NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தீ விபத்து ஏற்பட்ட ராஜ்கோட் கேமிங் மண்டலத்திற்கு தீயணைப்பு துறை அனுமதி வழங்கவில்லை
    அடுத்த செய்திக் கட்டுரை
    தீ விபத்து ஏற்பட்ட ராஜ்கோட் கேமிங் மண்டலத்திற்கு தீயணைப்பு துறை அனுமதி வழங்கவில்லை

    தீ விபத்து ஏற்பட்ட ராஜ்கோட் கேமிங் மண்டலத்திற்கு தீயணைப்பு துறை அனுமதி வழங்கவில்லை

    எழுதியவர் Sindhuja SM
    May 26, 2024
    12:20 pm

    செய்தி முன்னோட்டம்

    குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள கேமிங் மண்டலத்தில், நேற்று ஏற்பட்ட தரும் தீ விபத்தில் 20 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

    இந்நிலையில், அந்த கேமிங் மண்டலம் தீயணைப்புத் துறையிடமிருந்து நோ ஆப்ஜெக்டிவ் சான்றிதழ்(என்ஓசி) பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.

    மேலும், அந்த கேமிங் மண்டலத்தில் நுழைவு மற்றும் வெளியேறுதல் ஆகியவற்றுக்கு தேவையான இரண்டு வழிகள் வைக்கப்படவில்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    அந்த கேமிங் மண்டலத்தில் நுழைவு மற்றும் வெளியேறுதலுக்கு ஒரே ஒரு வழி மட்டுமே இருந்திருக்கிறது.

    கூடுதலாக, அந்த கேமிங் மண்டலத்தில் பல்வேறு பாக்கெட்டுகளில் ஆயிரக்கணக்கான லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் சேமிக்கப்பட்டிருந்தது. தீ விபத்து ஏற்படுவதற்கு இதுவும் பெரும் காரணமாக இருந்திருக்கலாம்.

    குஜராத்

    மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் 

    இந்த தீ விபத்தில் இதுவரை 9 குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    அடையாளம் காண முடியாத அளவுக்கு உயிரிழந்தவர்களின் உடல்கள் கருகிவிட்டதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் டிஎன்ஏ மாதிரிகள் அடையாளம் காண சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் சிறப்பு புலனாய்வுக் குழு(எஸ்ஐடி) உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த குஜராத் அரசு அமைத்த 5 பேர் கொண்ட எஸ்ஐடி 72 மணி நேரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    அந்த குழு நேற்று இரவு ராஜ்கோட்டை அடைந்து உள்ளூர் நிர்வாகத்துடன் ஒரு சந்திப்பை நடத்தியது.

    மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என ராஜ்கோட் மாவட்ட நீதிபதி தெரிவித்தார். இருப்பினும், சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    குஜராத்
    தீ விபத்து

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    குஜராத்

    பலாத்காரத்தால் கர்ப்பமான பெண்: கருவை கலைக்கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதியை வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    திருச்சி-குஜராத் செல்லும் 'ஹம்சஃபர்' ரயிலில் திடீர் தீ விபத்து திருச்சி
    சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த குஜராத் மருத்துவர்கள் இந்தியா
    கிரிக்கெட் ரசிகர்கள் இடையே சர்ச்சையை கிளப்பிய 'மேக் மை ட்ரிப்' விளம்பரம் இந்தியா

    தீ விபத்து

    சேலம் அரசு மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து  சேலம்
    பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள மாலில் தீ விபத்து: 11 பேர் உயிரிழப்பு  பாகிஸ்தான்
    குஜராத் மாநிலம் சூரத் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - 7 பேர் உடல்கள் மீட்பு  குஜராத்
    அண்ணனூர் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் திடீர் தீ விபத்து  காவல்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025