NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெல்லி கர்தவ்யா பாதையில் நினைவு பூங்காவை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெல்லி கர்தவ்யா பாதையில் நினைவு பூங்காவை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார் 
    'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' நிறைவு விழாவில் பிரதமர் மோடி குடிமக்களிடம் உரையாற்ற உள்ளார்.

    டெல்லி கர்தவ்யா பாதையில் நினைவு பூங்காவை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார் 

    எழுதியவர் Sindhuja SM
    Oct 31, 2023
    10:38 am

    செய்தி முன்னோட்டம்

    டெல்லியில் உள்ள கர்தவ்யா பாதையில் இருக்கும் நினைவு தோட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார்.

    இந்தியாவின் 75 ஆண்டு கால சுதந்திரத்தை கொண்டாடும் விதமாக 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' என்ற கொண்டாட்டங்களை பிரதமர் மோடிஇரண்டு வருடங்களுக்கு முன் தொடங்கி வைத்தார்.

    அந்த கொண்டாட்டங்களின் நிறைவை குறிப்பதற்காக இந்த நினைவு பூங்கா இன்று திறந்து வைக்கப்பட உள்ளது.

    'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' நிறைவு விழாவில் பிரதமர் மோடி குடிமக்களிடம் உரையாற்ற உள்ளார்.

    இதற்காக நாட்டின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் டெல்லியில் கூடியுள்ளனர்.

    இதற்காக நாட்டின் 766 மாவட்டங்களின் 7,000 தொகுதிகளில் இருந்து 25,000 குடிமக்கள் டெல்லிக்கு வருகை தந்துள்ளனர்.

    டக்ஜ்வ்க்ன்

    ஸ்ரீநகரில் இருந்து திருநெல்வேலி வரை அனைத்து வகை மண்ணும் டெல்லிக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது

    இந்த 25,000 பேரும் தங்களது வீடுகளில் இருக்கும் மண்ணை ஒரு கலச பானையில் டெல்லிக்கு எடுத்து சென்றுள்ளனர்.

    புது டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னம் அருகே கட்டப்பட இருக்கும் புதிய நினைவுச் சின்னமான 'அம்ரித் வாடிகா' என்ற இடத்தில் அவர்கள் எடுத்து சென்றிருக்கும் மண் கொட்டப்படும்.

    ஸ்ரீநகரில் இருந்து திருநெல்வேலி வரை மற்றும் சிக்கிம் முதல் சூரத் வரை, இந்தியாவில் உள்ள அனைத்து வகை மண்ணும் டெல்லில் ஒன்றிணையப்போகிறது.

    அடுத்த நான்கு முதல் ஆறு மாதங்களுக்குள் இந்த நினைவு சின்னம் கட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரமாண்ட விதானம் மற்றும் தேசிய போர் நினைவுச்சின்னத்தின் கீழ் நேதாஜி போஸ் சிலைக்கு அருகில் இந்த புதிய நினைவு சின்னம் அமைக்கப்பட இருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    டெல்லி

    டெல்லியில் உள்ள இந்து கோவிலில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் வழிபாடு  ரிஷி சுனக்
    சவூதி இளவரசரை இன்று சந்திக்கிறார் பிரதமர் மோடி: இருதரப்பு பேச்சுவார்த்தையில் என்ன விவாதிக்கப்படும்? இந்தியா
    தீபாவளி 2023: பட்டாசுகளை விற்கவும் வாங்கவும் தடை விதித்தது டெல்லி அரசு  இந்தியா
    சீன ஜி20 குழுவின் பைகளில் சந்தேகத்திற்குரிய உபகரணங்கள் இருந்ததால் பரபரப்பு சீனா

    பிரதமர் மோடி

    'இன்றே விசாரணை' - நடிகர் விஷால் கொடுத்த புகாருக்கு மத்திய அரசு பதில் விஷால்
    குன்னூர் விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ. 2 லட்சம் நிவாரணம் குன்னூர்
    வீடியோ: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி இந்தியா
    மகாத்மா காந்திக்கு குடியரசு தலைவர் முர்மு மற்றும் பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025