உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (பிப்ரவரி 21) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
சென்னை மேற்கு: அண்ணாநகர் மேற்கு மற்றும் மேற்கு விரிவாக்க பகுதி முழுவதும், திருவள்ளீஸ்வரர் நகர், திருமங்கலம், என்விஎன் நகர், சிபிடபிள்யூடி குவார்ட்டர்ஸ், பி,சி&டி செக்டர், 11 முதல் 20வது மெயின் ரோடு, எமரால்டு பிளாட்ஸ், மெட்ரோ மண்டல குடியிருப்புகள்.
கரூர்: புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடக்குபாளையம், சாணப்பிராட்டி, எஸ்.வெள்ளாளபட்டி, நற்கட்டியூர், தொழிற்பேட்டை, ஆர்.என்.பேட்டை, மணவாசி, சாலப்பட்டி, பாலராஜபுரம், உப்பிடமங்கலம், லட்சுமணம்பட்டி, பொரணி வடக்கு.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி, பாரூர், கீழ்குப்பம், தத்தம்பட்டி, மல்லிக்கல், கரடியூர், அரசம்பட்டி, புலியூர், பரந்தப்பள்ளி, கோட்டப்பட்டி, வாடமலம்பட்டி, பன்னந்தூர், மஞ்சமேடு, சாமண்டபட்டி, பெரியபாறையூர், வண்டிக்காரன்கோட்டை.
நாகப்பட்டினம்: மயிலாடுதுறை டவுன்.
பல்லடம்: அப்பநாயக்கன்பட்டி, எம்சிபி, மில், கேஎம் புரம், காரணப்பேட்டை, புளியம்பட்டி, ஆறுகுளம், அய்யம்பாளையம்.
பெரம்பலூர்: பெரியத்துக்குறிச்சி, ஓலையூர், விழுதுடையான்.
புதுக்கோட்டை: வடகாடு பகுதி முழுவதும், ஆலங்குடி பகுதி முழுவதும்.
தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை.
தேனி: துரைசாமிபுரம், அப்பிபட்டி, தென்பழனி, சீலையம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
திருப்பூர்: கருவலூர், முறியாண்டாம்பாளையம், குமாரபாளையம், அரசபாளையம், நைனாம்பாளையம், ஆனந்தகிரி, மருதூர், காளிபாளையம், நம்பியம்பாளையம், உப்பிலிபாளையம், மணப்பாளையம், காரைக்கால்பாளையம், குரும்பபாளையம், பெரியகாட்டுப்பாளையம், ஏரிபாளையம், காமநாயக்கன்பாளையம், புதுப்பாளையம், நல்லிகவுண்டம்பாளையம், அல்லம்பாளையம், புதுநல்லூர், சூரிபாளையம், சேரன்நகர், வெங்கிகல்பாளையம், தண்ணீர்பந்தல்பாளையம்.