NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் - கருத்து கேட்புக்கூட்டத்தில் சீமான் எச்சரிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் - கருத்து கேட்புக்கூட்டத்தில் சீமான் எச்சரிக்கை
    கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் - கருத்து கேட்புக்கூட்டத்தில் சீமான் எச்சரிக்கை

    சென்னையில் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் - கருத்து கேட்புக்கூட்டத்தில் சீமான் எச்சரிக்கை

    எழுதியவர் Nivetha P
    Feb 01, 2023
    09:09 pm

    செய்தி முன்னோட்டம்

    முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக கட்சி தலைவருமான கருணாநிதி அவர்கள் கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி காலமானார். இவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவருக்கு அங்கு 2.23ஏக்கர் பரப்பளவில் நினைவிடம் கட்டும் பணி அரசு சார்பில் ஏற்கனவே நடந்து வருகிறது.

    இந்நிலையில் இது இல்லாமல், நடுக்கடலில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்திற்கு பிரமாண்ட 'பேனா' நினைவுசின்னம் ஒன்றினை அமைக்க தமிழக அரசு முடிவுசெய்துள்ளது.

    இந்நிலையில் இது குறித்த கருத்துக்கேட்பு கூட்டம் நேற்று(ஜன.,31) கலைவாணர் அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

    இதில் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் அளித்ததோடு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்து பேசவும் செய்துள்ளார்.

    கடும் எச்சரிக்கை

    பேனா நினைவு சின்னம் வைப்பதால் சுற்றுசூழலில் பாதிப்பு ஏற்படும்

    இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ஐயா கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் வைப்பதை எதிர்க்கவில்லை, ஆனால் கடலில் வைக்கக்கூடாது.

    அது சுற்றுசூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

    360 மீட்டர் கடலுக்குள் 8551.13 சதுரமீட்டர் பரப்பை இதற்காக எடுக்கிறார்கள். கிட்டத்தட்ட அரை ஏக்கர் கடலில் எடுக்கப்படுகிறது.

    கடலுக்குள் கல், மண்ணை கொட்டி அதன்மேல் அந்த பேனாவை நிறுவ வேண்டும்.

    அதனை பார்க்க செல்லும் மக்கள் குப்பைகளை கடலில் நிச்சயம் எரிந்து செல்வர்.

    ஏற்கனவே இந்திய நிலப்பரப்பு அளவிற்கு கடலுக்குள் குப்பை உள்ளதாக கூறப்படும் நிலையில் இது மேலும் குப்பையை அதிகரிக்கக்கூடும் என்று கூறினார்.

    மேலும் எதிர்ப்புகளை மீறி கடலுக்குள் நினைவுச்சின்னம் வைத்தால் ஒருநாள் எங்கிருக்கிறது என்று தெரியாமல் போய்விடும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மெரினா கடற்கரை

    சமீபத்திய

    இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 55% உயர்ந்து, பெட்ரோலியம், வைர விற்பனையை முந்தியது ஸ்மார்ட்போன்
    2005 பெங்களூரு, 2006 நாக்பூர் தாக்குதல்கள் உட்பட இந்தியாவின் 3 பெரிய தாக்குதல்களுக்குக் காரணமான லஷ்கர் பயங்கரவாதி கொலை லஷ்கர்-இ-தொய்பா
    சாப்ட்வேர் என்ஜினீயர்களின் ஊதிய ஆதிக்கம் நீடிக்காது என்று எச்சரிக்கும் ஜோஹோவின் ஸ்ரீதர் வேம்பு செயற்கை நுண்ணறிவு
    அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது: IMD  வானிலை ஆய்வு மையம்

    மெரினா கடற்கரை

    மாண்டஸ் புயல்: மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை உடைந்தது மகாபலிபுரம்
    நம்ம சென்னையில், மெரினா கடற்கரையையும் பெசன்ட் நகரையும் இணைக்க வரப்போகிறது ரோப் கார் சென்னை
    சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து மக்கள் நீதி மய்ய தலைவர் பேச்சு கமலஹாசன்
    பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் 235 டன் குப்பைகள் அகற்றம் சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025