NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் மார்ச் 3ஆம் தேதி போலியோ சொட்டு மருத்து முகாம்; நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் மார்ச் 3ஆம் தேதி போலியோ சொட்டு மருத்து முகாம்; நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை 
    இது குறித்த விரிவான வழிகாட்டியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது

    தமிழகத்தில் மார்ச் 3ஆம் தேதி போலியோ சொட்டு மருத்து முகாம்; நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை 

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 29, 2024
    12:07 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில், வரும் ஞாயிற்றுக்கிழமை(03.03.2024) அன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது.

    இது குறித்த விரிவான வழிகாட்டியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

    அதன்படி, தமிழகம் முழுவதும் செயல்பட்டிலுள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் ரயில்வே ஸ்டேஷன், பேருந்து நிலையம் என மொத்தம் 43,051 மையங்களில் இந்த முகாம் நடைபெறும்.

    5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், போலியோ சொட்டுமருந்து வழங்கப்படும்.

    சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும்.

    தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி, ஏற்கனவே சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும், மீண்டும் முகாம் நாளில் சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும்.

    முகாம்

    போலியோ சொட்டு மருந்து முகாம்

    இந்த முகாமில், பச்சிளம் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும்.

    அதேபோல, இந்த நாளில் போலியோ சொட்டு மருந்தை இலவசமாக வழங்க தனியார் மருத்துவர்களும், மருத்துவமனைகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிக்காக 3000-க்கும் மேற்பட்ட அரசு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

    பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், சோதனைச் சாவடிகள், விமான நிலையம் போன்ற இடங்களில், பயண வழி மையங்கள் (Transit Booths) மூலமாக சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    அதேபோல, நடமாடும் குழுக்கள் மூலமாக தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    போலியோ
    தமிழகம்
    தமிழக அரசு

    சமீபத்திய

    மின்சார வாகன அசெம்பிளி ஆலையை நிறுவ டெஸ்லா மகாராஷ்டிராவில் இடம் தேடுகிறது டெஸ்லா
    இன்று இரவு வானத்தை ஒளிரச் செய்யும் மலர் நிலவு: அதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளுங்கள் சந்திரன்
    விராட் கோலி ரெஃபரென்ஸ்; ஆபரேஷன் சிந்தூர் விளக்கத்தில் கிரிக்கெட்டை ஒப்பிட்டு பேசிய இந்திய DGMO கிரிக்கெட்
    ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

    போலியோ

    தேசிய தடுப்பூசி தினம் 2023: அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் பற்றி தெரிந்துகொள்வோம் இந்தியா
    இன்று போலியோ தினம் அனுசரிப்பு - முக்கியத்துவங்கள் மற்றும் அவசியங்கள் என்னென்ன ? இந்தியா

    தமிழகம்

    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு புதுச்சேரி
    "தமிழ்நாட்டினுள் CAA கால்வைக்க விடமாட்டோம்": முதலமைச்சர் ஸ்டாலின் சூளுரை முதல் அமைச்சர்
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் விளையாட்டு
    பிப்ரவரி 12ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது: பிப்.,19 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் தமிழ்நாடு

    தமிழக அரசு

    குழாய் மூலம் அமோனியா அனுப்பப்படாது என கோரமண்டல் நிறுவனம் அறிவிப்பு   சென்னை
    'வைக்கம் போராட்டம் நூற்றாண்டு மலர்' - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்  மு.க ஸ்டாலின்
    வெள்ளம் பாதித்த தென்மாவட்டங்களுக்கு இன்று முதல் நிவாரண தொகை வழங்கப்படுகிறது  கனமழை
    ஊட்டி ஏரிக்கரைகளில் ரூ.3.20கோடி செலவில் மரக்குடில்கள், டெண்டுகள் அமைக்கும் பணி தீவிரம்  நீலகிரி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025