NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கசிந்த நீட் தேர்வுத் தாளுடன், வினாத்தாள் பொருந்தியது: கைது செய்யப்பட்ட மாணவர் வாக்குமூலம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கசிந்த நீட் தேர்வுத் தாளுடன், வினாத்தாள் பொருந்தியது: கைது செய்யப்பட்ட மாணவர் வாக்குமூலம்
    கசிந்த வினாத்தாள் உண்மையான தேர்வுத் தாளுடன் பொருந்தியதாக மாணவர் வாக்குமூலம்

    கசிந்த நீட் தேர்வுத் தாளுடன், வினாத்தாள் பொருந்தியது: கைது செய்யப்பட்ட மாணவர் வாக்குமூலம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 20, 2024
    11:53 am

    செய்தி முன்னோட்டம்

    NEET தேர்வு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அனுராக் யாதவ் என்ற மாணவன், தனது மாமா கொடுத்த கசிந்த வினாத்தாள் உண்மையான தேர்வுத் தாளுடன் பொருந்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

    பாட்னாவில் நீட் தேர்வை நடத்தியதில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து பீகார் காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு பிரிவிடம் மத்திய கல்வி அமைச்சகம் புதன்கிழமை அறிக்கை கேட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த விவகாரத்தில் முறைகேட்டிற்கு துணை போனதாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் படி, NEET வினாத்தாள் முந்தைய நாள் கசிந்ததாக ஒப்புக்கொண்டனர்.

    கடந்த வாரம் NEET-UG 2024 தாள் கசிவு மற்றும் 1,500 க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடைபெற்ற மாணவர் போராட்டங்கள் நாட்டை உலுக்கின.

    கைது 

    முறைகேட்டில் ஈடுபட்டதாக நால்வர் கைது

    பீகாரில் இருந்து கைது செய்யப்பட்ட நான்கு பேரில் NEET மாணவர் அனுராக் யாதவ், டானாபூர் நகராட்சி மன்ற பொறியாளர் சிக்கந்தர் யாதவேந்து மற்றும் இரண்டு பேர் - நிதிஷ் குமார் மற்றும் அமித் ஆனந்த்.

    தேர்வுக்கு முந்தைய நாள் வினாத்தாள் கிடைத்ததாகவும், அதை மனப்பாடம் செய்ய வைத்ததாகவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

    இது குறித்து அனுராக் யாதவ் கூறுகையில்,"தேர்வு முடிந்ததும், போலீசார் வந்து பிடித்து, குற்றத்தை ஒப்புக்கொண்டேன்" என்றார்.

    குற்றம் சாட்டப்பட்ட நிதிஷ் குமார் மற்றும் அமித் ஆனந்த் ஆகியோர், எந்தவொரு போட்டித் தேர்வின் வினாத்தாளைக் கசியவிட முடியும் என்றும், நீட் தேர்வு வினாத்தாளை கசிய விடுவதற்கு ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் ₹ 30-32 லட்சம் செலவாகும் என்றும் கூறியதாக NDTV செய்தி தெரிவிக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நீட் தேர்வு
    பீகார்

    சமீபத்திய

    'கலாம்: இந்தியாவின் ஏவுகணை நாயகன்': டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் தனுஷ் தனுஷ்
    ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது?  ஆப்பிள்
    இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள் ஹோண்டா
    உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான் அமேசான்

    நீட் தேர்வு

    நீட் நுழைவுத் தேர்வுக்கு தேதிகள் அறிவிப்பு! இந்தியா
    பிபிசி ஆவணப்படம் மற்றும் அதானி பிரச்சனைகளைப் பற்றி பட்ஜெட் கூட்டதொடரில் பேச இருக்கும் திமுக எம்பிகள் பட்ஜெட் 2023
    நீட் தேர்வு விலக்கு குறித்து இன்னும் 2 தினங்களில் விளக்கம் - மா.சுப்ரமணியம் சென்னை
    அதிமுக ஆட்சிக்கால நீட் தொடர்பான 'ரிட்' மனு வாபஸ் - தமிழக அரசு அதிமுக

    பீகார்

    ஊழல் வழக்கு: லாலு பிரசாத்தின் ரூ.6 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் இந்தியா
    மக்களவை தேர்தல் முன்கூட்டியே நடத்த வாய்ப்பு: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தேர்தல்
    பீகாரில் 30 பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்து விபத்து நிதிஷ் குமார்
    பீகாரில் 3 லட்சம் மாணவர்கள் பள்ளியில் இருந்து நீக்கம் - அதிரடி நடவடிக்கை பள்ளி மாணவர்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025