NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவில் லித்தியம் கண்டுபிடிப்பு: இதனால் என்ன பலன் கிடைக்கும்
    இந்தியாவில் லித்தியம் கண்டுபிடிப்பு: இதனால் என்ன பலன் கிடைக்கும்
    இந்தியா

    இந்தியாவில் லித்தியம் கண்டுபிடிப்பு: இதனால் என்ன பலன் கிடைக்கும்

    எழுதியவர் Sindhuja SM
    February 18, 2023 | 07:18 pm 1 நிமிட வாசிப்பு
    இந்தியாவில் லித்தியம் கண்டுபிடிப்பு: இதனால் என்ன பலன் கிடைக்கும்
    ஜம்மு மற்றும் காஷ்மீரில் லித்தியம் இருப்புக்கள் இருப்பதாக மத்திய அரசு அறிவித்திருப்பது, சோலார் கருவி உற்பத்தியாளர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.

    நாட்டிலேயே முதன்முறையாக ஜம்மு காஷ்மீரில் 5.9 மில்லியன் டன் லித்தியம் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு சமீபத்தில் தெரிவித்தது. லித்தியம், EV பேட்டரிகளில் பயன்படுத்தப்படும் முக்கிய கூறுகளில் ஒன்றாகும். இதை கண்டுபிடித்திருப்பதால் இந்தியாவிற்கு என்ன மாதிரியான பலன்கள் எல்லாம் கிடைக்கும் என்பதை இப்போது பார்க்கலாம். லித்தியம் அடிப்படையிலான பேட்டரிகள், மின்சார வாகனங்கள், சோலார் உபகரணங்கள் போன்றவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் இனி சீனா மற்றும் பிற நாடுகளை நம்பி இருக்க தேவையில்லை. உள்நாட்டில் லித்தியம் கிடைத்தால், பேட்டரி உற்பத்தியின் செலவு 5% முதல் 7% வரை குறையும் என்று கூறப்படுகிறது. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி, கடந்த ஆண்டு, லித்தியம் மற்றும் லித்தியம்-அயன் இறக்குமதிக்கு இந்தியா, ரூ.163 பில்லியன் செலவிட்டுள்ளது.

    லித்தியத்தை உலோகமாக மாற்றுவதில் இருக்கும் சவால்கள்

    இறக்குமதியை சார்ந்திருப்பவர்கள், டாலருக்கும் ரூபாய்க்கும் இடையிலான ஏற்றத்தாழ்வுகளால் லித்தியத்தின் விலை ஏற்ற இறக்கங்களை அடிக்கடி எதிர்கொள்கின்றனர். மின்சார வாகனங்களின்(EV) தயாரிப்புகள் லித்தியத்தை நம்பி தான் இருக்கிறது என்பதால், 'மேக் இன் இந்தியா' போன்ற திட்டங்களுக்கு இது மிக பெரும் பலமாக இருக்கும். உள்நாட்டில் லித்தியம் இருப்பு உள்ளதால், லித்தியம் அயன் பேட்டரிகளின் விலை வெகுவாக குறையலாம். ஆனால், ஜம்மு-காஷ்மீரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள லித்தியம் மற்ற தாதுக்களுடன் கலந்து பாறைகளாக இருப்பதால், அதை பயன்படுத்துவதற்கு ஏற்ற உலோகமாக மாற்றுவதற்கு பிரித்தெடுத்து சுத்திகரிக்கும் செயல்முறைகளை செய்ய வேண்டும். அதற்கு செலவுகள் அதிகம் ஆகலாம் என்ற சவாலையும் சில நிபுணர்கள் முன் வைக்கின்றனர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா

    இந்தியா

    AI-யை குறித்து பேசிய இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பில் கேட்ஸ்! செயற்கை நுண்ணறிவு
    11 ஆயிரம் ஃபாலோவர்ஸ்-களை கொண்ட ஆதித்யா ஐயர்! யார் இவர்? செயற்கை நுண்ணறிவு
    வீடியோ: இந்தியாவிற்கு வந்த ஆப்பிரிக்க புலிகளின் முதல் ரியாக்ஷன் மத்திய பிரதேசம்
    கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரெஸ் பேச்சுக்கு பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் வெளியுறவுத்துறை
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023