NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'பிரதமர் மோடி விஷப் பாம்பை போன்றவர்': மல்லிகார்ஜுன் கார்கே 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'பிரதமர் மோடி விஷப் பாம்பை போன்றவர்': மல்லிகார்ஜுன் கார்கே 
    இது நடந்து சில மணிநேரங்களுக்குப் பிறகு, கார்கே தனது கருத்தை வாபஸ் பெற்றார்.

    'பிரதமர் மோடி விஷப் பாம்பை போன்றவர்': மல்லிகார்ஜுன் கார்கே 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 27, 2023
    07:12 pm

    செய்தி முன்னோட்டம்

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் நரேந்திர மோடியை விஷ பாம்புடன் ஒப்பிட்டு விமர்சித்துள்ளார்.

    கர்நாடகாவின் கடக்கில் நடைபெற்ற பேரணியில் பேசிய கார்கே, பிரதமர் நாட்டை சீரழித்து விட்டார் என்று கூறியிருக்கிறார்.

    "அவர்களது சித்தாந்தமும் சிந்தனையும் மோசமாக இருப்பதால், அது நாட்டை நாசமாக்கி இருக்கிறது. மக்கள் அவரை பற்றி தவறாக நினைக்கிறார்கள். மோடி விஷப் பாம்பை போன்றவர். ஆனால், அவருக்கு நீங்கள் ஒரு வாய்ப்பை அளித்துவிட்டீர்கள்." என்று கார்கே கூறியுள்ளார்.

    மேலும், இது நடந்து சில மணிநேரங்களுக்குப் பிறகு, கார்கே தனது கருத்தை வாபஸ் பெற்றார்.

    "அது பிரதமர் மோடி பற்றிய கருத்து அல்ல. பாஜகவின் சித்தாந்தம் 'பாம்பு போன்றது' என்று நான் கூறினேன்" என்று அவர் அதற்கு பிறகு தெரிவித்துள்ளார்.

    details

    பாம்பை தொட முயன்றால் மரணம் நிச்சயம்: கார்கே 

    "அதை நான் தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடியை குறிப்பிட்டு ஒருபோதும் கூறவில்லை. அவர்களின் சித்தாந்தம் பாம்பு போன்றது, அதைத் தொட முயன்றால் மரணம் நிச்சயம்." என்று மேலும் அவர் கூறியுள்ளார்.

    கர்நாடக தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் காங்கிரஸும், பாஜகவும் ஒருவர் மீது ஒருவர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

    கர்நாடகாவின் பாஜக அரசு ஒப்பந்தத்தில் 40 சதவீத கமிஷன் வாங்கியதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

    இதற்கிடையில், பா.ஜ.க.வுக்கு வலு சேர்க்கும் வகையில், மாநிலத்தில் தொடர் பேரணிகள் மற்றும் ரோட்ஷோக்களை பிரதமர் மோடி நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரதமர் ஏப்ரல் 28 முதல் மே 7 வரை பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்துவார் என்று கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காங்கிரஸ்
    மோடி
    பிரதமர் மோடி
    நரேந்திர மோடி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    காங்கிரஸ்

    மகாத்மா காந்தியின் வாக்கியங்களை ட்விட்டரில் பதிவிட்ட ராகுல் காந்தி ராகுல் காந்தி
    எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவாரா: நிபுணர்களின் கருத்து இந்தியா
    ராகுல் காந்தியின் தகுதி நீக்க பிரச்சனை: டெல்லியில் காங்கிரஸின் மாபெரும் போராட்டம் ராகுல் காந்தி
    ராகுல் காந்திக்கு எதிராக விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு - காங்கிரஸ் ராகுல் காந்தி

    மோடி

    ஜி20 வெளியுறவுத்துறை கூட்டத்தில் என்னென்ன விவாதிக்கப்பட்டது வெளியுறவுத்துறை
    இந்தியாவின் முன்னேற்றம் குறித்து அதிக நம்பிக்கை உள்ளது: பில் கேட்ஸ் இந்தியா
    வடகிழக்கு முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி பாஜக
    கொன்ராட் சங்மா மீண்டும் மேகாலயா முதலமைச்சராக பதவியேற்றார் மேகாலயா

    பிரதமர் மோடி

    பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை ஆய்வு: பொங்கி எழும் எதிர்க்கட்சியினர் இந்தியா
    பிபிசி அலுவலகங்களில் இரண்டாம் நாளாக தொடரும் வருமான வரி சோதனை இந்தியா
    பிபிசி வருமான வரியை சரியாக கட்டவில்லை: வருமான வரித்துறை இந்தியா
    மேகாலயாவில் பிரதமர் மோடியின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு பிரச்சாரம்

    நரேந்திர மோடி

    சிவமொக்கா விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகா
    கர்நாடகாவில் ரோட்டில் இறங்கி பொது மக்களை சந்தித்த பிரதமர் மோடி கர்நாடகா
    உலக நிர்வாகம் தோல்வியடைந்துள்ளது: ஜி20 கூட்டத்தில் பிரதமர் மோடி இந்தியா
    பிரதமர் மோடியை சந்தித்தார் இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025