Page Loader
வடகிழக்கு முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி
மார்ச் 8ஆம் தேதி திரிபுராவில் நடைபெறும் விழாவில் பங்கேற்க இருக்கிறார்.

வடகிழக்கு முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி

எழுதியவர் Sindhuja SM
Mar 04, 2023
06:07 pm

செய்தி முன்னோட்டம்

சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, பாஜக ஆட்சி அமைக்கும் வடகிழக்கு மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் பிற தலைவர்கள் பதவியேற்கும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். மார்ச் 7ஆம் தேதி நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி(என்டிஏ) அரசுகளின் பதவியேற்பு விழாக்களில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். மறுநாள் திரிபுராவில் நடைபெறும் விழாவில் பங்கேற்க இருக்கிறார். மூன்று வடகிழக்கு மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் பாஜகவின் சிறப்பான வெற்றி ஜனநாயகம் மற்றும் ஜனநாயக செயல்பாட்டின் மீது மக்களுக்கு உள்ள உறுதியான நம்பிக்கையை காட்டுகிறது, என்று மூன்று மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட மார்ச் 2 அன்று டெல்லியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் பிரதமர் மோடி கூறினார்.

இந்தியா

மூன்று வடகிழக்கு மாநிலங்களில் வெற்றி

திரிபுராவில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. நாகாலாந்தில் பாஜக கூட்டணியில் உள்ள தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியுடன் இணைந்து பாஜக ஆட்சி அமைக்கும். மேகாலயாவில், ஆட்சி அமைப்பதற்கு தேசிய மக்கள் கட்சியிடமிருந்து பாஜகவுக்கு அழைப்பு வந்திருக்கிறது. "இந்த தேர்தல் முடிவுகள், நாட்டில் ஜனநாயகம் மற்றும் ஜனநாயக அமைப்புகளின் மீது மக்களுக்கு உள்ள வலுவான நம்பிக்கையை காட்டுகிறது" என்றும், "வடகிழக்கு வாக்கெடுப்பு முடிவுகள் விரிவாக எடுத்துரைக்கப்பட்ட விதம், அப்பகுதி டெல்லி மற்றும் தில்(இதயம்) ஆகியவற்றிலிருந்து தொலைவில் இல்லை என்பதைக் காட்டுகிறது." என்றும் பிரதமர் கூறினார். "வடகிழக்கில் உள்ள எங்கள் கட்சித் தொண்டர்கள் அங்கு நம் அனைவரையும் விட மிகவும் கடினமாக உழைக்கிறார்கள்." என்று பிரதமர் மோடி வடகிழக்கு தொண்டர்களையும் பாராட்டியுள்ளார்.