NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அயர்லாந்தில் இருந்து ரூ.9,000 கோடி பணம் வருவதாக கூறி தொழிலதிபர்களிடம் பணம் பறிப்பு - க்ரைம் ஸ்டோரி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அயர்லாந்தில் இருந்து ரூ.9,000 கோடி பணம் வருவதாக கூறி தொழிலதிபர்களிடம் பணம் பறிப்பு - க்ரைம் ஸ்டோரி 
    அயர்லாந்தில் இருந்து ரூ.9,000 கோடி பணம் வருவதாக கூறி தொழிலதிபர்களிடம் பணம் பறிப்பு - க்ரைம் ஸ்டோரி

    அயர்லாந்தில் இருந்து ரூ.9,000 கோடி பணம் வருவதாக கூறி தொழிலதிபர்களிடம் பணம் பறிப்பு - க்ரைம் ஸ்டோரி 

    எழுதியவர் Nivetha P
    Sep 03, 2023
    06:08 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தவார Newsbytes.,இன் க்ரைம் ஸ்டோரி: அயர்லாந்து நாட்டில் இருந்து ரூ.9,000 கோடி பணம் முதலீடு செய்யப்படவுள்ளது என்று கூறி, அதன் மூலம் வட்டி இல்லாமல் கோடி கணக்கில் பணத்தினை கடனாக தருவதாகவும் கூறி பெரும் தொழிலதிபர்களிடம் 3 பேர் கொண்ட மோசடி கும்பல் பணம் பறித்துள்ளது.

    இது குறித்து சென்னையில் எஸ்வி டெக் என்னும் தனியார் நிறுவனத்தினை சேர்ந்த வீரமணி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    புகார் 

    அயர்லாந்து மருத்துவ நிறுவனத்திலிருந்து கோடி கணக்கில் பணம் வருவதாக கூறிய மோசடி கும்பல்  

    அதன்படி, அயர்லாந்தில் இருந்து மருத்துவ நிறுவனம் ஒன்று கோவாவில் தாங்கள் நடத்திவரும் நிறுவனத்திற்கு ரூ.9,102 கோடி பணத்தினை முதலீடாக அனுப்பவுள்ளது என கூறிய இந்த மோசடி கும்பல் அதற்கான ஆவணங்களையும் காண்பித்துள்ளனர்.

    அதுமட்டுமல்லாமல் தங்களுக்கு ரிசர்வ் வங்கி ஊழியர் ஒருவர் உதவி செய்கிறார் என்றும் கூறியுள்ளனர்.

    தொடர்ந்து, அந்த முதலீடு தொகையினை பெறுவதற்கு தற்போது குறைந்தபட்சத்தொகை தேவைப்படுகிறது என்று தொழிலதிபர்களிடம் கூறி அவர்களிடம் பணத்தினை ஏமாற்றி பெற்றுள்ளனர் என்று கூறப்படுகிறது.

    முதலீடு 

    ரூ.10 கோடி வரை வட்டியில்லா கடன் கிடைக்கும் என்பதை நம்பிய தொழிலதிபர்கள் 

    முதலீடு தொகை வந்ததும் ரூ.10 கோடி வரை வட்டியில்லா கடன் கிடைக்கும் என்பதை நம்பிய தொழிலதிபர்கள் கோடி கணக்கில் பணத்தினை கொடுத்து ஏமாந்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து, தன்னிடம் ரூ.1.40 கோடி பணத்தினை பெற்றுக்கொண்டு கடனும் வழங்காமல், கொடுத்த பணத்தினையும் திருப்பி தராமல் ஏமாற்றுவதாக ராஜேஷ்(44), ரங்கராஜன்(38), சுரேஷ்குமார்(48) உள்ளிட்ட மூவர் மீது வீரமணி புகார் அளித்துள்ளார்.

    மேலும் ரங்கராஜன் என்பவர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் புகாரில் கூறியுள்ளார்.

