தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு மாநிலத்தில் கத்திரி வெயில் நிறைவுற்ற நிலையிலும் வெப்பம் தணியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் ஜூன் 18ம் தேதி தமிழகத்தில் பெய்யக்கூடும் என்று வானிலை அறிக்கை முன்னதாக தெரிவித்திருந்தது. அதன்படி நேற்று(ஜூன்.,18) முதல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வந்த நிலையில், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து விடாமல் பெய்து வருகிறது. இந்நிலையில் தற்போது வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவலின் படி, அடுத்த 3 மணிநேரத்தில் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், தேனி, தென்காசி, விருதுநகர், திண்டுக்கல், ராணிப்பேட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.