NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மன்னர் மூன்றாம் சார்லஸ் விரைவில் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து
    அடுத்த செய்திக் கட்டுரை
    புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மன்னர் மூன்றாம் சார்லஸ் விரைவில் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து

    புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மன்னர் மூன்றாம் சார்லஸ் விரைவில் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து

    எழுதியவர் Sindhuja SM
    Feb 06, 2024
    12:21 pm

    செய்தி முன்னோட்டம்

    புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் விரைவில் குணமடைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    "மாண்புமிகு மன்னர் மூன்றாம் சார்லஸ் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்தை பெற இந்திய மக்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்" என்று பிரதமர் மோடி ட்விட்டரில் கூறியுள்ளார்.

    பக்கிங்ஹாம் அரண்மனை, திங்களன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது.

    அந்த அறிக்கையில், "புரோஸ்டேட் விரிவாக்கத்திற்கான அறுவை சிகிச்சைக்குப் பிறகு, மன்னர் சார்லஸுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    75 வயதான மன்னர் சார்ல்ஸுக்கு கடந்த மாதம் லண்டன் கிளினிக்கில் விரிவாக்கப்பட்ட புரோஸ்டேட் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    ஜனவரி 17 ஆம் தேதி அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

    பிரிட்டன்

     பொது மக்களை சந்திக்கும் பணிகளை ஒத்திவைக்க இருக்கும் மன்னர் சார்ல்ஸ் 

    அதற்கான மன்னர் சார்லஸ் சிகிச்சையைத் தொடங்கியுள்ளார்.

    மேலும், பொது மக்கள் எதிர்கொள்ளும் பணிகளை ஒத்திவைக்க மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    "அவர் தனது சிகிச்சையால் நலம் அடைந்துவிடலாம் என்று முற்றிலும் நேர்மறையான எண்ணத்துடன் இருக்கிறார், மேலும் விரைவில் முழு பொதுப் பணிக்குத் திரும்புவார்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    "ஊகங்களைத் தடுப்பதற்காகவும், புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும்" இந்த செய்தியை மக்களுடன் பகிர்ந்து கொளவதாக பிரிட்டன் அரண்மனை தெரிவித்துள்ளது.

    மன்னர் சார்லஸ் சிகிச்சை பெறும் போது வழக்கம் போல் அரசு வணிகம் மற்றும் அதிகாரப்பூர்வ ஆவணங்களை பார்வையிட்டு தனது பணிகளை தொடர உள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரதமர் மோடி
    பிரிட்டன்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025: மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் போட்டியை இடமாற்றம் செய்யக்கோரும் டெல்லி அணி டெல்லி கேப்பிடல்ஸ்
    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி

    பிரதமர் மோடி

    அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை புறக்கணிக்க இருக்கிறார் மம்தா பானர்ஜி மம்தா பானர்ஜி
    கோவை-பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையின் சோதனை ஓட்டம் துவக்கம்  வந்தே பாரத்
    போர் முடிந்த பிறகு, பிரதமர் மோடியை ரஷ்யாவிற்கு அழைத்த விளாடிமிர் புடின் விளாடிமிர் புடின்
    கேப்டன் விஜயகாந்த் மரணம்: முதல்வர் ஸ்டாலின் முதல் பிரதமர் மோடி வரை இரங்கல் விஜயகாந்த்

    பிரிட்டன்

    இங்கிலாந்து: பிரஸ்டன் நகரின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர் இந்தியா
    கொரோனா தடுப்பூசி போடாத மணமகள் தேவை - வினோத விளம்பரம் கொரோனா
    திப்பு சுல்தானின் வாளுக்கு மட்டும் ரூ.140 கோடி: பிரிட்டன் அரசாங்கம் சுருட்டிய இந்திய சொத்துக்களின் பட்டியல் இந்தியா
    "இளநிலைப் பட்டதாரிகளை வரவேற்கிறோம்": விசா விதி மாற்றங்கள் குறித்து பேசிய இங்கிலாந்து அமைச்சர்  உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025