NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மனித எலும்புகளை உண்ண சொல்லி மருமகளை வற்புறுத்திய குடும்பம்: வழக்கு பதிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    மனித எலும்புகளை உண்ண சொல்லி மருமகளை வற்புறுத்திய குடும்பம்: வழக்கு பதிவு
    கணவர், மாமியார் உட்பட ஏழு நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது

    மனித எலும்புகளை உண்ண சொல்லி மருமகளை வற்புறுத்திய குடும்பம்: வழக்கு பதிவு

    எழுதியவர் Sindhuja SM
    Jan 21, 2023
    06:09 pm

    செய்தி முன்னோட்டம்

    மாந்திரீக சடங்குகளின் மூலம் மருமகளை கருத்தரிக்க செய்ய பொடிசெய்யப்பட்ட மனித எலும்புகளை வற்புறுத்தி உண்ண வைத்ததாக 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அந்தப் பெண் அளித்த புகாரை அடுத்து, புதன்கிழமை அன்று புனே போலீசார் அவரது கணவர், மாமியார், மாந்திரீகர் உட்பட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    "மூடநம்பிக்கை தடுப்புச் சட்டம் (மகாராஷ்டிரா நரபலி, மனிதாபிமானமற்ற, தீய, அகோரி நடைமுறைகள் மற்றும் மாந்திரீக தடுப்பு சட்டம், 2013) பிரிவு 3 உடன் ஐபிசியின் 498 ஏ, 323, 504, 506 ஆகியவற்றின் கீழ் ஏழு நபர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது." என்று புனே நகர காவல்துறையின் துணை போலீஸ் கமிஷனர் சுஹைல் சர்மா கூறியுள்ளார்.

    மகாராஷ்டிரா

    சுடுகாட்டிற்கு அழைத்து சென்று மாந்திரீகம் செய்த குடும்பம்

    ANI வெளியிட்ட செய்தியின் படி, அந்த பெண் இருவேறு விஷயங்களுக்கு புகாரளித்துள்ளார்.

    முதல் புகாரில், அவரது திருமணத்தின் போது(2019 இல்) ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் அடங்கிய வரதட்சணையை அவரது கணவர் குடும்பம் கேட்டதாக குற்றம் சாட்டி இருக்கிறார்.

    இரண்டாவது புகார் மனுவின்படி, போலீசார் மூடநம்பிக்கை எதிர்ப்பு மற்றும் சூனியம் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    அந்த பெண்ணை சுடுகாட்டிற்கு அழைத்து சென்று எரிந்து கிடந்த பிணங்களின் மிச்சத்தை உண்ண சொன்னதாகவும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இது போக, அமாவாசை போன்ற நாட்களில் வீட்டில் மாந்திரீக பூஜைகளை செய்ய சொல்லி வற்புறுத்தியது, அகோரி பயிற்சிகளை செய்ய வைத்தது போன்ற பல விவரங்கள் அந்த புகாரில் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    யூடியூபர், மாணவர், பாதுகாவலர் உட்பட 11 'பாகிஸ்தான் உளவாளிகள்' இதுவரை கைது பாகிஸ்தான்
    உளவு பார்க்க யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவை சோறு போட்டு வளர்த்த பாகிஸ்தான் ஹரியானா
    நடிகர் விஷால் திருமணம் செய்யவிருக்கும் நடிகை இவர்தான்! இணையத்தில் வைரலாகும் தகவல் விஷால்
    அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களின் நுழைவை எளிதாக்க கொள்கைகளை மறுசீரமைக்க மத்திய அரசு ஆலோசனை  அணுசக்தி

    இந்தியா

    ஓடும் பைக்கில் காதல் செய்த ஜோடி: வீடியோ வைரலானதால் போலீஸில் சிக்கினர் இந்தியா
    பள்ளி மாணவனை தாக்கிய பாஜக எம்பியின் மகன்: வீடியோ வைரல் வைரல் செய்தி
    கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியாகும் 25 வயது தலித் பெண்மணி இந்தியா
    ஜனவரி 19க்கான Fire MAX இலவச குறியீடுகள் - பெறுவதற்கான வழிமுறைகள்; தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025