NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 2 நாட்களில் மணிப்பூருக்குள் நுழைந்த 718 மியான்மர் நாட்டவர்கள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    2 நாட்களில் மணிப்பூருக்குள் நுழைந்த 718 மியான்மர் நாட்டவர்கள் 
    718 புதிய அகதிகள் இந்திய-மியான்மர் எல்லையைத் தாண்டி மணிப்பூருக்குள் நுழைந்தனர்

    2 நாட்களில் மணிப்பூருக்குள் நுழைந்த 718 மியான்மர் நாட்டவர்கள் 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 25, 2023
    10:13 am

    செய்தி முன்னோட்டம்

    ஜூலை-22 மற்றும் 23ஆம் தேதிகளில் மியான்மரை சேர்ந்த 718 பேர் சரியான ஆவணங்கள் எதுவும் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர் என்று அசாம் ரைபிள்ஸ் எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

    இது குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கும் படி அசாம் ரைபிள்ஸிடம் மணிப்பூர் அரசாங்கம் கோரியுள்ளதாக உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    2 மாதங்களாக மணிப்பூரில் நடந்து வரும் இனக்கலவரத்திற்கு மத்தியில், இரண்டு நாட்களில் 700 மியான்மர் நாட்டவர்கள் எவ்வாறு இந்தியாவிற்குள் நுழைந்தார்கள் என்று அசாம் ரைபிள்ஸிடம் உள்துறை அமைச்சகம் கேள்வி எழுப்பியுள்ளது.

    இந்தியாவுக்குள் நுழைந்த புதிய மியான்மர் நாட்டவர்களிடம் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் இருந்ததா என்பதை அறிய வழி இல்லை என்றும் மாநில அரசு கவலை தெரிவித்துள்ளது.

    து

    அகதிகளின் பயோமெட்ரிக்ஸ் மற்றும் புகைப்படங்களை பத்திரமாக வைத்திருக்க உத்தரவு 

    மியான்மார் நாட்டை சேர்ந்த கம்பட்டில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக 718 புதிய அகதிகள் இந்திய-மியான்மர் எல்லையைத் தாண்டி ஜூலை 23ஆம் தேதி சந்தேல் மாவட்டம் வழியாக மணிப்பூருக்குள் நுழைந்ததாக 28 செக்டர் அசாம் ரைபிள்ஸ் தெரிவித்துள்ளது என்று மணிப்பூர் உள்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையை நேற்று வெளியிட்டது.

    விசா மற்றும் பயண ஆவணங்கள் இல்லாமல் மியான்மர் நாட்டவர்கள் மணிப்பூருக்குள் நுழைவதைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு எல்லைப் பாதுகாப்புப் படையான அசாம் ரைபிள்ஸிடம் ஏற்கனவே தெளிவாகத் தெரிவித்திருந்ததாக மணிப்பூர் அரசு கூறியுள்ளது.

    மேலும், இந்தியாவிற்குள் நுழைந்த மியான்மர் நாட்டினரின் பயோமெட்ரிக்ஸ் மற்றும் புகைப்படங்களை பத்திரமாக வைத்திருக்குமாறு சந்தேல் மாவட்ட துணை ஆணையர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளருக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மணிப்பூர்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    மணிப்பூர்

    மணிப்பூர் வன்முறை: நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அமித்ஷா நடவடிக்கை  இந்தியா
    மணிப்பூர் வன்முறை: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு இந்தியா
    மணிப்பூர் வன்முறையை விசாரிக்க குழு அமைக்கப்படும்: அமித்ஷா  இந்தியா
    மணிப்பூர் வன்முறை: 140 ஆயுதங்கள் மாநில நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது  கலவரம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025