NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ரயிலை காணவில்லை: 90 கண்டைனர்களை ஏற்றி சென்ற கூட்ஸ் ரயிலை காணவில்லை
    ரயிலை காணவில்லை: 90 கண்டைனர்களை ஏற்றி சென்ற கூட்ஸ் ரயிலை காணவில்லை
    இந்தியா

    ரயிலை காணவில்லை: 90 கண்டைனர்களை ஏற்றி சென்ற கூட்ஸ் ரயிலை காணவில்லை

    எழுதியவர் Sindhuja SM
    February 14, 2023 | 06:46 pm 1 நிமிட வாசிப்பு
    ரயிலை காணவில்லை: 90 கண்டைனர்களை ஏற்றி சென்ற கூட்ஸ் ரயிலை காணவில்லை
    கடைசியாக இந்த ரயில் கசரா என்ற ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ஓம்பர்மலியில் நின்றதாக FOISஇல் பதிவாகி இருக்கிறது.

    நாக்பூர்-மும்பை கூட்ஸ் ரயில் ஒன்று 14 நாட்களுக்கு மேலாகியும் எங்கு சென்றது என்று தெரியாததால் அது தலைப்பு செய்தி ஆகி இருக்கிறது. சில நாட்களுக்கு முன் ரயில் தண்டவாளங்கள் காணாமல் போனது என்ற செய்தி வெளியாகி இருந்தது. அப்போது, அந்த தண்டவாளங்களை பீகாரை சேர்ந்த இருவர் திருடி விற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. அந்த வரிசையில் தற்போது காணாமல் போயிருப்பது தண்டவாளம் அல்ல. தண்டவாளத்தில் போகும் ரயிலையே காணவில்லையாம். அந்த ரயிலில் ஏற்றுமதிக்கு எடுத்து செல்லப்பட்ட பல கோடி மதிப்பிலான பொருட்கள் இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி நாக்பூரில் இருந்து கிளம்பிய அந்த ரயில், 14 நாட்கள் ஆகியும் மும்பையை சென்றடையவில்லை.

    ரயிலை பற்றிய பிற விவரங்கள்

    நாக்பூரில் இருந்து மும்பை செல்ல வேண்டிய ரயில்(எண்-PJD100201), பிப்ரவரி 1ஆம் தேதி மிஹான் இன்லேண்ட் கண்டைனர் டிப்போவில்(ICD) இருந்து கிளம்பியது. இது 4-5 நாட்களுக்குள் மும்பையில் உள்ள JNPTக்கு சென்றடைந்திருக்க வேண்டும். ஆனால், 14 நாட்களுக்கு மேலாகியும் அது அங்கு சென்றடையவில்லை. மேலும், அது எங்கிருக்கிறது என்ற தகவலும் கிடைக்கவில்லை. அது கடைசியாக கசரா என்ற ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ஓம்பர்மலியில் நின்றதாக FOISஇல் பதிவாகி இருக்கிறது. FOIS என்பது ரேக்குகளின் இயக்கத்தைக் கண்காணிப்பதற்கு அமைக்கப்பட்ட கணினியாலான அமைப்பாகும். கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்(CONCOR)இன் தலைமை மேலாளர் சந்தோஷ் குமார் சிங், நேற்று(பிப் 13) மாலை இந்த தகவலை உறுதி செய்தார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    மும்பை
    ரயில்கள்

    இந்தியா

    அதானி குழும பிரச்சனைகளைப் பற்றி பேசிய அமித்ஷா அமித்ஷா
    விற்பனைக்கு வந்த OnePlus 11 5ஜி - வாங்க 5 முக்கிய காரணங்கள் என்ன? தொழில்நுட்பம்
    பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை ஆய்வு: பொங்கி எழும் எதிர்க்கட்சியினர் மோடி
    பிபிசி அலுவலகங்களில் ரெய்டு: மொபைல்,லேப்டாப்கள் பறிமுதல் நரேந்திர மோடி

    மும்பை

    IIT பாம்பேயில் மாணவர் உயிரிழப்பு: சாதிய பாகுபாடுகளால் தற்கொலை செய்து கொண்டாரா இந்தியா
    கூகுள் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - ஒருவர் கைது! கூகுள்
    மும்பை-டெல்லி விரைவு சாலையின் ஒரு பகுதியை திறந்து வைத்தார் பிரதமர் மோடி டெல்லி
    தங்கப் பல்லை வைத்து 15 வருடங்களுக்கு பிறகு திருடனை பிடித்த போலீஸ் இந்தியா

    ரயில்கள்

    இந்தியாவின் ஆமை வேக ரயில் இதுதான்! 46 கிமீ பயணிக்க 5 மணிநேரம் இந்தியா
    சென்னையில் மீண்டும் ட்ராம் ரயில்களுக்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு சென்னை
    இனி வாட்ஸ்அப் மூலம் இரயிலில் உணவு ஆர்டர் செய்யலாம்! எப்படி தெரியுமா? வாட்ஸ்அப்
    பிரதமர் மோடி 9 மற்றும் 10வது வந்தே பாரத் ரயில்களை பிப்ரவரி 10ம் தேதி துவக்கி வைக்கிறார் வந்தே பாரத்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023