NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / "நான் கர்பா செய்யும் வீடியோவைப் பார்த்தேன், டீப்ஃபேக்குகள் மிகப்பெரிய அச்சுறுத்தல்": பிரதமர் மோடி
    அடுத்த செய்திக் கட்டுரை
    "நான் கர்பா செய்யும் வீடியோவைப் பார்த்தேன், டீப்ஃபேக்குகள் மிகப்பெரிய அச்சுறுத்தல்": பிரதமர் மோடி
    டீப்ஃபேக்குகள் குறித்த கவலைகளை வெளிப்படுத்திய பிரதமர் மோடி.

    "நான் கர்பா செய்யும் வீடியோவைப் பார்த்தேன், டீப்ஃபேக்குகள் மிகப்பெரிய அச்சுறுத்தல்": பிரதமர் மோடி

    எழுதியவர் Srinath r
    Nov 17, 2023
    05:23 pm

    செய்தி முன்னோட்டம்

    புதுயுக டிஜிட்டல் மீடியாக்களில் டீப்ஃபேக்குகளின் அச்சுறுத்தல்களை சுட்டி காட்டிய பிரதமர் நரேந்திர மோடி, பொய்யான மற்றும் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுவதால்,

    அது எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.

    பாஜக தலைமையகத்தில் இன்று நடைபெற்ற 'தீபாவளி மிலன்' நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, டிஜிட்டல் மீடியாவில் டீப்ஃபேக்குகளின் ஆபத்துகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.

    மேலும் அவர், செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி, தனிநபர்களை தவறாக சித்தரித்து பரப்பப்படும் செய்திகளால் ஏற்படும், எதிர்மறை விளைவுகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல பத்திரிகையாளர்களை வலியுறுத்தினார்.

    2nd card

    டீப்ஃபேக் என்றால் என்ன?

    "நான் சமீபத்தில், நான் கர்பா பாடல் பாடும் வீடியோவை பார்த்தேன். அதுபோன்று இன்னும் பல வீடியோக்கள் இணையத்தில் உள்ளன" எனக் கூறிய பிரதமர் மோடி, டீப்ஃபேக்கின் அச்சுறுத்தல் பெரும் கவலையாக மாறி உள்ளதாகவும், நம் அனைவருக்கும் நிறைய பிரச்சனைகளை உருவாக்கலாம் எனவும் கூறினார்.

    டீப்ஃபேக் என்பது உள்நோக்கத்துடன் போலி தகவல்களை பரப்புவதற்காகவும், தீங்கிழைக்கும் நோக்கத்திற்காகவும் உருவாக்கப்படுகிறது.

    அது மக்களை துன்புறுத்த, மிரட்ட, இழிவுபடுத்த, புகழுக்கு கலங்கம் விளைவிக்கும் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.

    மேலும், டீப்ஃபேக் முக்கியமான செய்திகளை பற்றிய தவறான தகவல்களையும் குழப்பத்தையும் உருவாக்கலாம்.

    டீப்ஃபேக் வீடியோக்களை பரப்புபவர்களுக்கு, 3 வருட சிறை தண்டனையும், ஒரு லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என, மத்திய அரசு எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    3rd card

    டெல்லி பாஜக தலைமையகத்தில் தீபாவளி கொண்டாட்டம்

    தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு மக்களிடம் ஆதரவு அதிகரித்து வருவதாகவும்,

    முழுவதும் வளர்ச்சியடைந்த இந்தியா என்பது பெயரளவில் இல்லாமல், எதார்த்தத்தை அடைந்து விட்டதாகவும் தெரிவித்தார்.

    "நாம் இப்போது உலக அளவில் வலுவான இடத்தில் உள்ளோம். உலகம் நமது சாதனைகளை ஒப்புக்கொள்கிறது" என்றார்.

    பாரதிய ஜனதா சார்பில் டெல்லியில் உள்ள அதன் தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தீபாவளி விழாவில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, கட்சியின் தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இவ்விழாவிற்கு, பத்திரிக்கையாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரதமர் மோடி
    நரேந்திர மோடி
    செயற்கை நுண்ணறிவு
    பாஜக

    சமீபத்திய

    மோசமான பணியிட சூழல்; பெங்களூர் பொறியாளர் மரணத்தின் பின்னணியில் பகீர் குற்றச்சாட்டு பெங்களூர்
    மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளை பிளேஆஃப்க்கு அழைத்துச் சென்று ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை ஐபிஎல் 2025
    சசிகுமார்- சிம்ரனின் டூரிஸ்ட் பேமிலி OTT வெளியீட்டு விவரங்கள் இதோ! ஜியோஹாட்ஸ்டார்
    IPL 2025: ஒரு அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள் ஐபிஎல் 2025

    பிரதமர் மோடி

    அதிகரிக்கும் எதிர்ப்புகள்: இஸ்ரேல் போர் குறித்து காங்கிரஸ் கட்சி என்ன கூறியது? காங்கிரஸ்
    பிரதமர் மோடிக்கு கிரிக்கெட் பேட்டை பரிசளித்த இந்திய கிரிக்கெட் அணி; வைரலாகும் புகைப்படம் இந்திய கிரிக்கெட் அணி
    காலிஸ்தான் பயங்கரவாதிகள் அச்சுறுத்தலை தொடர்ந்து, வெளியுறவுதுறை அமைச்சரின் பாதுகாப்பு அதிகரிப்பு வெளியுறவுத்துறை
    தமிழகம்-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி தமிழ்நாடு

    நரேந்திர மோடி

    போர் விமானங்களைத் தயாரிக்க அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்தது இந்தியா  அமெரிக்கா
    கையெழுத்தாக இருக்கும் மெகா இந்திய-அமெரிக்க ஒப்பந்தங்கள் அமெரிக்கா
    "இந்தியா முன்னேறினால் உலகமும் முன்னேறும்": அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு இந்தியா
    பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்திற்கு பிறகு எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் இந்தியா

    செயற்கை நுண்ணறிவு

    தென்னிந்தியாவின் முதல் AI செய்தித் தொகுப்பாளரை அறிமுகம் செய்த கன்னட செய்தி நிறுவனம் இந்தியா
    'Llama 2' லாங்குவேஜ் மாடலை ஓபன் சோர்சாக வெளியிட்டுள்ளது மெட்டா மெட்டா
    'ஜெனிசிஸ்' துணையுடன், செய்திகள் எழுத தயாராகும் கூகிள் தொழில்நுட்பம்
    அடுத்த வாரம் வெளியாகிறது 'சாட்ஜிபிடி'யின் ஆண்ட்ராய்டு செயலி சாட்ஜிபிடி

    பாஜக

    கூட்டணியிலிருந்து விலகிய அதிமுக - பாஜகவுடன் இணையும் ஓபிஎஸ், டிடிவி ? அண்ணாமலை
    கூட்டணி முறிவு: டெல்லியில் பாஜக தலைவர்களை சந்திக்கும் அண்ணாமலை  அண்ணாமலை
    அதிமுக-பாஜக கூட்டணி முறிவு : காரணத்தினை கூறிய எடப்பாடி பழனிசாமி  எடப்பாடி கே பழனிசாமி
    29ம் தவணை தேர்தல் பத்திரங்களை விற்பனைக்காக வெளியிட்டுள்ளது SBI இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025