NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஓய்வூதியம் பெறுவோருக்கு புகைப்படத்துடன் கூடிய மருத்துவ காப்பீடு அடையாள அட்டை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஓய்வூதியம் பெறுவோருக்கு புகைப்படத்துடன் கூடிய மருத்துவ காப்பீடு அடையாள அட்டை 
    ஓய்வூதியம் பெறுவோருக்கு புகைப்படத்துடன் கூடிய மருத்துவ காப்பீடு அடையாள அட்டை

    ஓய்வூதியம் பெறுவோருக்கு புகைப்படத்துடன் கூடிய மருத்துவ காப்பீடு அடையாள அட்டை 

    எழுதியவர் Nivetha P
    Jun 23, 2023
    01:40 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் ஓய்வூதியம் பெறுவோருக்கு மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டத்திற்கு, கருவூலம் மற்றும் கணக்குத்துறை தரவுத்தளத்தில் உள்ள விவரங்கள் அனைத்தும் சேகரித்து அதற்குரியோருக்கு மருத்துவ காப்பீடுக்கான அடையாள அட்டை அளிக்கப்படுகிறது.

    இதனிடையே ஓய்வூதியம் பெறும் பயனாளர்கள் தங்களது சங்கம் சார்பில் மருத்துவ காப்பீடு அடையாள அட்டையில் பயனாளி மற்றும் அவரது துணைவர் புகைப்படம் இணைக்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கையினை தமிழக அரசிடம் வைத்ததாக கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து, அவர்கள் கோரிக்கையின்படி, புகைப்படத்துடன் கூடிய மருத்துவ காப்பீடு அட்டையினை பெறுவதற்கான படிவங்களை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    அதன்படி பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை தேசிய சுகாதார காப்பீட்டு திட்டத்தின் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது.

    ஓய்வூதியம் 

    இணையத்தில் இருந்தே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

    அதன் பின்னர், பயனாளிகள் தங்களுக்கான மருத்துவ காப்பீடு அடையாள அட்டையினை இணையத்தில் இருந்தே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வருடாவருடம் வாழ்வு சான்றிதழினை அளிக்க நேர்காணலுக்காக கருவூல அலுவலகங்களுக்கு வரும் பயனாளிகளிடம் அலுவலர்கள் இந்த படிவத்தினை கொடுத்து பூர்த்தி செய்யுமாறு கூறி, அதனை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவினைபிறப்பித்துள்ளது.

    இதனை கொண்டு ஓய்வூதியம் பெறுவோரின் விவரங்கள் திருத்தப்படுவதோடு, புகைப்படமும் பதிவேற்றம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

    தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு குறித்த கடிதத்தினை தமிழக கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையர் கே.விஜயேந்திர பாண்டியன் அவர்கள் சென்னையில் உள்ள சம்பளம் வழங்கும் அதிகாரி, அனைத்து மாவட்ட கருவூல அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஓய்வூதியம்
    தமிழக அரசு

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    ஓய்வூதியம்

    ஏப்ரல் 1 முதல் புதிய NPS விதி: ஓய்வூதியம் மொத்த தொகையை பெற இதை செய்திடுங்கள் இந்தியா
    ஆயுள் காப்பீடு எடுப்பவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? தொழில்நுட்பம்
    புதிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதிய முறைக்கு மாற்றம்-அறிக்கையளிக்க தமிழக அரசு உத்தரவு தமிழ்நாடு
    2022-23 வரி சேமிப்பு முதலீடு திட்டம் - NPS எப்படி உதவும் தெரியுமா? கடன்

    தமிழக அரசு

    தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் கேழ்வரகு விநியோகம் - தமிழக அரசு தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசு பள்ளிகளில் குவியும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள்  தமிழ்நாடு
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - விசாரணைக்கு ஆஜராக 8 பேருக்கு சம்மன்  திருநெல்வேலி
    டாஸ்மாக் வருமானத்தை நம்பி அரசு இயங்கவில்லை - செந்தில் பாலாஜி  திமுக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025