NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ரயிலை காணவில்லை: 90 கண்டைனர்களை ஏற்றி சென்ற கூட்ஸ் ரயிலை காணவில்லை
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரயிலை காணவில்லை: 90 கண்டைனர்களை ஏற்றி சென்ற கூட்ஸ் ரயிலை காணவில்லை
    கடைசியாக இந்த ரயில் கசரா என்ற ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ஓம்பர்மலியில் நின்றதாக FOISஇல் பதிவாகி இருக்கிறது.

    ரயிலை காணவில்லை: 90 கண்டைனர்களை ஏற்றி சென்ற கூட்ஸ் ரயிலை காணவில்லை

    எழுதியவர் Sindhuja SM
    Feb 14, 2023
    06:46 pm

    செய்தி முன்னோட்டம்

    நாக்பூர்-மும்பை கூட்ஸ் ரயில் ஒன்று 14 நாட்களுக்கு மேலாகியும் எங்கு சென்றது என்று தெரியாததால் அது தலைப்பு செய்தி ஆகி இருக்கிறது.

    சில நாட்களுக்கு முன் ரயில் தண்டவாளங்கள் காணாமல் போனது என்ற செய்தி வெளியாகி இருந்தது. அப்போது, அந்த தண்டவாளங்களை பீகாரை சேர்ந்த இருவர் திருடி விற்றதாக குற்றம்சாட்டப்பட்டது.

    அந்த வரிசையில் தற்போது காணாமல் போயிருப்பது தண்டவாளம் அல்ல. தண்டவாளத்தில் போகும் ரயிலையே காணவில்லையாம்.

    அந்த ரயிலில் ஏற்றுமதிக்கு எடுத்து செல்லப்பட்ட பல கோடி மதிப்பிலான பொருட்கள் இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி நாக்பூரில் இருந்து கிளம்பிய அந்த ரயில், 14 நாட்கள் ஆகியும் மும்பையை சென்றடையவில்லை.

    நாக்பூர்

    ரயிலை பற்றிய பிற விவரங்கள்

    நாக்பூரில் இருந்து மும்பை செல்ல வேண்டிய ரயில்(எண்-PJD100201), பிப்ரவரி 1ஆம் தேதி மிஹான் இன்லேண்ட் கண்டைனர் டிப்போவில்(ICD) இருந்து கிளம்பியது.

    இது 4-5 நாட்களுக்குள் மும்பையில் உள்ள JNPTக்கு சென்றடைந்திருக்க வேண்டும். ஆனால், 14 நாட்களுக்கு மேலாகியும் அது அங்கு சென்றடையவில்லை. மேலும், அது எங்கிருக்கிறது என்ற தகவலும் கிடைக்கவில்லை.

    அது கடைசியாக கசரா என்ற ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ஓம்பர்மலியில் நின்றதாக FOISஇல் பதிவாகி இருக்கிறது.

    FOIS என்பது ரேக்குகளின் இயக்கத்தைக் கண்காணிப்பதற்கு அமைக்கப்பட்ட கணினியாலான அமைப்பாகும்.

    கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்(CONCOR)இன் தலைமை மேலாளர் சந்தோஷ் குமார் சிங், நேற்று(பிப் 13) மாலை இந்த தகவலை உறுதி செய்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மும்பை
    ரயில்கள்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்காக இந்தியாவில் உளவு பார்த்ததாக பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது யூடியூபர்
    ரவி மோகன் குற்றச்சாட்டுகளை மறுத்து அறிக்கை வெளியிட்ட மாமியார் சுஜாதா விஜயகுமார் ரவி
    அதிக கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பதில் இவ்ளோ நன்மைகள் இருக்கா? நாம் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியவை கடன்
    2025 அவெனிஸ் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது சுஸூகி; விலை எவ்ளோ தெரியுமா? சுஸூகி

    இந்தியா

    உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடியை நம்பி இருக்கிறதா அமெரிக்கா உக்ரைன்
    இந்தியர்கள் அனுப்பிய கடிதத்தை ட்விட்டரில் பகிர்ந்த இந்தியாவிற்கான துருக்கிய தூதர் துருக்கி
    Yamaha mt 15 பிரியர்களுக்கு செம்ம அப்டேட்! புதிய வெர்ஷன் அறிமுகம் பைக் நிறுவனங்கள்
    வாட்ஸ்அப் புதிய அப்டேட்! ஒரே நேரத்தில் 100 புகைப்படங்களை அனுப்பலாம் வாட்ஸ்அப்

    மும்பை

    செல்ல நாய்க்கு முன்னுரிமை கொடுத்து நடந்த அம்பானி வீட்டு விசேஷம் வைரல் செய்தி
    ஐஸ்வர்யா ராய் முதல் சச்சின் டெண்டுல்கர் வரை: அம்பானி வீட்டு விசேஷத்தில் பங்கு பெற்ற பிரபலங்களின் பட்டியல் ஐஸ்வர்யா ராய்
    விஸ்தாரா விமானத்தில் அரை நிர்வாணமாக தகராறு செய்த பயணி கைது இந்தியா
    மும்பையில் பொது இடத்தில் கணவன் மனைவி அடித்துக்கொள்ளும் வீடியோ: Couplegoals என்று வைரல் வைரல் செய்தி

    ரயில்கள்

    சுமூகமான ரயில் பயணத்திற்கு இந்த விதிகளை பின்பற்றவும்: IRCTC அறிவிப்பு பயணம்
    ரயிலில் அனுப்பப்படும் பார்ஸல்கள் இனி உங்கள் இல்லம் தேடி வரப்போகிறது பயனர் பாதுகாப்பு
    புதிய பொலிவுடன் பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையம் புதுப்பிப்பு
    பாம்பன் ரயில் தூக்குப்பாலத்தில் கோளாறு காரணமாக ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் நிறுத்தம் தமிழ்நாடு செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025