Page Loader
ஜம்மு காஷ்மீர் பேருந்து தாக்குதல்: பயங்கரவாதிகளுக்கு தளவாடங்களை வழங்கியவர் கைது

ஜம்மு காஷ்மீர் பேருந்து தாக்குதல்: பயங்கரவாதிகளுக்கு தளவாடங்களை வழங்கியவர் கைது

எழுதியவர் Sindhuja SM
Jun 19, 2024
06:14 pm

செய்தி முன்னோட்டம்

ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு தளவாடங்களை வழங்கியதற்காக நிலத்தடி தொழிலாளி (OGW) ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நடந்து சுமார் 10 நாட்களுக்கு மேல் ஆகும் நிலையில், தங்களது விசாரணையில் ஒரு பெரிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அந்த தொழிலாளி ரஜோரியில் கைது செய்யப்பட்டார். ஜூன் 9 அன்று மாதா வைஷ்ணோ தேவி கோவிலுக்கு பக்தர்களை ஏற்றி சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர் மற்றும் 41 பேர் காயமடைந்தனர். பயங்கரவாதிகளின் இந்த துப்பாக்கிச் சூட்டினால் பேருந்து ஆழமான ஒரு பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

இந்தியா

 சுமார் 50 சந்தேக நபர்கள் கைது 

அந்த பேருந்தில் சென்ற யாத்ரீகர்கள் பெரும்பாலும் ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் டெல்லியைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த தாக்குதல் தொடர்பாக சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய உள்துறை அமைச்சகம் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றியுள்ளது. முன்னதாக, ஜம்மு காஷ்மீர் போலீசார் ஒரு சந்தேக நபரின் ஓவியத்தை வெளியிட்டனர். மேலும் சம்பந்தப்பட்டவர்கள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக நம்பப்படும் மூன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தான், மே 4 அன்று பூஞ்ச் ​​நகரில் நடந்த இந்திய விமானப்படை (IAF) கான்வாய் மீதான தாக்குதலையும் நடத்தினர் என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.