NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் சாலையில் தேங்கிய மழைநீர் - போக்குவரத்து பாதிப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் சாலையில் தேங்கிய மழைநீர் - போக்குவரத்து பாதிப்பு 
    சென்னையில் சாலையில் தேங்கிய மழைநீர் - போக்குவரத்து பாதிப்பு

    சென்னையில் சாலையில் தேங்கிய மழைநீர் - போக்குவரத்து பாதிப்பு 

    எழுதியவர் Nivetha P
    Jun 19, 2023
    11:23 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலத்தில் கத்திரி வெயில் நிறைவுற்ற நிலையிலும் வெப்பம் தணியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

    இந்நிலையில் ஜூன் 18ம் தேதி தமிழகத்தில் பெய்யக்கூடும் என்று வானிலை அறிக்கை முன்னதாக தெரிவித்திருந்தது.

    அதன்படி நேற்று(ஜூன்.,18) முதல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வந்த நிலையில், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் கனமழை விடாமல் பெய்து வருகிறது.

    இதனிடையே, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ள காரணத்தினால் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அண்மையில் அறிவித்துள்ளது.

    இதனையடுத்து மழை தொடர்ந்து பெய்து வருவதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(ஜூன்.,19)விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    மழை 

    சென்னையின் முக்கிய சாலைகளில் தேங்கிய மழைநீர் 

    சென்னையில் கிண்டி, மாம்பலம், சைதாப்பேட்டை, எழும்பூர், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், வேளச்சேரி, ஈக்காட்டுத்தாங்கல், மீனம்பாக்கம், குரோம்பேட்டை, போன்ற பல்வேறு இடங்களில் பலத்த சூறைக்காற்றுடன் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

    இதனால் சாலைகளில் மழை நீர் அதிகளவு தேங்கியுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ்சுரங்கபாதையில் மழைநீர் தேங்கியுள்ளது.

    வேப்பேரி சாலையின் இருபுறமும் மழைநீர் தேங்கியுள்ளது.

    தாம்பரம் சுரங்க பாலங்களில் போக்குவரத்து பாதிப்புகளை தவிர்க்க அதிகாலை 2.30 மணிமுதல் ஊழியர்கள் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

    அண்ணாசாலையில் உள்ள தேங்கிய மழைநீரை அகற்றும் பணியும் தீவிரமாக நடக்கிறது.

    சென்னையின் முக்கிய சாலைகளில் இது போன்று மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    வானிலை அறிக்கை

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    தமிழ்நாடு

    தமிழகத்தில் 2வது வந்தே பாரத் ரயில் இயக்க முடிவு  வந்தே பாரத்
    தமிழ்நாடு டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணி - ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் மு.க ஸ்டாலின்
    பைக் டாக்சிகளுக்கு அனுமதி இல்லை - தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர்  பைக்
    பிப்பர்ஜாய் புயல், பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கான மழை எச்சரிக்கை இந்தியா

    வானிலை அறிக்கை

    9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்  சென்னை
    மோக்கா புயல்: மே 14ஆம் தேதி வரை மீனவர்களுக்கு எச்சரிக்கை  தமிழ்நாடு
    தென் கிழக்கு வங்கக்கடலில் வலுப்பெற்ற 'மோக்கா' புயல்  தமிழ்நாடு
    மோக்கா புயல் இன்றிரவு தீவிரமான புயலாக மாறும்: தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025