NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்: டெல்லி அரசு
    அடுத்த செய்திக் கட்டுரை
    காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்: டெல்லி அரசு
    காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் - டெல்லி அரசு

    காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்: டெல்லி அரசு

    எழுதியவர் Nivetha P
    Nov 21, 2023
    07:21 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்படுகிறது.

    இன்று(நவ.,21)காலை டெல்லியில் காற்று மாசுபாடு மிக மோசமான அளவினை அடைந்துள்ளது.

    அதன்படி காற்றின் தர குறியீடு 323-ஆக இருந்துள்ளது.

    டெல்லி ஐஐடி பகுதியில் காற்றின் தர குறியீடு 321 ஆகவும், விமான நிலையம் அமைந்துள்ள பகுதியில் காற்றின் தர குறியீடு 336-ஆகவும், பூசா பகுதியில் 337-ஆகவும் பதிவாகியிருந்தது.

    இந்நிலையில் இதுகுறித்து டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் பேசுகையில், 'கடந்தாண்டுடன் ஒப்பிட்டு பார்க்கையில் பஞ்சாப் அரசு வேளாண் கழிவுகளை எரிப்பதை 50% அளவிற்கு கட்டுப்படுத்தியுள்ளது' என்று கூறியுள்ளார்.

    டெல்லி 

    சிறப்பு செயலாளர் தலைமையின்கீழ் 6 பேர் கொண்ட அதிரடிப்படை அமைப்பு 

    தொடர்ந்து பேசிய அவர், 'இதற்கு முன்னர் காற்றின் தரம் இதனைவிட மோசமாக இருந்ததுள்ளது. ஆனால் தற்போது காற்றின்தரம் சீராக முன்னேற்றம் அடைந்து வருகிறது, வரும் நாட்களில் இதன் தரம் மேம்படும்' என்றும் கூறியுள்ளார்.

    மேலும், காற்று மாசுபாட்டினை கட்டுப்படுத்த டெல்லி மக்கள் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும் என்று கூறிய அவர், இந்த விஷயத்தில் டெல்லி அரசு தீவிர கண்காணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

    தொடர்ந்து, மாசுபாட்டினை குறைக்க விதிகளை முறையாக பின்பற்றுவதை கண்காணிக்க சுற்றுசூழல் சிறப்பு செயலாளர் தலைமையின்கீழ் 6 பேர் கொண்ட அதிரடிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, கடந்த சனிக்கிழமை முதல் பி.எஸ்.3 மற்றும் பி.எஸ்.4 பெட்ரோல்-டீசல் வாகனங்கள் தவிர பிற லாரிகளும், பேருந்துகளும் காற்றின் தரம் மேம்பட்ட காரணத்தினால் நகருக்குள் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    எச்சரிக்கை
    காற்று மாசுபாடு
    இந்தியா

    சமீபத்திய

    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு
    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இந்தியா
    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு
    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்

    டெல்லி

    அண்டை மாநிலங்களில் இருந்து டெல்லிக்குள் பேருந்துகள் நுழைவதற்கு கடும் கட்டுப்பாடுகள்  ஹரியானா
    காங்கிரஸில் இணைகிறார் முன்னாள் டிஜிபி ரவி தமிழ்நாடு
    ஒரே பாலின திருமண வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல்  உச்ச நீதிமன்றம்
    அமலாக்க இயக்குனரகம் முன், இன்று ஆஜராகவுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்; கைது செய்யப்படலாம் என AAP சந்தேகம் அரவிந்த் கெஜ்ரிவால்

    எச்சரிக்கை

    தமிழகத்தில் புதுவித சைபர் குற்றம் தொடர்பான புகார்கள் - எச்சரிக்கை விடுக்கும் டிஜிபி சைலேந்திர பாபு சமூக வலைத்தளம்
    அடுத்த 5 நாட்களுக்கு கேரளாவில் கனமழை எச்சரிக்கை!  கேரளா
    காலிமனை பதிவிற்கு நிலத்தின் தற்போதைய புகைப்படம் கட்டாயம் - பதிவுத்துறை உத்தரவு  தமிழ்நாடு
    அரசு விரைவு பேருந்துகளை சாலையோர உணவகங்களில் நிறுத்துவதற்கான நிபந்தனைகள் தமிழ்நாடு

    காற்று மாசுபாடு

    போகி பண்டிகையையொட்டி பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம் - தமிழக அரசு வேண்டுகோள் தமிழக அரசு
    டெல்லியில் குறைந்த பட்சவெப்பநிலை 1.4ஆக பதிவு - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை குளிர்காலம்
    மிகவும் மோசமடைந்தது டெல்லியின் காற்று மாசு  டெல்லி
    டெல்லியில் மோசமடைந்த காற்றின் தரம்: பள்ளிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு அரவிந்த் கெஜ்ரிவால்

    இந்தியா

    உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து: மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டதை கண்டித்து தொழிலாளர்கள், குடும்பத்தினர் போராட்டம் உத்தரகாண்ட்
    உடல் உறுப்பு தானம் செய்வதில் முதலிடம் பிடித்த பெண்கள் - ஆய்வின் தகவல் மது
    நிஜ்ஜார் கொலையில் கனடாவிடம் ஆதாரம் கேட்கும் ஜெய்சங்கர் காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    பேருந்துகளுக்கு தடை, செயற்கை மழை- காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசின் திட்டம் டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025