NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்து கோவில்கள் பிரச்சனை: ஆஸ்திரேலிய பிரதமருடன் பிரதமர் மோடி பேச்சு
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்து கோவில்கள் பிரச்சனை: ஆஸ்திரேலிய பிரதமருடன் பிரதமர் மோடி பேச்சு
    இந்திய சமூகத்தின் பாதுகாப்பு குறித்து உறுதி அளித்த ஆஸ்திரேலிய பிரதமர்

    இந்து கோவில்கள் பிரச்சனை: ஆஸ்திரேலிய பிரதமருடன் பிரதமர் மோடி பேச்சு

    எழுதியவர் Sindhuja SM
    Mar 10, 2023
    04:42 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆஸ்திரேலிய இந்து கோவில்கள் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக இந்திய சமூகத்தின் பாதுகாப்பு குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் உறுதியளித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று(மார் 10) தெரிவித்தார்.

    "கடந்த சில வாரங்களாக ஆஸ்திரேலிய ஆலயங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பான செய்திகள் தொடர்ந்து வருவது வருத்தமளிக்கும் விஷயமாகும். இதுபோன்ற செய்திகள் இந்தியாவில் உள்ள அனைவரையும் கவலையடையச் செய்வதும், நம் மனதைக் கலங்கச் செய்வதும் இயல்பானதே." என்று செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி கூறினார்.

    "இந்த உணர்வுகளையும் கவலைகளையும் நான் பிரதமர் அல்பனீஸிடம் தெரிவித்தேன். இந்திய சமூகத்தின் பாதுகாப்பு தான் தன்னுடைய முன்னுரிமை என்று அவர் என்னிடம் உறுதியளித்தார். இருநாட்டு குழுக்களும் இதற்காக தொடர்பில் இருந்து ஒத்துழைப்பை வழங்கும்" என்று மேலும் அவர் தெரிவித்தார்

    இந்தியா

    தொடர்ந்து சேதப்படுத்தப்படும் இந்து கோவில்கள்

    கடந்த வாரம், பிரிஸ்பேனில் உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயண் கோவில் என்ற ஒரு முக்கிய இந்துக் கோவில் காலிஸ்தான் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் இரண்டு மாதங்களில் இந்துக் கோவில்களுக்கு எதிராக நடக்கும் நான்காவது சம்பவம் இதுவாகும்.

    ஜனவரி 23 அன்று, மெல்போர்னின் ஆல்பர்ட் பூங்காவில் உள்ள ISCKON கோவிலின் சுவர்கள் "ஹிந்துஸ்தான் முர்தாபாத்" என்ற கிராஃபிட்டியால் சேதப்படுத்தப்பட்டன.

    ஹிந்துஸ்தான் முர்தாபாத் என்றால் 'இந்தியா ஒழிந்து போகட்டும்' என்ற அர்த்தமாகும்.

    ஜனவரி 16ஆம் தேதி, விக்டோரியாவில் இருக்கும் கேரம் டவுன்ஸில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ சிவ விஷ்ணு கோயிலும் இதேபோல் சேதப்படுத்தப்பட்டது.

    ஆஸ்திரேலியாவில் உள்ள இந்துக் கோவில்களுக்கு எதிரான சம்பவங்களை இந்தியா பலமுறை கண்டித்ததுடன், ஆஸ்திரேலிய அரசாங்கத்திடம் இந்த பிரச்சினையை பற்றி பேசியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ஆஸ்திரேலியா

    சமீபத்திய

    NDA கூட்டணியில் ஓ.பி.எஸ்., மற்றும் இ.பி.எஸ். இருவரும் தொடர்கிறார்கள்: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நயினார் நாகேந்திரன்
    துருக்கி மற்றும் அஜர்பைஜானுடன் எந்த வணிக உறவும் கிடையாது; அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு முடிவு வர்த்தகம்
    பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழிக்க வெறும் 23 நிமிடங்கள் தான்; ராஜ்நாத் சிங் அதிரடி ராஜ்நாத் சிங்
    சீன, பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்தியாவின் பிரம்மோஸுக்கு இணையாக இல்லை: அமெரிக்க போர் நிபுணர் இந்தியா

    இந்தியா

    மாமல்லபுரத்தை தேடி வரும் பிரான்ஸ் நாட்டு பயணிகள் தமிழ்நாடு
    பெண்கள் அதிகம் முதலீடு செய்வது எங்கு தெரியுமா? ஆய்வறிக்கை முதலீட்டு திட்டங்கள்
    125 நகரங்களில் 5ஜி பிளஸ் சேவை அறிமுகப்படுத்திய ஏர்டெல்! நன்மைகள் என்ன? ஏர்டெல்
    இந்தியாவிற்கு வந்து ஆட்டோ ஓட்டிய பில் கேட்ஸ்: குதூகலத்தில் மஹிந்திரா குழுமம் இந்தியா

    ஆஸ்திரேலியா

    இரண்டாம் எலிசபெத்தின் படத்தை $5 நோட்டில் இருந்து மாற்றும் ஆஸ்திரேலியா உலகம்
    பஜனைகளை நிறுத்துங்கள்: ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்து கோவிலுக்கு மிரட்டல் உலகம்
    ஆஸ்திரேலிய இந்து கோவில்கள் சேதம்: கடுமையான நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை உலகம்
    ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்திய துணைத் தூதரகத்தில் காலிஸ்தானி ஆதரவாளர்கள் அட்டூழியம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025