Loading...
பயங்கரவாதத்திற்குத் துல்லியமான பதிலடி! 80வது சுதந்திர தின உரையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை
80வது சுதந்திர தின உரையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை

பயங்கரவாதத்திற்குத் துல்லியமான பதிலடி! 80வது சுதந்திர தின உரையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை

எழுதியவர் Sekar Chinnappan
Aug 14, 2026
07:44 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் 80வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாட்டின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14) அன்று நாட்டு மக்களுக்கு சிறப்பு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சுதந்திர தின விழாவின் 80வது ஆண்டு அதிகாரப்பூர்வமாகத் தொடங்குவதைக் குறிப்பிட்டு நாட்டு மக்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், நமது நாட்டின் நீதித்துறை அமைப்பில் போதிய நிதி ஆதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் எந்தவொரு ஏழை மனிதனுக்கும் நீதி மறுக்கப்படக் கூடாது என்பதில் நீதித்துறையினர் உறுதியோடு செயல்பட வேண்டும் எனத் தெரிவித்தார். இதுவே நமது ஜனநாயகத்தின் முதன்மைப் பண்பாகும்.

ஆபரேஷன் சிந்தூர்

ஆபரேஷன் சிந்தூர் மற்றும் சிந்து நதிநீர் ஒப்பந்தம்

பயங்கரவாத வலைப்பின்னல்களுக்கு எதிராக இந்திய ஆயுதப்படைகள் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை மிகத் துல்லியமாக அழிக்கும் இந்தியாவின் திறனை உலகிற்குத் தெளிவாக நிரூபித்துள்ளது என்று குடியரசுத் தலைவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், பயங்கரவாதத்திற்கு புகலிடம் அளித்து ஆதரவு தரும் நாட்டுடன் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்த நடவடிக்கையானது தேசிய நலன் கருதியும், குறிப்பாக நாட்டின் லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கோடும் எடுக்கப்பட்ட மிகச் சரியான மற்றும் தீர்க்கமான முடிவாகும் என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.

உணவு 

வறுமை ஒழிப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பு சாதனை

கடந்த பத்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அனைவரையும் உள்ளடக்கிய சிறப்பான வளர்ச்சி திட்டங்கள் மற்றும் சமூக நலத்திட்டங்களின் மூலமாக இந்தியாவில் 25 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையிலிருந்து வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்று குடியரசுத் தலைவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் நாட்டின் 80 கோடிக்கும் அதிகமான ஏழை எளிய பயனாளிகளின் உணவுப் பாதுகாப்பைத் தொடர்ந்து உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் இலவச ரேஷன் தானிய திட்டம் மிகப்பெரிய சாதனையாக உருவெடுத்துள்ளது.

இத்தகைய நலத்திட்டங்கள் மூலம் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் கணிசமான அளவில் உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

டிஜிட்டல் பொருளாதாரம்

டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் நக்ஸல் அற்ற இந்தியா

உலகளாவிய போர்கள், பொருளாதார நிலையின்மை மற்றும் பல தடைகளுக்கு இடையிலும் இந்தியாவின் பொருளாதாரம் உலக சராசரி வளர்ச்சியை விட இரண்டு மடங்கு வேகத்தில் மிகச் சிறப்பாக வளர்ச்சி அடையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் நடைபெறும் நிகழ்நேர டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் பாதியிலும் அதிகமான பங்களிப்பை இந்தியா மட்டுமே வழங்கி சாதனை படைத்துள்ளது.

மேலும், நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பில் சவாலாக இருந்த நக்ஸலைட் அமைப்புகளை முழுமையாகக் கட்டுப்படுத்தி, நக்ஸல் அற்ற இந்தியாவை உருவாக்கியதும், பாஸ்தர் போன்ற பகுதிகளில் ஏற்பட்டுள்ள விரைவான முன்னேற்றமும் மிகப்பெரிய தேசிய சாதனையாகும்.

ADVERTISEMENT