்து சென்றிருக்கிறார்.

    அங்கு வைத்து ரேணுகாசாமி சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கர்நாடகா
    இந்தியா
    கொலை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    கர்நாடகா

    கர்நாடகா: ஹோட்டல் அறைக்குள் புகுந்து இரு வேறு மதத்தை சேர்ந்த ஜோடியை தாக்கிய 6 பேரால் பரபரப்பு  இந்தியா
    பெங்களுரு சிஇஓ தனது 4 வயது மகனை கொல்வதற்கு முன்பு எழுதிய கடிதம் குறித்த தகவல் வெளியானது கோவா
    கர்நாடகாவில் ஹோட்டல் அறைக்குள் புகுந்து இரு வேறு மதத்தை சேர்ந்த ஜோடியை தாக்கியவர்கள் மீது பலாத்கார குற்றச்சாட்டு  பலாத்காரம்
    கர்நாடகா பள்ளியில் மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்யும் மற்றொரு வீடியோ வைரல்  பள்ளி மாணவர்கள்

    இந்தியா

    புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி நியமனம் இந்திய ராணுவம்
    இந்தியாவில் பறவைக் காய்ச்சலால் மீண்டும் ஒரு மனிதருக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதை உறுதி செய்தது WHO உலக சுகாதார நிறுவனம்
    'இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற சதி...': மும்பை உயர்நீதிமன்றம் மும்பை
    பிளிங்கிட்டில் மேலும் ரூ.300 கோடியை முதலீடு செய்தது சொமாட்டோ சோமாட்டோ

    கொலை

    'படிப்பில் திறமையானவர், மூளைச்சலவை செய்யப்பட்டார்' - கர்னி சேனா தலைவர் கொலையாளி ராஜஸ்தான்
    ராமஜெயம் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட நபர் திடீர் கொலை - அதிர்ச்சியில் திருச்சி  திருச்சி
    ஏமனில் மரண தண்டனையில் உள்ள மகளைக் காப்பாற்ற "பணம்" ஒப்பந்தம் செய்ய தாய்க்கு அனுமதி ஏமன்
    அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் மீது இந்தியா விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்திய-அமெரிக்க தலைவர்கள் வலியுறுத்தல் அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025