    காவல்துறை 

    புகாரின் பேரில் மூவர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறை 

    இது குறித்து காவல்துறை மேற்கொண்ட விசாரணையில், சுரேஷ்குமார் என்பவர் நட்சத்திர தங்கும் விடுதிகளில் மட்டுமே தங்கி தொழிலதிபர்களை சந்தித்து பணத்தை ஏமாற்றி வந்தது தெரியவந்துள்ளது.

    மேலும் இவர் பெங்களூரில் கடந்த சில மாதங்களாகவே தலைமறைவு வாழ்க்கையினை வாழ்ந்து வருகிறாராம்.

    தொடர்ந்து ரங்கராஜன் சென்னையில் 4 சொகுசு பங்களா, விலையுயர்ந்த வாகனங்களை வைத்துள்ளார் என்பதும், ராஜேஷும் நல்ல வசதியாக பல சொத்துக்களை வாங்கி குவித்து வைத்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.

    கைது 

    3 பேரையும் கைது செய்த காவல்துறை 

    இதனை தொடர்ந்து, இணைய குற்றத்தடுப்பு பிரிவினரால் ராஜேஷ் சென்னையிலும், ரங்கராஜன் திருவண்ணாமலையிலும் கைது செய்யப்பட்டனர் என்று கூறப்படுகிறது.

    சுரேஷ்குமாரை போலீசார் பெங்களூரில் வைத்து கைது செய்துள்ள நிலையில், இவர்கள் மூவரின் வங்கி கணக்கிலும் கோடி கணக்கில் பணம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றவர்களும் இருக்க தான் செய்வார்கள் என்னும் பழமொழியினை நினைவுகூர வைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    க்ரைம் ஸ்டோரி
    காவல்துறை
    காவல்துறை
    கடன்

    சமீபத்திய

    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்

    க்ரைம் ஸ்டோரி

    திருச்சியை உறையவைத்த லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம், பாகம் 1 - க்ரைம் ஸ்டோரி கொள்ளை
    திருச்சியை உறையவைத்த லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம், பாகம் 2 - க்ரைம் ஸ்டோரி திருச்சி
    நர்ஸ் வேடமிட்டு விஷ ஊசிப்போட்டு மனைவியை கொலை செய்ய முயற்சித்த முன்னாள் காதலி - க்ரைம் ஸ்டோரி  கேரளா
    மாணவிகளை மசாஜ் செய்ய வற்புறுத்தி அத்துமீறிய தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது-க்ரைம் ஸ்டோரி  கைது

    காவல்துறை

    டெல்லியில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபோது மின்சாரம் தாக்கி இளைஞர் பலி டெல்லி
    தங்கையின் துண்டிக்கப்பட்ட தலையுடன் காவல்துறையில் சரணடைந்த அண்ணன்  உத்தரப்பிரதேசம்
    மணிப்பூரை அடுத்து மேற்கு வங்கத்தில்: அரை நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்ட 2 பெண்கள் மேற்கு வங்காளம்
    சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட பெண் வியாபாரி - 5 பேர் கைது  கொலை

    காவல்துறை

    பீகாரில் 40 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை பீகார்
    கலவரத்தின் போது பதிவு செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான ஜீரோ FIRகள்: அலறும் மணிப்பூர் போலீஸ்  மணிப்பூர்
    என்.எல்.சி.-கடலூரில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்காலிக நிறுத்தம்  காவல்துறை
    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்து - 26 பேர் பலி  பிலிப்பைன்ஸ்

    கடன்

    வீட்டுக்கடன் விண்ணப்பிக்கும் போது கவனத்தில் கொள்ளவேண்டியவை வீட்டு கடன்
    கடனை சரிவர செலுத்தாததால் குண்டு தயாரிப்பதாக போலீசில் மாட்டிவிட்ட ஆன்லைன் லோன் செயலி-அதிர்ச்சி சம்பவம் தமிழ்நாடு
    ரெப்போ வட்டி விகிதம் 6.50 அதிகரிப்பு! உயரும் வீடு வாகன கடன்; தொழில்நுட்பம்
    ரெப்போ வட்டி விகிதம் உயர்வு: சமானிய மக்களுக்கு உண்டாகும் பாதிப்புகள் என்ன? தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025