NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மதுரையில் கிரானைட் குவாரி நடத்த எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மதுரையில் கிரானைட் குவாரி நடத்த எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம் 
    மதுரையில் கிரானைட் குவாரி நடத்த எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம்

    மதுரையில் கிரானைட் குவாரி நடத்த எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம் 

    எழுதியவர் Nivetha P
    Oct 26, 2023
    04:24 pm

    செய்தி முன்னோட்டம்

    மதுரை மேலூர் பகுதியிலுள்ள குவாரிகள் விதிகளை மீறி கிரானைட் எடுத்த காரணத்தினால் தமிழக அரசுக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தது.

    அதன்படி 2011ம்.,ஆண்டு அப்போதைய மாவட்ட ஆட்சியர் சகாயம் நேரில் சென்று அப்பகுதிகளை ஆய்வுச்செய்துள்ளார்.

    அதில் பொழுது இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளோர் அரசு விதிகளை மீறி சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள மலைகளை குடைந்து கிரானைட் கற்களை எடுத்தது தெரியவந்துள்ளது.

    இந்த விசாரணை தொடர்பான அறிக்கையினை சகாயம் அரசிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.

    இதனைத்தொடர்ந்து முறையான அனுமதியின்றி கிரானைட் கற்கள் உள்ளிட்ட கனிம வளங்களை எடுத்து தொழில் செய்ததாகக்கூறி அப்பகுதி காவல்துறையினர் 200க்கும்.,மேற்பட்ட வழக்குகளை தொடர்ந்துள்ளனர்.

    மேலும் ஆய்வறிக்கையின் அடிப்படையில் மதுரை முழுவதுமுள்ள அனைத்து குவாரிகளையும் 2012ம்.,ஆண்டு மூடி அரசாங்கம் சீல் வைத்துள்ளது.

    குவாரி 

    போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 500 பேர் 

    இந்நிலையில் 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அப்பகுதியில் குவாரிகளை துவங்குவதற்கான குத்தகை விடப்படவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து அறிக்கை வெளியாகியுள்ளது.

    புவியியல் மற்றும் சுங்கத்துறை சார்பிலான அனுமதியும் இதற்கு பெறப்பட்டுள்ளது.

    கொட்டாம்பட்டி பகுதியருகேவுள்ள அய்யாப்பட்டி, திருச்சுனை, சேக்கிபட்டி உள்ளிட்ட கிராமங்களில் குவாரி அமைக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இதற்கு அப்பகுதியிலுள்ள குவாரியால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    விவசாயம் மற்றும் சுற்றுசூழல் இந்த குவாரி அமைக்கப்பட்டால் கடுமையாக பாதிக்கப்படும் என்றுக்கூறி அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.

    தொடர்ந்து சேக்கிபட்டி கிராமத்தில் திடீரென மக்கள் போராட்டம் செய்ய துவங்கியுள்ளனர்.

    இதில் சுற்றுவட்டார 15 கிராமங்கள் பங்கேற்ற நிலையில் பெண்கள் உள்ளிட்ட 500.,பேர் இதில் கலந்துக்கொண்டு தங்கள் எதிர்ப்பினை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மதுரை
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    மதுரை

    மதுரை உணவகத்தில் பார்சல் உணவில் பிளேடு கிடந்ததாக புகார் - அதிகாரிகள் விசாரணை  உணவு பாதுகாப்பு துறை
    அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையினை திறக்கக்கோரி கரும்பு விவசாயிகள் நடைபயணம்-காவல்துறை தடுத்ததால் பரபரப்பு  காவல்துறை
    மதுரை மெட்ரோ: 27 ஸ்டேஷன்களுடன், 32 கி.மீ., வரை நீடிக்கப்படுவதாக அறிவிப்பு  மெட்ரோ
    அமெரிக்க மகனுக்கு மதுரையில் கலாச்சார நிகழ்ச்சி நடத்திய பெற்றோர் - நெகிழ்ச்சி சம்பவம்  அமெரிக்கா

    காவல்துறை

    ஈராக் நாட்டில் திருமண நிகழ்வில் ஏற்பட்ட தீ விபத்தில் 100 பேர் பரிதாபமாக பலி திருமணங்கள்
    சென்னை தி.நகரில் 10 அடி ஆழத்தில் திடீர் பள்ளம்  சென்னை
    உஜ்ஜைன் பாலியல் பலாத்கார சம்பவம்- பாதிக்கப்பட்ட மாணவிக்கு உதவ முன்வந்த காவலர்கள் மத்திய பிரதேசம்
    சென்னை பெட்ரோல் பங்க் விபத்தின் எதிரொலி - பங்கிற்கு சீல் வைத்த அதிகாரிகள்  பெட்ரோல்

    காவல்துறை

    பக்கத்துவீட்டு மட்டன் கறியினை சாப்பிட்ட நாய் சுட்டுக் கொலை - க்ரைம் ஸ்டோரி   க்ரைம் ஸ்டோரி
    மிகவும் தேடப்பட்டு வந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி டெல்லியில் பிடிபட்டார்  டெல்லி
    பெண் போலீஸை கொன்றுவிட்டு இரண்டு வருடமாக அந்த பெண் உயிரோடு இருப்பது போல் நாடகமாடிய கான்ஸ்டபிள் கைது  டெல்லி
    திருப்பதியில் கடத்தப்பட்ட சென்னையை சேர்ந்த 2 வயது குழந்தை மீட்பு  திருப்பதி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025