NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் முழு அளவையும் பயன்படுத்துங்கள்: பிரதமர் மோடி
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் முழு அளவையும் பயன்படுத்துங்கள்: பிரதமர் மோடி

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் முழு அளவையும் பயன்படுத்துங்கள்: பிரதமர் மோடி

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 13, 2024
    04:43 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர் பயங்கரவாத தாக்குதல்களை சந்தித்து வரும் நிலையில், அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்ய, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்எஸ்ஏ) அஜித் தோவல் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை உயர்மட்டக் கூட்டத்தை நடத்தினார்.

    இந்த அலோசனை கூட்டத்தின் போது, ​​ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வரும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பாதுகாப்பு நிலவரம் குறித்து பிரதமருக்கு விரிவான பார்வை அளிக்கப்பட்டது.

    அப்போது காஷ்மீரில் அமைதியை மீட்டெடுக்க நாட்டின் பயங்கரவாத எதிர்ப்பு திறன்களின் முழு அளவையும் பயன்படுத்துமாறு கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டார்.

    பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள்

    நான்கு நாட்களாக நடைபெறும் தீவிரவாத தாக்குதல்

    பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ​​ஆகியோருடன் பேசியதோடு, பாதுகாப்புப் படைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்தார்.

    கடந்த நான்கு நாட்களாக ரியாசி, கதுவா மற்றும் தோடா மாவட்டங்களில் நான்கு இடங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 யாத்ரீகர்கள் மற்றும் ஒரு சிஆர்பிஎஃப் ஜவான் கொல்லப்பட்டனர்.

    அதோடு, ஏழு பாதுகாப்பு வீரர்கள் மற்றும் பலர் காயமடைந்தனர்.

    ஜம்மு மற்றும் காஷ்மீரின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள வனப் பகுதிகளில், சமீபத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்ட தீவிரவாதிகளைக் கண்டறிந்து நடுநிலையாக்க பாதுகாப்புப் படையினரால் தீவிரமான தேடுதல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜம்மு காஷ்மீர்
    பிரதமர் மோடி
    பிரதமர்
    பயங்கரவாதம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ஜம்மு காஷ்மீர்

    ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த என்கவுன்டரில், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி கொல்லப்பட்டார் பயங்கரவாதம்
    "கௌமுத்ரா மாநிலங்கள்" கருத்துக்கு வருத்தம் தெரிவித்த திமுக எம்பி செந்தில்குமார் திமுக
    ஜம்மு காஷ்மீர் தொடர்பான இரண்டு மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றம் நாடாளுமன்றம்
    ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது குறித்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு உச்ச நீதிமன்றம்

    பிரதமர் மோடி

    'யோகி ஆதித்யநாத் தான் பிரதமர் மோடியின் அடுத்த குறி': சிறையில் இருந்து வெளியேறிய அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு  டெல்லி
    'மோடிக்கு 75 வயது ஆனாலும் அவர் தான் பிரதமராக வருவார்': அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமித்ஷா பதில் இந்தியா
    ஷெனாய் இசை, ரோடு ஷோ என களைகட்டிய வாரணாசி: பிரதமர் மோடி நாளை வேட்புமனு தாக்கல் நரேந்திர மோடி
    வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன் கங்கை நதியில் பிரதமர் மோடி பிரார்த்தனை  இந்தியா

    பிரதமர்

    இந்தியாவை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக 3 அமைச்சர்களை இடைநீக்கம் செய்தது மாலத்தீவு அரசு நரேந்திர மோடி
    5வது முறையாக ஆட்சியை கைப்பற்றினார் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா  பங்களாதேஷ்
    பிரான்சின் புதிய பிரதமர் கேப்ரியல் அட்டல் பற்றி சில தகவல்கள் பிரான்ஸ்
    நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது காதலரை மணந்தார் நியூசிலாந்து

    பயங்கரவாதம்

    லஷ்கர்-ஏ-தொய்பாவின் முக்கிய தளபதி அடையாளம் தெரியாத நபர்களால் பாகிஸ்தானில் கொலை பாகிஸ்தான்
    காலிஸ்தான் பயங்கரவாதியின் மிரட்டலை அடுத்து, விமானங்களுக்கு பாதுகாப்பு அதிகரித்த கனடா ஏர் இந்தியா
    பாகிஸ்தானில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி சுட்டுக்கொலை தீவிரவாதிகள்
    நாளைய உலகக் கோப்பை இறுதிப் போட்டியை நிறுத்தப்போவதாக பயங்கரவாத மிரட்டல்  ஒருநாள் உலகக்கோப்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025