NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்: ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம்
    இந்தியா

    விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்: ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம்

    விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்: ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம்
    எழுதியவர் Sindhuja SM
    Jan 20, 2023, 06:02 pm 1 நிமிட வாசிப்பு
    விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்: ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம்
    "தனது கடமைகளை நிறைவேற்றத் தவறியதற்காக"விமான சேவை இயக்குனருக்கு ரூ.3 லட்சம் அபராதம்

    விமானத்தில் சிறுநீர் கழித்த சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு இன்று(ஜன:20) சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம்(DGCA) ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது. 'ஏர் இந்தியா' விமான சேவை இயக்குநருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பவம் நடந்த விமானத்தின் பொறுப்பாளரான விமானியின் உரிமம் 3 மாதங்களுக்கு தற்காலிக ரத்து செய்யப்பட்டுள்ளது. "தனது கடமைகளை நிறைவேற்றத் தவறியதற்காக" ஏர் இந்தியாவின் விமான சேவை இயக்குனருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக DGCA கூறியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 26 அன்று விமானத்தில் பயணித்த பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவத்திற்காக பயணி சங்கர் மிஸ்ராவுக்கு நான்கு மாதங்கள் விமானத்தில் பறக்க நேற்று இந்த விமான நிறுவனம் தடை விதித்தது.

    என்ன நடந்தது?

    முன்னதாக அவருக்கு விதிக்கப்பட்ட 30 நாள் தடையுடன் இந்த 3 மாத தடையும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் ஜனவரி 4 ஆம் தேதிதான் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின்(DGCA) கவனத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, பல்வேறு விதிமுறைகளை மீறியதால் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் 26ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்திற்கு ஜனவரி 4ஆம் தேதி தான் 'ஏர் இந்தியா' நிறுவனம் போலீஸில் புகார் அளித்தது. பிரச்சனையை இரு தரப்பினரும் பேசி சமாதானம் செய்து கொண்டனர் என்று நினைத்ததாக 'ஏர் இந்தியா' இதற்கு பதிலளித்திருந்தது. புகாரளித்து இரண்டு நாட்களில் தலைமறைவாக இருந்த பயணி சங்கர் மிஸ்ரா பெங்களூருரில் வைத்து கைது செய்யப்பட்டார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    மின்சார வாகனம் ஊக்குவிப்பு - ரூ.800 கோடியில் உருவாகும் சார்ஜ் நிலையங்கள் எலக்ட்ரிக் வாகனங்கள்
    ஐபிஎல் 2023 : டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் ரிஷப் பந்திற்கு பதிலாக அபிஷேக் போரல் சேர்ப்பு ஐபிஎல் 2023
    கடலூரில் ஆன்லைனில் வாங்கிய பொருளை தீயிட்டு கொளுத்திய பரபரப்பு சம்பவம் கடலூர்
    ஐபிஎல் : ஆரஞ்சு கேப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களின் பட்டியல் சென்னை சூப்பர் கிங்ஸ்

    இந்தியா

    திரிபுராவில் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் திரிபுரா
    இந்தியாவில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா: ஒரே நாளில் 2,151 கொரோனா பாதிப்பு கொரோனா
    உக்ரைனில் இருந்து திரும்பி இருக்கும் மருத்துவ மாணவர்களுக்கு தனி தேர்வு உக்ரைன்
    18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து: அரசு அதிரடி நடவடிக்கை உஸ்பெகிஸ்தான்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023