NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக குடிநீர் விநியோகிப்பதில் சிக்கல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக குடிநீர் விநியோகிப்பதில் சிக்கல் 
    தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக குடிநீர் விநியோகிப்பதில் சிக்கல்

    தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக குடிநீர் விநியோகிப்பதில் சிக்கல் 

    எழுதியவர் Nivetha P
    Dec 22, 2023
    07:11 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலத்தின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

    மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதனிடையே கடந்த 17 மற்றும் 18 தேதிகளில் பெய்த இந்த கனமழையால் மணிமுத்தாறு, சேர்வலாறு, பாபநாசம், காரையாறு உள்ளிட்ட அணைகளில் நீர் நிரம்பி, உபரிநீர் திறந்துவிடப்பட்டது.

    அணைகளில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டதை தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    இதன் காரணமாக ஆற்றங்கரை ஒட்டியுள்ள பகுதிகள் கடும் சேதமடைந்துள்ளது.

    அப்பகுதிகளில் உள்ள சாலைகள், பாலங்கள் உள்ளிட்டவையும் சேதமடைந்ததால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    குடிநீர் 

    ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள 300க்கும் மேற்பட்ட உறை கிணறுகளும் சேதம் 

    இந்நிலையில் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோகிப்பதில் புதியதாக சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கிறது.

    இந்த ஆற்று படுகையில் அமைந்துள்ள 300க்கும் மேற்பட்ட உறை கிணறுகள் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது.

    மேலும், குடிநீர் எடுத்து செல்லும் குழாய்கள் முழுவதும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.

    அதே போல் நீரேற்றும் நிலையங்களும், உறை கிணறுகளின் மின் மோட்டர்களும் வெள்ளநீரால் சேதமடைந்துள்ளது.

    இதன்படி தற்போது குடிநீர் விநியோகிப்பதில் இருக்கும் பாதிப்புகளை கண்டறியும் பணிகள் மேற்கொண்டுள்ள நிலையில், ரூ.100 கோடிக்கும் மேல் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    குடிநீர்
    வெள்ளம்
    கனமழை
    தமிழ்நாடு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    குடிநீர்

    நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - தமிழக தலைமை செயலர் நேரில் ஆஜராக உத்தரவு  தேனி
    தமிழகத்திற்கு 5,000 கன அடி நீர் திறப்பு - காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு தமிழ்நாடு
    சர்வ அமாவாசை - ராமேஸ்வரத்தில் புனித நீராடி, தர்ப்பணம் செய்து பக்தர்கள் வழிபாடு   ராமேஸ்வரம்
    தருமபுரி அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலந்துள்ளதாக புகார் தமிழ்நாடு

    வெள்ளம்

    கனமழையால் வெள்ளக்காடாக மாறிய பெங்களூரு: கடும் போக்குவரத்து பாதிப்பு பெங்களூர்
    மேட்டுப்பாளையம்-உதகை சாலைகளில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு  பருவமழை
    கோத்தகிரி சாலைகளில் சீரமைப்பு பணிகள் நிறைவுற்று, போக்குவரத்து துவங்கியது  நீலகிரி
    சென்னையில் கனமழை, வெள்ளம்: பள்ளிகள் மூடல், அவசர கால எண்கள் அறிவிப்பு  சென்னை

    கனமழை

    சென்னையில் நடக்கவிருந்த பார்முலா 4 கார் பந்தயம் காலவரையறையின்றி ஒத்திவைப்பு  கார்
    தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு  தமிழ்நாடு
    சென்னையில் டிசம்பர்.,3 முதல் 8 வரை கேமராக்களில் பதிவான விதிமீறல் வழக்குகள் ரத்து  போக்குவரத்து காவல்துறை
    சென்னையில் 8 மையங்களில் 24 மணிநேரமும் ஆவின் பால் விற்பனை ஆவின்

    தமிழ்நாடு

    ஆந்திராவில் கரையை கடக்க இருக்கிறது மிஜாம் புயல்  ஆந்திரா
    இயல்பு நிலைக்கு திரும்புகிறது சென்னை: இன்று என்னென்ன சேவைகள் இயங்கும்? சென்னை
    சென்னை எம்எல்ஏக்கள் வெளியில் வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்- விஷால் வலியுறுத்தல் விஷால்
    11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு  பள்ளிக்கல்வித்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025