Loading...
வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டுகள் சிறை! ஜூலை 27ல் நாடாளுமன்றத்தில் 'பொதுத் தேர்வுகள் சட்டத் திருத்த மசோதா 2026' தாக்கல்
ஜூலை 27ல் நாடாளுமன்றத்தில் 'பொதுத் தேர்வுகள் சட்டத் திருத்த மசோதா 2026' தாக்கல்

வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டுகள் சிறை! ஜூலை 27ல் நாடாளுமன்றத்தில் 'பொதுத் தேர்வுகள் சட்டத் திருத்த மசோதா 2026' தாக்கல்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 26, 2026
08:42 am

செய்தி முன்னோட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்புகள் மற்றும் மாணவர்களின் போராட்டங்களைத் தொடர்ந்து, மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. இதன்படி, கடுமையான தண்டனைகள் மற்றும் காலக்கெடுவுடன் கூடிய விசாரணை அம்சங்களைக் கொண்ட 'பொதுத் தேர்வுகள் சட்டத் திருத்த மசோதா 2026' வரும் திங்கட்கிழமை (ஜூலை 27) அன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இந்த மசோதாவைத் தாக்கல் செய்கிறார்.

தண்டனை விபரம்

10 ஆண்டுகள் வரை சிறை மற்றும் ரூ.10 கோடி அபராதம்

2024 ஆம் ஆண்டின் சட்டத்தில் கொண்டுவரப்படும் இந்த புதிய திருத்தங்களின் மூலம் தண்டனைகள் இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளன:

தனிநபர் முறைகேடுகள்: வினாத்தாள் கசிவு அல்லது ஆள்மாறாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.50 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.

கூட்டுச் சதி மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள்: தேர்வு முறைகேடுகளை நடத்தும் சிண்டிகேட் அமைப்புகளுக்குக் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.10 கோடி வரை அபராதமும் விதிக்க மசோதா வழிவகை செய்கிறது.

சேவை நிறுவனங்கள்: தேர்வை நடத்தும் நிறுவனங்கள் தவறிழைத்தால், அவற்றிற்கு ரூ.5 கோடி வரை அபராதம் விதிக்கப்படுவதோடு, 8 ஆண்டுகள் வரை தேர்வுகள் நடத்தத் தடையும் விதிக்கப்படும்.

விரைவு நீதிமன்றம்

சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் மற்றும் 3 மாதங்களில் தீர்ப்பு

மசோதாவின் மிகவும் முக்கியமான அம்சமாக, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.

விசாரணை காலக்கெடு: சிபிஐ அல்லது சிறப்புப் படை தனது விசாரணையை 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்.

வழக்கு முடிவு: விரைவு நீதிமன்றங்கள் தினசரி அடிப்படையில் விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து 3 மாதங்களுக்குள் (90 நாட்கள்) வழக்கை முடித்துத் தீர்ப்பு வழங்க வேண்டும்.

ADVERTISEMENT

சீர்திருத்தம்

மாணவர் போராட்டங்களின் வெற்றி மற்றும் சட்ட சீர்திருத்தம்

கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா மற்றும் காக்ரோச் ஜனதா கட்சி நடத்திய 36 நாட்கள் போராட்டத்தின் முடிவில் மத்திய அரசு அளித்த வாக்குறுதியின்படி இந்த மசோதா அவசர அவசரமாக முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பொதுத் தேர்வு அமைப்பில் வெளிப்படைத்தன்மையை மீட்டெடுக்கவும், எதிர்காலத்தில் எந்தவொரு மாணவரின் எதிர்காலமும் வினாத்தாள் கசிவால் பாதிக்கப்படாமல் இருக்கவும் இந்த மசோதா மிக முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT