NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புனே பேருந்து பாலியல் வன்கொடுமை குற்றவாளி 2 நாள் தேடுதலுக்குப் பிறகு கைது 
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    புனே பேருந்து பாலியல் வன்கொடுமை குற்றவாளி 2 நாள் தேடுதலுக்குப் பிறகு கைது 
    பாலியல் வன்கொடுமை குற்றவாளி 2 நாள் தேடுதலுக்குப் பிறகு கைது

    புனே பேருந்து பாலியல் வன்கொடுமை குற்றவாளி 2 நாள் தேடுதலுக்குப் பிறகு கைது 

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 28, 2025
    09:29 am

    செய்தி முன்னோட்டம்

    புனேவின் ஸ்வர்கேட் பணிமனையின் பேருந்திற்குள் 26 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர், மகாராஷ்டிராவின் ஷிரூரில் நள்ளிரவு நடத்தப்பட்ட ஒரு பெரிய தேடுதலுக்குப் பிறகு கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

    கைது செய்யப்பட்ட குற்றவாளி தத்தாத்ரே ராம்தாஸ் காடே (37), ஷிரூரில் உள்ள ஒரு பண்ணையில் மறைந்திருந்தார்.

    நேற்று முதல், புனே காவல்துறையின் 13 குழுக்கள் அவரைத் தேடி வந்தன.

    இரவில், அவர் ஒருவரின் வீட்டிற்கு உணவருந்தச் சென்றார், அந்த நபர் உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் அளிக்கவே, அவர் கைது செய்யப்பட்டார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    விவகாரம்

    பேருந்துக்காக காத்திருந்த பெண்ணிடம் அத்துமீறிய நபர்

    செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.45 மணியளவில் ஒரு நடைமேடையில் சதாரா மாவட்டத்திற்கு பேருந்துக்காக காத்திருந்தபோது, அந்தப் பெண்ணை தத்தாத்ரே பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

    சதாராவுக்கான பேருந்து வேறொரு நடைமேடையில் வந்துவிட்டதாகக் கூறி அவர் அவளை தவறாக வழிநடத்தி, வளாகத்தில் வேறு இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த காலியான ஏசி பேருந்திற்கு அழைத்துச் சென்றுள்ளார் தத்தாத்ரே.

    பேருந்தின் உள்ளே விளக்குகள் அணைந்திருந்ததால், அந்த பெண் ஏறத் தயங்கியுள்ளார்.

    ஆனால் அது சரியான பேருந்து என்று அவளை நம்ப வைத்து, உள்ளே நுழைந்ததும், தத்தாத்ரே அவரை பின்தொடர்ந்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட அந்தப் பெண் போலீசாரிடம் தெரிவித்தார்.

    எதிர்வினை

    இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

    இந்த சம்பவம் நாடு முழுவதும் பரவலான சீற்றத்தைத் தூண்டியுள்ளது.

    அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் கடுமையான நடவடிக்கை மற்றும் நீதியை கேட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    குற்றம் சாட்டப்பட்ட தத்தாத்ரே, புனே மற்றும் அஹில்யாநகர் மாவட்டங்களில் திருட்டு, கொள்ளை மற்றும் சங்கிலி பறிப்பு போன்ற அரை டஜன் வழக்குகளில் குற்றவாளியாக கண்டறியப்பட்டவர்.

    அப்படி ஒரு வழக்கில் கைதான இவர், 2019 முதல் ஜாமீனில் வெளியே வந்தார். இரண்டு நாட்களுக்கும் மேலாக தத்தாத்ரே தலைமறைவாக இருந்ததால், அவரை குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டது.

    துப்புகளுக்காக ஒரு ஹாட்லைன் எண்ணும் வெளியிடப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாலியல் வன்கொடுமை
    புனே
    பேருந்துகள்

    சமீபத்திய

    வாட்ஸ்அப் பயனர்களுக்கு கூடுதல் அம்சங்கள்; ஸ்டேட்டஸ் அப்டேட்டில் புதிய அம்சங்கள் சேர்ப்பு வாட்ஸ்அப்
    தக் லைஃப் புரமோஷனுக்கு மத்தியில் நடிகர் விஜயின் அரசியல் கட்சி குறித்து பேசிய கமல்ஹாசன் கமல்ஹாசன்
    உடல் தகுதி உள்ளவர்களுக்கும் மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் ஏன்? விளக்கும் நிபுணர்கள் மாரடைப்பு
    இந்தியாவில் 2025 மாடல் ஆஸ்டர் எஸ்யூவியை அறிமுகப்படுத்தியது எம்ஜி மோட்டார் எம்ஜி மோட்டார்

    பாலியல் வன்கொடுமை

    சிறுவர் பாலியல் கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்கியதற்காக ஹங்கேரியின் ஜனாதிபதி ராஜினாமா உலகம்
    புதுவை சிறுமி கொலை வழக்கில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தகவல்; இருவர் கைது  புதுவை
    புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் மாற்றம்; சிறப்பு படை விசாரணை துவக்கம் புதுச்சேரி
    "28.9 % சதவிகித குழந்தைகள் பாலியல் தொல்லையை அனுபவிக்கின்றனர்": யுவன் கொந்தளிப்பு  யுவன் ஷங்கர் ராஜா

    புனே

    புனே கார் விபத்து: அமைச்சர், எம்எல்ஏ-விற்கு தொடர்பு என புனே மருத்துவமனை டீன் குற்றச்சாட்டு விபத்து
    புனே போர்ஷே விபத்து வழக்கில் விபத்தை ஏற்படுத்திய 17 வயது இளைஞனின் தாய் கைது  விபத்து
    புனே போர்ஷே விபத்து: குடிபோதையில் வாகனம் ஓட்டியதை ஒப்புக்கொண்டார் 17 வயது டிரைவர்  காவல்துறை
    புனே போர்ஷே விபத்து: இளைஞனின் தந்தை, தாத்தா மீது தற்கொலை வழக்கு பதிவு  போர்ஷே

    பேருந்துகள்

    பாலியல் தொல்லைகளை தடுக்க தனியார் பள்ளி பேருந்துகளில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு  பள்ளிகள்
    சென்னையில் நடைபெறவுள்ள பெரும் மாற்றம்: தீவுத்திடலுக்கு மாறும் பிராட்வே பேருந்து நிலையம் சென்னை
    சென்னை: பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ மூன்றுக்கும் ஒரே டிக்கெட் திட்டம் சென்னை
    சென்னையிலிருந்து நெல்லை வந்த அரசு பேருந்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பயங்கர ஆயுதங்கள் சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025