NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்: ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்: ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம்
    "தனது கடமைகளை நிறைவேற்றத் தவறியதற்காக"விமான சேவை இயக்குனருக்கு ரூ.3 லட்சம் அபராதம்

    விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்: ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம்

    எழுதியவர் Sindhuja SM
    Jan 20, 2023
    06:02 pm

    செய்தி முன்னோட்டம்

    விமானத்தில் சிறுநீர் கழித்த சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு இன்று(ஜன:20) சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம்(DGCA) ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது. 'ஏர் இந்தியா' விமான சேவை இயக்குநருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும், சம்பவம் நடந்த விமானத்தின் பொறுப்பாளரான விமானியின் உரிமம் 3 மாதங்களுக்கு தற்காலிக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    "தனது கடமைகளை நிறைவேற்றத் தவறியதற்காக" ஏர் இந்தியாவின் விமான சேவை இயக்குனருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக DGCA கூறியுள்ளது.

    கடந்த ஆண்டு நவம்பர் 26 அன்று விமானத்தில் பயணித்த பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவத்திற்காக பயணி சங்கர் மிஸ்ராவுக்கு நான்கு மாதங்கள் விமானத்தில் பறக்க நேற்று இந்த விமான நிறுவனம் தடை விதித்தது.

    DGCA

    என்ன நடந்தது?

    முன்னதாக அவருக்கு விதிக்கப்பட்ட 30 நாள் தடையுடன் இந்த 3 மாத தடையும் சேர்க்கப்பட்டுள்ளது.

    இந்தச் சம்பவம் ஜனவரி 4 ஆம் தேதிதான் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின்(DGCA) கவனத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, பல்வேறு விதிமுறைகளை மீறியதால் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    கடந்த நவம்பர் 26ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்திற்கு ஜனவரி 4ஆம் தேதி தான் 'ஏர் இந்தியா' நிறுவனம் போலீஸில் புகார் அளித்தது.

    பிரச்சனையை இரு தரப்பினரும் பேசி சமாதானம் செய்து கொண்டனர் என்று நினைத்ததாக 'ஏர் இந்தியா' இதற்கு பதிலளித்திருந்தது.

    புகாரளித்து இரண்டு நாட்களில் தலைமறைவாக இருந்த பயணி சங்கர் மிஸ்ரா பெங்களூருரில் வைத்து கைது செய்யப்பட்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    இந்தியா

    16 நகரங்களில் இன்று முதல் ஜியோ 5ஜி சேவை தொடக்கம்! வணிக செய்தி
    மக்கள்தொகை எண்ணிக்கை: சீனாவை முந்தியதா இந்தியா சீனா
    இந்தியாவின் முதல் 13வது ஜெனரேஷன் லெனோவா Yoga 9i லேப்டாப் அறிமுகம்! தொழில்நுட்பம்
    இனி தப்பிக்கமுடியாது! Soundboxஐ அறிமுகப்படுத்திய கூகுள் பே கூகுள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025