NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெல்லியில் போலி மருத்துவர்களால் மரணமடைந்த நோயாளிகள் - பகீர் தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெல்லியில் போலி மருத்துவர்களால் மரணமடைந்த நோயாளிகள் - பகீர் தகவல்
    டெல்லியில் போலி மருத்துவர்களால் மரணமடைந்த நோயாளிகள் - பகீர் தகவல்

    டெல்லியில் போலி மருத்துவர்களால் மரணமடைந்த நோயாளிகள் - பகீர் தகவல்

    எழுதியவர் Nivetha P
    Nov 16, 2023
    08:20 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லி கிரேட்டர் கைலாஷ் பகுதியில் அமைந்துள்ளது அகர்வால் மருத்துவ மையம்.

    இங்கு நீரஜ் அகர்வால், அவரது மனைவி பூஜா அகர்வால், மகேந்தர் சிங், ஜஸ்ப்ரீத் சிங் உள்ளிட்டோர் மருத்துவர்களாக பணியாற்றியுள்ளனர்.

    கடந்த 2022ம் ஆண்டு இம்மருத்துவமனையில் அஸ்கர் அலி என்பவர் பித்தப்பை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அவருக்கு மருத்துவர்.,ஜஸ்ப்ரீத் சிங் மூலம் அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று முதலில் கூறப்பட்டநிலையில், அவருக்கு பதில் பூஜாஅகர்வால், மகேந்தர் சிங் அறுவைச்சிகிச்சை செய்துள்ளனர்.

    அறுவைச்சிகிச்சை முடிந்தவுடனேயே அஸ்கர்அலி கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டு துடித்துள்ளார்.

    உடனே அவரை வேறு மருத்துவமனைக்கு அவரது உறவினர்கள் கொண்டு சென்றுள்ளனர்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

    தவறான அறுவைச்சிகிச்சை காரணமாக தான் அஸ்கர் அலி உயிரிழந்ததாக புகார் அளிக்கப்பட்டது.

    போலி மருத்துவர்கள் 

    போலி மருத்துவர்கள் 4 பேர் கைது 

    இப்புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டதில் நீரஜ் அகர்வால், பூஜா அகர்வால், மகேந்தர் சிங், ஜஸ்ப்ரீத் சிங் உள்ளிட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து பேசிய காவல்துறை, 2016ம்.,ஆண்டு முதல் இந்த மருத்துவமனை மீது குறைந்தபட்சம் 9 புகார்கள் உள்ள நிலையில், 7 புகார்கள் மீதான விசாரணையில் மருத்துவ அலட்சியம் காரணமாக நோயாளிகள் உயிரிழந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து காவல்துறை சார்பில் ஓர் மருத்துவக்குழு மருத்துவமனையை ஆய்வு செய்துள்ளது.

    அதில் நீரஜ் அகர்வாலை தவிர மற்றவர்கள் அனைவரும் போலி மருத்துவர்கள் என்பது தெரியவந்துள்ளது என்று கூறியுள்ளனர்.

    மேலும் அந்த மருத்துவமனையிலிருந்து, தகுதியற்ற அறுவை சிகிச்சை கத்திகள், 47-வங்கிகளின் காசோலை புத்தகங்கள், 54 வெவ்வேறு வங்கிகளின் ஏ.டி.எம்.கார்டுகள், கிரெடிட்-கார்டு மெஷின்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மருத்துவமனை
    டெல்லி
    அறுவை சிகிச்சை
    காவல்துறை

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    மருத்துவமனை

    ஒரே நாளில் 6 முறை இதயத்துடிப்பு நின்றுபோன மாணவர்: காப்பாற்றிய மருத்துவர்கள் இங்கிலாந்து
    டிஸ்சார்ஜ் ஆனார் செந்தில் பாலாஜி - மீண்டும் புழல் சிறையில் அடைப்பு  செந்தில் பாலாஜி
    மருத்துவருக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய மறுத்த தமிழக மருத்துவமனைகள் கேரளா
    மதுரை அரசு மருத்துவமனை - குடும்பநல அறுவை சிகிச்சைகளை புறக்கணித்து மருத்துவர்கள் போராட்டம்  அரசு மருத்துவமனை

    டெல்லி

    கேரள குண்டுவெடிப்பு எதிரொலி: தமிழக எல்லையோர மாவட்டங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு  கேரளா
    க்ரைம் ஸ்டோரி: பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த டெலிவரி ஏஜென்ட்- டெல்லி அருகே கொடூரம்  க்ரைம் ஸ்டோரி
    மதுபானக் கொள்கை வழக்கில் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்  ஆம் ஆத்மி
    'டிஸ்லெக்ஸியா' விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு சிவப்பு விளக்குகளால் மிளிர்ந்த குடியரசு தலைவர் மாளிகை  மன ஆரோக்கியம்

    அறுவை சிகிச்சை

    உடல் உறுப்பு தானம் பெறுவதற்கு தமிழகத்தில் 6,785 பேர் காத்திருப்பு: சுகாதாரத்துறை செயலாளர் தகவல் தமிழ்நாடு
    கர்நாடகா முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு இதய அறுவை சிகிச்சை கர்நாடகா
    செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் செந்தில் பாலாஜி
    உலகின் முதல் முழு கண் மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்காவில் வெற்றிகரமாக நிறைவேற்றம் மருத்துவம்

    காவல்துறை

    டெல்லியில் சுவிட்சர்லாந்து பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள் டெல்லி
    கலவரத்தை தூண்டும் கருத்துக்களை கூறியதாக மத்திய அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்தது கேரள காவல்துறை  கேரளா
    கேரளா குண்டுவெடிப்பு சம்பவம் - தமிழக பாதுகாப்பினை உறுதி செய்ய வலியுறுத்தும் உளவுத்துறை கேரளா
    மணிப்பூரில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒரு போலீஸ்காரர் பலி: 3 பேர் காயம்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025