
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஜூன் 28) தமிழகத்தில் சென்னையில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:- சென்னை தெற்கு II: கற்பகம் நகர், ரங்கநாதன் நகர், தேவராஜ் நகர், காமாட்சி நகர், பாலாஜி நகர், பரத் நகர், எம்ஜிஆர் நகர், சாரதா கார்டன், பாரத் மருத்துவக் கல்லூரி, அகரம் மெயின் ரோட்டின் ஒரு பகுதி.
மின்கட்டணம்
ஆன்லைனில் மின்கட்டண வசதி
இதற்கிடையே, தமிழக மின்சார வாரியம் சமீபத்தில் ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்துவது குறித்த ஒரு அப்டேட்டை வெளியிட்டிருந்தது. மின் கட்டணம் வழக்கமாக மின் கட்டண வசூல் அலுவலகம், இ-சேவை மையங்கள் மூலம் ஆப்லைனில் வசூலிக்கப்படுகிறது. இது தவிர பேடிஎம், கூகுள் பே உள்ளிட்ட பல்வேறு மொபைல் ஆப்கள் மற்றும் மின்சாரா வாரியத்தின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் தளம் வழியாகவும் மின்கட்டணம் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போதைய சூழலில் மின்கட்டணம் செலுத்துவோரில் சுமார் 70 சதவீதம் பேர் ஆன்லைன் வழியாகவே மின் கட்டணம் செலுத்துவதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், 85 சதவீதம் பேர் சரியான நேரத்தில் மின் கட்டணத்தை செலுத்துவதாக தெரிவித்துள்ள மின்சார வாரியம், இதை விரைவில் 100 சதவீதமாக்க இலக்கு வைத்துள்ளதாகவும் கூறியுள்ளது.