NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அவதூறு வழக்கு: ராகுல் காந்திக்கு ஏப்ரல் 13 வரை ஜாமீன் நீட்டிப்பு
    அவதூறு வழக்கு: ராகுல் காந்திக்கு ஏப்ரல் 13 வரை ஜாமீன் நீட்டிப்பு
    1/2
    இந்தியா 1 நிமிட வாசிப்பு

    அவதூறு வழக்கு: ராகுல் காந்திக்கு ஏப்ரல் 13 வரை ஜாமீன் நீட்டிப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Apr 03, 2023
    04:36 pm
    அவதூறு வழக்கு: ராகுல் காந்திக்கு ஏப்ரல் 13 வரை ஜாமீன் நீட்டிப்பு
    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று(ஏப் 3) ஜாமீன் நீட்டிப்பு வழங்கியுள்ளது.

    மோடியின் குடும்பப்பெயர் பற்றி பேசியதற்காக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று(ஏப் 3) ஜாமீன் நீட்டிப்பு வழங்கியுள்ளது. மேலும், அவரது அடுத்த விசாரணை ஏப்ரல் 13 ஆம் தேதி நடக்கும் என்பதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சூரத் நீதிமன்றம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 2 வருட சிறை தண்டனை விதித்ததை அடுத்து, அவர் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கப்பட்டார். பிரதமர் மோடியின் குடும்ப பெயரை பற்றி தவறாக பேசியது தொடர்பான வழக்கில் அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு கிடைத்த ஜாமீன் தற்போது ஏப்ரல் 13ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    2/2

    இடைத்தேர்தலை நடத்துவதற்கு காத்திருக்கும் தேர்தல் ஆணையம்

    ராகுல் காந்தி தனது மனுவில், அவதூறு வழக்கில் தன்னை குற்றவாளி என்று அறிவித்த நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யுமாறு கோரியிருந்தார். மேலும், இந்த வழக்கு முடிவுக்கு வரும் வரை தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். மார்ச் 23 அன்று, சூரத் நீதிமன்றம் ராகுல் காந்தியை அவதூறு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. அப்போது அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு, தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதிக்கும் வகையில் அவரது தண்டனை 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால், இதற்கிடையில், அவர் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கப்பட்டார். இதனால், தற்போது காலியாக உள்ள வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தலை அறிவிப்பதற்காக நீதிமன்ற உத்தரவை எதிர்பார்த்து தேர்தல் ஆணையமும்(EC) காத்திருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    ராகுல் காந்தி
    காங்கிரஸ்

    இந்தியா

    இந்தியாவில் ஒரே நாளில் 3,641 பேருக்கு கொரோனா: 11 பேர் உயிரிழப்பு கொரோனா
    45 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கிய மெட்டா - காரணம் என்ன? வாட்ஸ்அப்
    கோழிக்கோடு ரயிலில் சக பயணியை தீ வைத்து எரித்த நபர்: 3 உடல்கள் கண்டெடுப்பு கேரளா
    ஸ்பெயின் மாஸ்டர்ஸ் 2023 : இறுதிப் போட்டியில் பி.வி.சிந்து தோல்வி இந்திய அணி

    ராகுல் காந்தி

    2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி இன்று மேல்முறையீடு காங்கிரஸ்
    ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பிய பாட்னா நீதிமன்றம் காங்கிரஸ்
    ராகுல் காந்தியை எதிர்த்து இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கும் லலித் மோடி இந்தியா
    ராகுல் காந்தி விவகாரம்; இடைதேர்தலை நடத்த அவசரம் இல்லை: தேர்தல் ஆணையம் இந்தியா

    காங்கிரஸ்

    மேல தாளம் முழங்க, காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவை வரவேற்க தயாராகும் தொண்டர்கள் இந்தியா
    காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு நாளை விடுதலை இந்தியா
    காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலம் தேறி வருவதாக அறிக்கை ஈரோடு
    கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிப்பு இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023