NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜம்மு காஷ்மீர் பேருந்து தாக்குதல்: பயங்கரவாதிகளுக்கு தளவாடங்களை வழங்கியவர் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜம்மு காஷ்மீர் பேருந்து தாக்குதல்: பயங்கரவாதிகளுக்கு தளவாடங்களை வழங்கியவர் கைது

    ஜம்மு காஷ்மீர் பேருந்து தாக்குதல்: பயங்கரவாதிகளுக்கு தளவாடங்களை வழங்கியவர் கைது

    எழுதியவர் Sindhuja SM
    Jun 19, 2024
    06:14 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு தளவாடங்களை வழங்கியதற்காக நிலத்தடி தொழிலாளி (OGW) ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவம் நடந்து சுமார் 10 நாட்களுக்கு மேல் ஆகும் நிலையில், தங்களது விசாரணையில் ஒரு பெரிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அந்த தொழிலாளி ரஜோரியில் கைது செய்யப்பட்டார்.

    ஜூன் 9 அன்று மாதா வைஷ்ணோ தேவி கோவிலுக்கு பக்தர்களை ஏற்றி சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர் மற்றும் 41 பேர் காயமடைந்தனர். பயங்கரவாதிகளின் இந்த துப்பாக்கிச் சூட்டினால் பேருந்து ஆழமான ஒரு பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

    இந்தியா

     சுமார் 50 சந்தேக நபர்கள் கைது 

    அந்த பேருந்தில் சென்ற யாத்ரீகர்கள் பெரும்பாலும் ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் டெல்லியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

    இந்த தாக்குதல் தொடர்பாக சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மத்திய உள்துறை அமைச்சகம் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றியுள்ளது.

    முன்னதாக, ஜம்மு காஷ்மீர் போலீசார் ஒரு சந்தேக நபரின் ஓவியத்தை வெளியிட்டனர்.

    மேலும் சம்பந்தப்பட்டவர்கள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக நம்பப்படும் மூன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தான், மே 4 அன்று பூஞ்ச் ​​நகரில் நடந்த இந்திய விமானப்படை (IAF) கான்வாய் மீதான தாக்குதலையும் நடத்தினர் என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜம்மு காஷ்மீர்
    பயங்கரவாதம்

    சமீபத்திய

    லாகூரில் நடந்த விபத்தில் LeT இணை நிறுவனர் படுகாயம்; ISI பாதுகாப்பில் மருத்துவமனையில் சிகிச்சை லஷ்கர்-இ-தொய்பா
    விவாகரத்து வழக்கில் திருப்பம்: நடிகர் ஜெயம் ரவியிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கோரிய ஆர்த்தி விவாகரத்து
    சத்தீஸ்கர்: பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 27 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர் மாவோயிஸ்ட்
    சென்னையில் போக்குவரத்து அபராதங்களுக்கு புதிய கட்டுப்பாடு: 5 விதிமீறல்களுக்கு மட்டும் அபராதம் சென்னை

    ஜம்மு காஷ்மீர்

    ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது குறித்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு உச்ச நீதிமன்றம்
    ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது சட்டப்படி செல்லும்-உச்சநீதிமன்றம் தீர்ப்பு உச்ச நீதிமன்றம்
    ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 2024க்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்: உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    ஜம்மு காஷ்மீர் சிறப்பு தகுதி ரத்து: உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து காஷ்மீர் தலைவர்கள் கூறியது என்ன? உச்ச நீதிமன்றம்

    பயங்கரவாதம்

    பாகிஸ்தானில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி சுட்டுக்கொலை தீவிரவாதிகள்
    நாளைய உலகக் கோப்பை இறுதிப் போட்டியை நிறுத்தப்போவதாக பயங்கரவாத மிரட்டல்  ஒருநாள் உலகக்கோப்பை
    இஸ்ரேல் இசை விழாவில் ஹமாஸ் தாக்குதல் நடத்திய பயங்கரமான காட்சிகள் வெளியானது இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்தது இஸ்ரேல் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025