NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஷெனாய் இசை, ரோடு ஷோ என களைகட்டிய வாரணாசி: பிரதமர் மோடி நாளை வேட்புமனு தாக்கல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஷெனாய் இசை, ரோடு ஷோ என களைகட்டிய வாரணாசி: பிரதமர் மோடி நாளை வேட்புமனு தாக்கல்
    இன்று வாரணாசியில் அவரது ஐந்து கிலோமீட்டர் தூர ரோடு ஷோ நடைபெறவுள்ளது

    ஷெனாய் இசை, ரோடு ஷோ என களைகட்டிய வாரணாசி: பிரதமர் மோடி நாளை வேட்புமனு தாக்கல்

    எழுதியவர் Venkatalakshmi V
    May 13, 2024
    02:53 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒரு சிறப்பு ஷெஹ்னாய் இசை, நாட்டுப்புற இசை, காசியின் பிரபலங்களை பற்றி போற்றும் பாடல்கள், பேண்ட் வாத்தியங்கள்- பிரதமர் நரேந்திர மோடி, 2024 லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனுவை மே 14 அன்று தாக்கல் செய்யத் தயாராகி வரும் நிலையில், அதற்கு ஒரு நாள் முன்னதாக, இன்று வாரணாசியில் அவரது ஐந்து கிலோமீட்டர் தூர ரோடு ஷோ நடைபெறவுள்ளது.

    அதில் மினி இந்தியா மற்றும் உத்தரபிரதேச கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக பல விஷயங்கள் இடம்பெறவுள்ளன.

    நாளை, மே 14ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை காலை 11:40 மணிக்கு பிரதமர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்வார்.

    இது இந்து பஞ்சாங்கத்தின்படி, 'அபிஜித் மஹுரத்' மற்றும் 'ஆனந்த் யோகம்' ஆகியவற்றின் கீழ் வருவதால் இது நல்ல நேரமாக கருதப்படுகிறது.

    இசை நிகழ்ச்சிகள்

    பிரதமர் மோடியை வரவேற்க தயாராகும் காசி 

    மதன்புரா அருகே பாரத ரத்னா உஸ்தாத் பிஸ்மில்லா கானின் குடும்ப உறுப்பினர்களின் ஷெஹ்னாய் இசையோடு 'அப்னி காஷி'க்கு பிரதமர் மோடி வரவேற்க்க உள்ளனர்.

    முன்னாள் எம்பி ராஜேஷ் மிஸ்ரா தலைமையில் பிரதமர் மீது முஸ்லிம் சமூகத்தினர் மலர் மழை பொழிவார்கள்.

    ரோட் ஷோவில் பிரதமர் மோடி தனது தாயின் பாதங்களைத் தொட்டு வணங்கும் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது.

    உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கட்சியினை சேர்ந்த அண்டை மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் மற்றும் பல மாநிலங்களின் முக்கியஸ்தர்கள் ஆகியோர் வேட்புமனுத் தேர்வில் பங்கேற்க்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரதமர் மோடி தனது சாலைக் கண்காட்சியில் கலந்து கொள்ள காசி வாசிகளுக்கு வீடு வீடாக அழைப்பு அனுப்பியுள்ளார்.

    பிரமாண்ட ரோடு ஷோ 

    பெரும் கொண்டாட்டத்தோடு நாமினேஷன் தாக்கல் செய்யவுள்ள மோடி`

    இன்று மாலை, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் சிங் கேட்டில் உள்ள பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் சிலைக்கு மாலை அணிவிப்பதில் பிரதமர் மோடியின் ரோட்ஷோ தொடங்கி, காசி விஸ்வநாதர் கோவிலில் முடிவடையும்.

    வாரணாசியின் வளர்ச்சியின் பழைய மற்றும் புதிய படங்கள் ரோட்ஷோவின் பாதை நெடுகிலும் காட்டப்படும்.

    தவிர காசியின் பிரபலங்களின் படங்களும் இதை இடம்பெறும். இவர்களில் பண்டிட் மதன் மோகன் மாளவியா, பிஸ்மில்லா கான், பண்டிட் கிஷன் மகராஜ், துளசிதாஸ், கபீர் தாஸ் மற்றும் சாந்த் ரவிதாஸ் ஆகியோர் அடங்குவர்.

    மற்றவர்களுக்கு பிரச்சாரம் செய்வதில் இருந்து விலகி பிரதமர் மோடி, தனக்காக வாக்கு சேகரிக்கவுள்ளதால், 5,000க்கும் மேற்பட்ட 'மாத்ரிசக்தி' விளையாட்டு வீரர்களும் ரோட் ஷோவில் ஈடுபடுவார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரதமர் மோடி
    நரேந்திர மோடி
    வாரணாசி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    பிரதமர் மோடி

    ராஜ்யசபாவுக்கு பரிந்துரைக்கப்பட்ட சுதா மூர்த்தி: பிரதமர் மோடி அறிவிப்பு  சுதா மூர்த்தி
    உலகின் மிக நீளமான இருவழி சுரங்கப்பாதையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி  அருணாச்சல பிரதேசம்
    'மாலத்தீவை இந்தியா புறக்கணித்ததால் சுற்றுலாத்துறை கடுமையாக பாதிப்பு': மன்னிப்பு கோரினார் மாலத்தீவின் முன்னாள் அதிபர்  மாலத்தீவு
    அக்னி-5 ஏவுகணையின் முதல் சோதனையான திவ்யாஸ்திரத்தை பாராட்டினார் பிரதமர் மோடி  இந்தியா

    நரேந்திர மோடி

    "நான் கர்பா செய்யும் வீடியோவைப் பார்த்தேன், டீப்ஃபேக்குகள் மிகப்பெரிய அச்சுறுத்தல்": பிரதமர் மோடி பிரதமர் மோடி
    INDvsAUS Final : ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியை நேரில் காண பிரதமர் மோடி வருகை ஒருநாள் உலகக்கோப்பை
    ராஜஸ்தான்: பிரதமரின் பேரணிக்கு அனுப்பப்பட்ட 6 போலீசார் லாரி விபத்தில் சிக்கி பலி ராஜஸ்தான்
    தேஜஸ் போர் விமானத்தில் பறந்த அனுபவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் பாதுகாப்பு துறை

    வாரணாசி

    ஞானவாபி மசூதி ஆய்வறிக்கை: வரும் 28ம் தேதி சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு  தொல்லியல் துறை
    ஞானவாபி மசூதி தொடர்பான அறிக்கையை தொல்லியல் துறை சமர்ப்பித்தது தொல்லியல் துறை
    ஸ்வர்வேத் மகாமந்திர்: உலகின் மிகப்பெரிய தியான மையம் பற்றிய சில தகவல்கள்  தியானம்
    ஞானவாபி மசூதி அடித்தளத்தில் வழிபாடு நடத்த ஹிந்துக்களுக்கு அனுமதி: வாரணாசி நீதிமன்றம்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025