NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உத்தரகாண்ட் மீட்பு பணி: கைகளால் துளையிட தொடங்கினர் 'எலி துளை' சுரங்கத் தொழிலாளர்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உத்தரகாண்ட் மீட்பு பணி: கைகளால் துளையிட தொடங்கினர் 'எலி துளை' சுரங்கத் தொழிலாளர்கள்
    நேற்று மாலை 7 மணியளவில் 'எலி துளை' சுரங்கம் தோண்டும் தொழிலாளர்கள் மீட்பு பணியில் இணைந்தனர்

    உத்தரகாண்ட் மீட்பு பணி: கைகளால் துளையிட தொடங்கினர் 'எலி துளை' சுரங்கத் தொழிலாளர்கள்

    எழுதியவர் Sindhuja SM
    Nov 28, 2023
    08:12 am

    செய்தி முன்னோட்டம்

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காஷி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்க நேற்று மாலை கையால் கிடைமட்ட துளையிடும் பணி தொடங்கியது.

    அந்த பகுதியில் துளையிட்டு கொண்டிருந்த அமெரிக்க ஆஜர் இயந்திரத்தின் பிளேடுகள் உடைந்து இடிபாடுகளில் சிக்கிக்கொண்டன.

    இதனால் மீட்பு பணிகள் தாமதமானது. எனினும், சிக்கிக்கொண்ட பிளேடுகள் நேற்று அகற்றப்பட்டதை அடுத்து, நேற்று மாலை 7 மணியளவில் 'எலி துளை' சுரங்கம் தோண்டும் தொழிலாளர்களின் உதவியுடன் இயந்திரங்கள் இல்லாமல் கைகளால் துளையிடும் பணி தொடங்கியது.

    "எலி சுரங்கத் தொழிலாளர்கள்" என்பவர்கள் நிலக்கரி பிரித்தெடுக்கும் ஒரு பழமையான முறையை கையாண்டு குறுகிய துளைகளை தோண்டும் தொழிலாளர்கள் ஆவர்.

    டிவுல்ட்வ்

    களத்தில் இறங்கினர் 24 எலி சுரங்கத் தொழிலாளர்கள் 

    இதற்கிடையில், சுரங்கபாதையின் உச்சியில் இருந்து தோண்டப்பட்டு வந்த செங்குத்து துளையிடலும் ஏற்கனவே 36 மீட்டருக்கு முன்னேறியுள்ளது.

    மேலும், உச்சியில் இருந்தும் பக்கவாட்டில் இருந்தும் கைகளால் துளையிடும் பணியும் தற்போது தொடங்கியுள்ளது.

    இதற்கு முன்பு நடந்து வந்த அனைத்து வகையான மீட்பு பணிகளும் தோல்வியடைந்ததை அடுத்து, கைகளால் துளையிடும் பணிக்கு அதிகாரிகள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

    24 எலி சுரங்கத் தொழிலாளர்கள் 24 மணிநேரமும் உழைத்து கையால் இடிபாடுகளை அகற்றுவார்கள் என்று உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது. மூன்று ஷிப்டுகளில் இந்த தொழிலாளர்கள் வேலை செய்ய இருக்கிறார்கள்.

    கைகளால் துளையிடும் பணி முடிவதற்குள் சேதமடைந்த அமெரிக்க ஆஜர் இயந்திரம் பழுப்பார்க்கப்பட்டுவிட்டால், 800-மிமீ அகலமுள்ள குழாய்கள் உள்ளே செலுத்தப்பட்டு, அதன் மூலம் தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரகாண்ட்
    இந்தியா

    சமீபத்திய

    மீதமுள்ள எஸ்-400 ஏவுகணை அமைப்புகள் 2026க்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும்; ரஷ்யா அறிவிப்பு ரஷ்யா
    ChatGPT பயன்பாட்டில் இந்தியா முதலிடம்! ஓபன்ஏஐ
    மாம்பழம் நல்லதுதான், ஆனால் இந்த உணவுகளோடு சேர்த்து சாப்பிடக் கூடாது; எச்சரிக்கும் சுகாதார நிபுணர்கள் உடல் ஆரோக்கியம்
    அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் தென்னாப்பிரிக்க வீரர் ஹென்ரிச் கிளாசென் ஓய்வு அறிவிப்பு தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி

    உத்தரகாண்ட்

    ஜோஷிமத்: அரசாங்க கணக்கெடுப்பிற்கு மாற்று கருத்து தெரிவிக்கும் மக்கள் இந்தியா
    ஜோஷிமத் தீர்வுத் திட்டத்தைச் சமர்பித்தனர் உத்தரகாண்டின் சாமோலி அதிகாரிகள் இந்தியா
    உத்தரகாண்டில் பெண் விவசாயிகள் கொண்டு இயங்கும் வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனம் இந்தியா
    நைனிடால், முசோரியில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அதிக சேதம் ஏற்படும் இந்தியா

    இந்தியா

    முன்னாள் கடற்படை வீரர்களின் மரண தண்டனைக்கு எதிரான இந்தியாவின் மேல்முறையீட்டை கத்தார் ஏற்றது கத்தார்
    26 வயது இந்திய பிஹெச்டி மாணவர் அமெரிக்காவில் காரில் சுட்டுக்கொலை அமெரிக்கா
    சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் சாம் ஆல்ட்மேனை வைத்து 'நம்ம யாத்ரி' விளம்பர நோட்டிஃபிகேஷன் பெங்களூர்
    இனி 12ம் வகுப்பில் அறிவியல் பாடங்களை படிக்கவில்லை என்றாலும் மருத்துவப் படிப்பில் சேரலாம்! மருத்துவம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025