NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மதுரையில் மருத்துவ கழிவுகளை குப்பையில் கலந்த தனியார் மருத்துவமனைக்கு அபராதம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மதுரையில் மருத்துவ கழிவுகளை குப்பையில் கலந்த தனியார் மருத்துவமனைக்கு அபராதம் 
    மதுரையில் மருத்துவ கழிவுகளை குப்பையில் கலந்த தனியார் மருத்துவமனைக்கு அபராதம்

    மதுரையில் மருத்துவ கழிவுகளை குப்பையில் கலந்த தனியார் மருத்துவமனைக்கு அபராதம் 

    எழுதியவர் Nivetha P
    Apr 27, 2023
    04:58 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலம், மதுரை மாவட்டத்தில் மருத்துவ கழிவுகளை குப்பை தொட்டியில் கலந்ததாக எழுந்த புகாரின் பேரில் தனியார் மருத்துவமனைக்கு மாநகராட்சி நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.

    மதுரையில் இருக்கும் தனியார் மருத்துவமனைகள் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை தொட்டிகளில் தொடர்ந்து மருத்துவ கழிவுகளை கலந்து வருவதாக புகார்கள் பல எழுந்து வந்துள்ளது.

    இந்நிலையில் இன்று(ஏப்ரல்.,27) மதுரை மாநகராட்சி நகர அலுவலர் வினோத் குமார் தலைமையில் காலை மதுரையின் பல பகுதிகளில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை தொட்டிகளில் மருத்துவ கழிவுகள் உள்ளதா? என்னும் ஆய்வினை மேற்கொண்டனர்.

    அப்போது அரசரடி பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் மிக ஆபத்தான மருத்துவ கழிவுகள் மாநகராட்சி குப்பை தொட்டியில் போடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

    மருத்துவ கழிவுகள் 

    கண்டறியப்பட்ட கழிவுகள் பறிமுதல் 

    அதன்படி அந்த குப்பைத்தொட்டியில் ஏறத்தாழ 50க்கும் மேற்பட்ட ரத்தம் கசிந்துருக்கக்கூடிய சிரஞ்சுகள், அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்திய பஞ்சுகள், மருத்துவமனை நோயாளிகளின் விவரங்கள், பில்கள் போன்ற பொருட்கள் போடப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

    இது குறித்து பேசிய மதுரை மாநகராட்சி நகர அலுவலர் வினோத் குமார், மருத்துவ கழிவுகள் இவ்வாறு குப்பை தொட்டியில் போடப்பட்டிருப்பது அதிர்ச்சியினை அளிக்கிறது.

    இங்கு கண்டறியப்பட்ட கழிவுகளை பறிமுதல் செய்து சென்னை மாநகராட்சி சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு அபராதம் விதித்துள்ளனர்.

    இந்த கழிவுகளை தூய்மைப்பணியாளர்கள் எடுக்கையில் அவர்களுக்கு சிரஞ்சி குற்றி நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மதுரை
    தமிழ்நாடு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    மதுரை

    கடந்த ஆண்டில் ரூ.11 கோடி மதிப்புள்ள 1400 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 1981 வழக்குகள் பதிவு இந்தியா
    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமையும் - மத்திய அரசு உறுதி இந்தியா
    மதுரையில் பரபரப்பு - ஆட்சியர் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 29,000 சேலைகள் மற்றும் 19,000 வேட்டிகள் கருகின பொங்கல் பரிசு
    அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து சமாதான கூட்டம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்தியா

    தமிழ்நாடு

    புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் அட்டை - உச்சநீதிமன்றம் உத்தரவு!  உச்ச நீதிமன்றம்
    வேங்கைவயல் விவகாரம்: குற்றவாளிகள் குறித்த முக்கிய தகவல் கிடைத்தது வேங்கை வயல்
    குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்து குலுங்கும் பச்சை ரோஜா  குன்னூர்
    நாமக்கல் மாவட்டம் விஷ ஊசிப்போட்டு 300 பேர் கொலை?-அரசு மருத்துவமனையில் விசாரணை  அரசு மருத்துவமனை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025