NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்பட்ட இந்திய தொலைத்தொடர்புச் சட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்பட்ட இந்திய தொலைத்தொடர்புச் சட்டம்
    மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்பட்ட இந்திய தொலைத்தொடர்புச் சட்டம்

    மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்பட்ட இந்திய தொலைத்தொடர்புச் சட்டம்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Dec 21, 2023
    03:15 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் அது தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட தொலைத்தொடர்பு மசோதாவாது முன்பு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து இன்று தொலைத்தொடர்பு மசோதாவானது மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மாநிலங்களவையில் குரல் வழி வாக்கெடுப்பு மூலம் இந்தச் மசோதா தற்போது தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

    முன்பு பயன்பாட்டில் இருந்த இந்திய தந்திச் சட்டம் மற்றும் கம்பியில்லா தந்திச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களுக்கு மாற்றாக இந்தப் புதிய தொலைத்தொடர்பு சட்டம் உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், OTT மற்றும் இணைய வசதியைக் கொண்டு மேற்கொள்ளப்படும் அழைப்புகள் மற்றும் சேவைகளையும் இந்தத் தொடலைத்தொடர்பு சட்டத்தின் கீழ் கொண்டி வந்திருக்கிறது மத்திய அரசு.

    இந்தியா

    தொலைத்தொடர்பு சட்டம் (2023): 

    இதுவரை தொலைத்தொடர்பு சேவைகளை நிர்வாகிப்பது மற்றும் அது தொடர்பான விஷயங்களைக் கையாளும் உட்சபட்ச அதிகாரத்தைக் டிராய் (Telecom Regulatory Authority of India) அமைப்பே கொண்டிருந்தது.

    தற்போது தாக்கல் செய்யப்பட்டிருக்கும் புதிய தொலைத்தொடர்பு சட்டத்தில் டிராயின் அதிகாரங்களைக் குறைத்து, அதற்குப் பதிலாக கூடுதல் அதிகாரத்தை மத்திய அரசு பெற வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.

    எந்த ஒரு தொலைத்தொடர்பு சேவைக்கும், நுழைவுக் கட்டணம், உரிமக் கட்டணம் மற்றும் அபராதக் கட்டணம் ஆகியவற்றை நீக்கும் அதிகாரத்தைப் புதிய தொலைத்தொடர்பு சட்டத்தின் மூலம் பெறுகிறது மத்திய அரசு.

    இதனை சந்தைப் போட்டி, தொலைத்தொடர்பு சேவை நீட்டிப்பு, வாடிக்கையாளர் அல்லது பயனாளர் நலன் மற்றும் தேசப் பாதுகாப்பு ஆகிய காரணங்களை முன்வைத்து மத்திய அரசு மேற்கொள்ள முடியும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மத்திய அரசு

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    இந்தியா

    இந்தியாவில் பாரத் NCAP தரச்சோதனைத் திட்டத்தின் கீழ் சோதனைகள் தொடங்கியது கார்
    மாருதியின் முதல் கார் மாருதி 800-க்கு வயது 40 கார்
    2023 Year Roundup- விருதுகள் வென்ற இந்திய சினிமாக்கள் ஒரு பார்வை திரைப்பட விருது
    2023-ல் நிஃப்டி 50 முதலீட்டு பெருக்கத்தை எட்டாத தங்க முதலீடு  தங்கம் வெள்ளி விலை

    மத்திய அரசு

    "நான் கர்பா செய்யும் வீடியோவைப் பார்த்தேன், டீப்ஃபேக்குகள் மிகப்பெரிய அச்சுறுத்தல்": பிரதமர் மோடி பிரதமர் மோடி
    உத்தரகாண்ட் சுரங்கபாதையில் சிக்கியுள்ள 41 பேரை மீட்க இன்னும் 4-5 நாட்கள் ஆகும் என்று தகவல் உத்தரகாண்ட்
    தமிழகத்திற்கான சிறந்த செயல்திறன் விருது - இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார் தமிழ்நாடு
    17,000 கோடி ரூபாய் மதிப்பில் புதிய எரிவாயு சேமிப்புக் கிடங்கைக் கட்டமைக்க திட்டமிடும் இந்தியா இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025