NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பள்ளிகளில் வாசிப்பு மன்றம் அமைக்க தலைமை செயலர் கோரிக்கை கடிதம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பள்ளிகளில் வாசிப்பு மன்றம் அமைக்க தலைமை செயலர் கோரிக்கை கடிதம் 
    பள்ளிகளில் வாசிப்பு மன்றம் அமைக்க தலைமை செயலர் கோரிக்கை கடிதம்

    பள்ளிகளில் வாசிப்பு மன்றம் அமைக்க தலைமை செயலர் கோரிக்கை கடிதம் 

    எழுதியவர் Nivetha P
    Jun 30, 2023
    05:01 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு தலைமை செயலர் வெ.இறையன்பு அவர்கள் இன்றோடு(ஜூன்.,30) தனது பதவியில் இருந்து ஓய்வுபெறுகிறார்.

    இந்நிலையில் இவர் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் க.அறிவொளி அவர்களுக்கு கோரிக்கை கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில், இந்த தலைமுறை மாணவர்கள் மின்னணு உபகரணங்களை கொண்டு அதிகம் வாசிப்பதால் புத்தகங்களை வாசிக்கும் பழக்கமானது அவர்களுக்கு வெகுவாக குறைந்து வருகிறது.

    இதன் காரணமாக அவர்களுக்கு பொது அறிவு தொடர்பான தகவல்கள் அதிகம் தெரிவதில்லை.

    அதனால் வாசிப்பு பழக்கத்தினை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு பள்ளியிலும் வாசிப்போர் மன்றம் ஒன்றினை அமைக்க வேண்டும்.

    அந்த மன்றத்தில் ஒவ்வொரு மாதமும் மாணவர்கள் படித்த புத்தகங்கள் குறித்து பேசவும் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று எழுதியுள்ளார் என்று கூறப்படுகிறது.

    கடிதம் 

    தமிழகத்தின் புதிய தலைமை செயலர் நியமனம் 

    மேலும் அதில், இது போன்ற மன்றங்கள் அமைப்பதன் மூலம் வாசிப்பு பழக்கம் மேம்படுவதுடன் மாணவர்கள் தகவல் தொடர்பிலும் சிறந்து விளங்க முடியும்.

    சிறந்த முறையில் நூலினை மதிப்புரை செய்யும் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்குவதோடு, இதில் பங்கேற்கும் மாணவர்கள் அனைவருக்கும் நல்ல புத்தகங்களை வழங்கி ஊவிக்கலாம் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

    தமிழக தலைமை செயலராக இருந்த இறையன்பு 60 வயது பூர்த்தியடைந்து இன்றோடு ஓய்வுபெறும் நிலையில், மாணவர்கள் மத்தியில் வாசிக்கும் பழக்கத்தினை அதிகரிக்க இப்படியொரு கோரிக்கையினை பள்ளிக்கல்வித்துறை இயக்குனருக்கு கடிதம் மூலம் வைத்துள்ளார்.

    இதனிடையே தமிழகத்தின் புதிய தலைமை செயலராக சிவ்தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பள்ளிக்கல்வித்துறை
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    பள்ளிக்கல்வித்துறை

    தமிழகத்தில் முன்கூட்டியே பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ்  தமிழ்நாடு
    தமிழக பள்ளிகள் திறப்பு - ஜூன் 7ம் தேதி சிறப்பு பஸ்கள் இயக்கம்  தமிழ்நாடு
    12ம் வகுப்பு தேர்வின் விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடி - அதிர்ச்சி தகவல்  தமிழ்நாடு
    சென்னையில் 2வது சர்வதேச புத்தக கண்காட்சி - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு  புத்தக கண்காட்சி

    தமிழ்நாடு

    அறுவை சிகிச்சை நிறைவு: அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது சென்னை
    அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு  செந்தில் பாலாஜி
    தமிழகத்தில் 500 சில்லறை மதுபான கடைகள் மூடப்படும் - டாஸ்மாக் நிர்வாகம்  டாஸ்மாக்
    தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் வானிலை அறிக்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025