Page Loader
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு 11 நாள் சிறப்பு சடங்குகளை செய்ய இருக்கிறார் பிரதமர் மோடி 

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு 11 நாள் சிறப்பு சடங்குகளை செய்ய இருக்கிறார் பிரதமர் மோடி 

எழுதியவர் Sindhuja SM
Jan 12, 2024
10:56 am

செய்தி முன்னோட்டம்

ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒரு ஆடியோ செய்தியை வெளியிட்டுள்ளார். இன்று முதல் 11 நாட்களுக்கு தான் 'அனுஸ்தான்' (சிறப்பு சடங்கு) செய்ய இருப்பதாக அவர் ஆடியோ செய்தியில் கூறியுள்ளார். பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள அந்த ஆடியோ செய்தியில், இந்த வரலாற்று மற்றும் மங்களகரமான நிகழ்வை காண தான் அதிர்ஷடம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து மக்களும் தன்னை ஆசிர்வாதம் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார்.

ட்ஜ்வ்க்ள் 

"வாழ்க்கையில் முதல்முறையாக, நான் உணர்ச்சிவசப்பட்டு": பிரதமர் மோடி 

"ராமர் கோவிலின் பிரான் பிரதிஷ்டைக்கு இன்னும் 11 நாட்களே உள்ளன. கும்பாபிஷேகத்தின் போது இந்திய மக்களை பிரதிநிதித்துவப்படுத்த கடவுள் என்னை உருவாக்கியுள்ளார். இதை மனதில் வைத்து இன்று முதல் 11 நாட்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்துகிறேன்." என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். " என் வாழ்க்கையில் முதல்முறையாக, நான் உணர்ச்சிவசப்பட்டு, இதுபோன்ற உணர்வுகளைஉணர்கிறேன்" என்று பிரதமர் தெரிவித்துள்ளார். கூடுதலாக, இந்த நேரத்தில் ஒருவரின் உணர்வுகளை வெளிப்படுத்துவது கடினம் என்றும் அவர் கூறியுள்ளார். "வாழ்க்கையின் சில தருணங்கள் தெய்வீக ஆசீர்வாதத்தால் மட்டுமே நிஜமாகின்றன. உலகம் முழுவதும் பரவியுள்ள ராமர் பக்தர்களுக்கு இது ஒரு புனிதமான தருணம். எங்கும் ராமர் பக்தியின் அற்புதமான சூழல் உள்ளது." என்று பிரதமர் மோடி மேலும் கூறியுள்ளார்.