NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அவதூறு வழக்கு: ராகுல் காந்திக்கு ஏப்ரல் 13 வரை ஜாமீன் நீட்டிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    அவதூறு வழக்கு: ராகுல் காந்திக்கு ஏப்ரல் 13 வரை ஜாமீன் நீட்டிப்பு
    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று(ஏப் 3) ஜாமீன் நீட்டிப்பு வழங்கியுள்ளது.

    அவதூறு வழக்கு: ராகுல் காந்திக்கு ஏப்ரல் 13 வரை ஜாமீன் நீட்டிப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Apr 03, 2023
    04:36 pm

    செய்தி முன்னோட்டம்

    மோடியின் குடும்பப்பெயர் பற்றி பேசியதற்காக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று(ஏப் 3) ஜாமீன் நீட்டிப்பு வழங்கியுள்ளது.

    மேலும், அவரது அடுத்த விசாரணை ஏப்ரல் 13 ஆம் தேதி நடக்கும் என்பதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சூரத் நீதிமன்றம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 2 வருட சிறை தண்டனை விதித்ததை அடுத்து, அவர் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கப்பட்டார்.

    பிரதமர் மோடியின் குடும்ப பெயரை பற்றி தவறாக பேசியது தொடர்பான வழக்கில் அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டது.

    இந்த வழக்கில் அவருக்கு கிடைத்த ஜாமீன் தற்போது ஏப்ரல் 13ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா

    இடைத்தேர்தலை நடத்துவதற்கு காத்திருக்கும் தேர்தல் ஆணையம்

    ராகுல் காந்தி தனது மனுவில், அவதூறு வழக்கில் தன்னை குற்றவாளி என்று அறிவித்த நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யுமாறு கோரியிருந்தார்.

    மேலும், இந்த வழக்கு முடிவுக்கு வரும் வரை தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

    மார்ச் 23 அன்று, சூரத் நீதிமன்றம் ராகுல் காந்தியை அவதூறு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.

    அப்போது அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு, தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதிக்கும் வகையில் அவரது தண்டனை 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.

    ஆனால், இதற்கிடையில், அவர் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கப்பட்டார்.

    இதனால், தற்போது காலியாக உள்ள வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தலை அறிவிப்பதற்காக நீதிமன்ற உத்தரவை எதிர்பார்த்து தேர்தல் ஆணையமும்(EC) காத்திருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ராகுல் காந்தி
    காங்கிரஸ்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    இந்தியா

    76 மருந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை: மத்திய அரசு அதிரடி மன்சுக் மாண்டவியா
    கொலை வழக்கிற்கு சாட்ஜிபிடியின் உதவியை நாடிய நீதிமன்றம்! நடந்தது என்ன? சாட்ஜிபிடி
    சட்டசபையில் ஆபாச வீடியோ பார்த்த பாஜக எம்எல்ஏ திரிபுரா
    Unacademy மீண்டும் பணிநீக்கம்: Slack-இல் ஊழியர்களுக்கு நிறுவனர் கூறியது என்ன? ஆட்குறைப்பு

    ராகுல் காந்தி

    ராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை: காஷ்மீர் போலீசார் ஜம்மு காஷ்மீர்
    ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் பனியில் சண்டையிடும் வீடியோ வைரல் ஜம்மு காஷ்மீர்
    ஊழல் நிறைந்த காங்கிரஸ் ஆட்சி : ராகுல் காந்தியை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி மோடி
    வைரல்: ராகுல் காந்தி பனிச்சறுக்கு விளையாடும் வீடியோ இந்தியா

    காங்கிரஸ்

    சில எம்.பி.க்கள் இந்த சபைக்கு அவப்பெயரை ஏற்படுத்துகின்றனர்: பிரதமர் மோடி இந்தியா
    மதுரை எய்ம்ஸ்: நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திமுக
    மற்ற கட்சிகளை விட பாஜகவின் கார்பரேட் நன்கொடை 7 மடங்கு அதிகம்: ADR பாஜக
    திரிபுரா வாக்கெடுப்பு: தெரிந்துகொள்ள வேண்டியவை இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025