NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மனித எலும்புகளை உண்ண சொல்லி மருமகளை வற்புறுத்திய குடும்பம்: வழக்கு பதிவு
    இந்தியா

    மனித எலும்புகளை உண்ண சொல்லி மருமகளை வற்புறுத்திய குடும்பம்: வழக்கு பதிவு

    மனித எலும்புகளை உண்ண சொல்லி மருமகளை வற்புறுத்திய குடும்பம்: வழக்கு பதிவு
    எழுதியவர் Sindhuja SM
    Jan 21, 2023, 06:09 pm 1 நிமிட வாசிப்பு
    மனித எலும்புகளை உண்ண சொல்லி மருமகளை வற்புறுத்திய குடும்பம்: வழக்கு பதிவு
    கணவர், மாமியார் உட்பட ஏழு நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது

    மாந்திரீக சடங்குகளின் மூலம் மருமகளை கருத்தரிக்க செய்ய பொடிசெய்யப்பட்ட மனித எலும்புகளை வற்புறுத்தி உண்ண வைத்ததாக 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பெண் அளித்த புகாரை அடுத்து, புதன்கிழமை அன்று புனே போலீசார் அவரது கணவர், மாமியார், மாந்திரீகர் உட்பட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். "மூடநம்பிக்கை தடுப்புச் சட்டம் (மகாராஷ்டிரா நரபலி, மனிதாபிமானமற்ற, தீய, அகோரி நடைமுறைகள் மற்றும் மாந்திரீக தடுப்பு சட்டம், 2013) பிரிவு 3 உடன் ஐபிசியின் 498 ஏ, 323, 504, 506 ஆகியவற்றின் கீழ் ஏழு நபர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது." என்று புனே நகர காவல்துறையின் துணை போலீஸ் கமிஷனர் சுஹைல் சர்மா கூறியுள்ளார்.

    சுடுகாட்டிற்கு அழைத்து சென்று மாந்திரீகம் செய்த குடும்பம்

    ANI வெளியிட்ட செய்தியின் படி, அந்த பெண் இருவேறு விஷயங்களுக்கு புகாரளித்துள்ளார். முதல் புகாரில், அவரது திருமணத்தின் போது(2019 இல்) ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் அடங்கிய வரதட்சணையை அவரது கணவர் குடும்பம் கேட்டதாக குற்றம் சாட்டி இருக்கிறார். இரண்டாவது புகார் மனுவின்படி, போலீசார் மூடநம்பிக்கை எதிர்ப்பு மற்றும் சூனியம் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த பெண்ணை சுடுகாட்டிற்கு அழைத்து சென்று எரிந்து கிடந்த பிணங்களின் மிச்சத்தை உண்ண சொன்னதாகவும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது போக, அமாவாசை போன்ற நாட்களில் வீட்டில் மாந்திரீக பூஜைகளை செய்ய சொல்லி வற்புறுத்தியது, அகோரி பயிற்சிகளை செய்ய வைத்தது போன்ற பல விவரங்கள் அந்த புகாரில் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    19 திரையரங்குகளில் வெளியீடு: சிங்கப்பூரில் சாதனை படைத்த சிம்புவின் 'பத்து தல' திரைப்படம் திரையரங்குகள்
    காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலம் தேறி வருவதாக அறிக்கை காங்கிரஸ்
    ராகுல் காந்தியை எதிர்த்து இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கும் லலித் மோடி இந்தியா
    சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் : யார் பெஸ்ட்? ஐபிஎல்

    இந்தியா

    மளமளவென உச்சத்தை தொட்ட தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள் தங்கம் வெள்ளி விலை
    ராகுல் காந்தியின் தகுதி நீக்க விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மனி உலக செய்திகள்
    பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கம் பாகிஸ்தான்
    மால்வேர் தாக்குதலில் பாதிக்கப்படும் இந்திய வங்கிகள் - அறிக்கை! தொழில்நுட்பம்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023