NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காவலர்களுடன் காலிஸ்தானி ஆதரவாளர்கள் மோதல்: என்ன நடக்கிறது அமிர்தசரஸில்
    இந்தியா

    காவலர்களுடன் காலிஸ்தானி ஆதரவாளர்கள் மோதல்: என்ன நடக்கிறது அமிர்தசரஸில்

    காவலர்களுடன் காலிஸ்தானி ஆதரவாளர்கள் மோதல்: என்ன நடக்கிறது அமிர்தசரஸில்
    எழுதியவர் Sindhuja SM
    Feb 23, 2023, 06:50 pm 1 நிமிட வாசிப்பு
    காவலர்களுடன் காலிஸ்தானி ஆதரவாளர்கள் மோதல்: என்ன நடக்கிறது  அமிர்தசரஸில்
    போராட்டத்தினால் 6 போலீசார் காயமடைந்து அஜ்னாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    காலிஸ்தானி ஆதரவு தலைவர் அம்ரித்பால் சிங்கின் நெருங்கிய உதவியாளர் லவ்பிரீத் தூஃபான் இன்று(பிப் 23) கைது செய்யப்பட்டதற்கு எதிராக மாபெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. காலிஸ்தானி என்பது சீக்கியர்களுக்காக கோரப்படும் தனி தேசமாகும். 'வாரிஸ் பஞ்சாப்-டி' தலைவரின் ஆதரவாளர்கள் வாள்கள் மற்றும் துப்பாக்கிகளை ஏந்தியபடி அமிர்தசரஸில் உள்ள அஜ்னாலா காவல் நிலையத்திற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த போலீஸ் தடுப்புகளை மீறி உள்ளே நுழைந்தனர். போராட்டத்தினால் 6 போலீசார் காயமடைந்து அஜ்னாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய 'வாரிஸ் பஞ்சாப் டி' தலைவர் அம்ரித்பால் சிங், இந்த வழக்கில் FIR அரசியல் உள்நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

    FIRஐ ரத்து செய்யாவிட்டால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்: அம்ரித்பால்

    "அரசியல் உள்நோக்கத்துடன் மட்டுமே FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் வழக்கை ரத்து செய்யாவிட்டால், அடுத்து என்ன நடந்தாலும் அதற்கு நிர்வாகமே பொறுப்பாகும். எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று நினைக்கிறார்கள், அதனால் எங்கள் பலத்தை காட்டுவது அவசியம்." என்று அவர் கூறியுள்ளார். மேலும் பேசிய சிங், கடந்த வாரம் கைது செய்யப்பட்ட தனது உதவியாளர்களில் ஒருவர் நிரபராதி என்றும் அவர் சித்திரவதை செய்யப்படுவதாகவும் கூறினார். மேலும், ஒரு மணி நேரத்திற்குள் FIRஐ ரத்து செய்யாவிட்டால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் மிரட்டினார். "காலிஸ்தானை நாங்கள் மிகவும் அமைதியான முறையில் தொடர்கிறோம். சிலர் இந்துக்களுக்கான தனி தேசத்தை கேட்கும் போது நாங்கள் ஏன் காலிஸ்தானை கேட்கக்கூடாது." என்று அவர் கூறியுள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    இந்தியா
    பஞ்சாப்

    இந்தியா

    120கிமீ செல்லும் River Indie மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்! எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    பெண்ணின் இருக்கை மீது சிறுநீர் கழித்த பேருந்து பயணி கர்நாடகா
    உணவு டெலிவரி செய்து அசத்தும் மாற்றுத்திறனாளி - வைரல் வீடியோ! கர்நாடகா
    UPI- இந்தியர்களைக் கெடுக்கிறது - இணையத்தில் வைரலாகும் ட்விட்டர் பதிவு! ட்விட்டர்

    பஞ்சாப்

    டெபாசிட் வட்டியை உயர்த்திய பஞ்சாப் நேஷனல் வங்கி! வங்கிக் கணக்கு
    லக்பீர் சிங் சந்துவைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 15 லட்சம் பரிசுத்தொகை இந்தியா
    அமிர்தசரஸ் பொற்கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு திரௌபதி முர்மு
    பிரிவினைவாதத் தலைவரை கைது செய்ய நடவடிக்கை: பஞ்சாபில் இன்டர்நெட் துண்டிப்பு இந்தியா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023