NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தனி நபருக்காக இயக்கப்பட்ட ரயில் - சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தனி நபருக்காக இயக்கப்பட்ட ரயில் - சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி 
    தனி நபருக்காக இயக்கப்பட்ட ரயில் - சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி

    தனி நபருக்காக இயக்கப்பட்ட ரயில் - சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி 

    எழுதியவர் Nivetha P
    Nov 17, 2023
    07:18 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை எழும்பூர் ரயில்நிலையத்தில் நேற்று(நவ.,16)ரயில்வே வாரிய உறுப்பினரான ரூப் நாராயணன் மட்டும் பயணிக்க 10 பெட்டிகள் கொண்ட ரயில் ஒன்று இயக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக 1000 பேர் பயணம் மேற்கொள்ளும் பாண்டியன் விரைவு ரயில் வழக்கமான நடைமேடையில் நிறுத்தப்படாமல் வேறு நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்ததால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

    இதுகுறித்து எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளதோடு ரயில்வே பொது மேலாளர் உரிய விளக்கமளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து சு.வெங்கடேசன் கூறியதாவது, 'மதுரை செல்வதற்காக நேற்று ரயில் நிலையம் வந்தேன். பாண்டியன் விரைவு ரயில் எப்போதும் பயணிகள் உள்ளே நுழைந்ததும் ஏற ஏதுவாக நடைமேடை-4ல் நிறுத்தப்பட்டிருக்கும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக பாண்டியன் விரைவு ரயில் நடைமேடை-5ல் நிறுத்தப்பட்டிருந்தது' என்று தெரிவித்தார்.

    பயணம் 

    உரிய விளக்கம் அளிக்கும்படி வலியுறுத்தல் 

    மேலும் அவர், 'நடைமேடை மாற்றப்பட்டதால் ஏராளமான பயணிகள் அவதிஅவதியாக படிக்கெட்டுகளில் ஏறி அடுத்த நடைமேடைக்கு விரைந்து கொண்டிருந்தனர்' என்றும்,

    '4ம்-நடைமேடையில் யாரும் ஏறாத ரயில் ஒன்று நின்று கொண்டிருந்தது' என்றும் குறிப்பிட்டார்.

    "இதுகுறித்து விசாரிக்கையில், ரயில்வே போர்டு உறுப்பினர் ரூப் நாராயணன் சங்கர் வந்துள்ளார். நாளை அவர் ராமேஸ்வரம் சென்று ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். அவருக்காக தான் இந்த ரயில் நிற்கிறது என்று கூறினர்"என்றும்,

    "ஒரு தனிநபர் படிக்கெட்டுகள் ஏறாமல் வசதியாக ரயிலில் எற, 1000 பயணிகள் அலைக்கழிக்கப்பட்டது மிகப்பெரிய கொடுமை. இதற்கு தெற்கு ரயில்வே மேலாளர் பொறுப்பெடுத்து உரிய விளக்கமளிக்கவேண்டும்"என்றும் சு.வெங்கடேசன் ஆவேசமாக பேசியுள்ளார்.

    எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும் மக்களாட்சியின் ஜனநாயகத்தை மீறும் உரிமை யாருக்கும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரயில் நிலையம்
    சென்னை
    ராமேஸ்வரம்
    பயணம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்காக இந்தியாவில் உளவு பார்த்ததாக பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது யூடியூபர்
    ரவி மோகன் குற்றச்சாட்டுகளை மறுத்து அறிக்கை வெளியிட்ட மாமியார் சுஜாதா விஜயகுமார் ரவி
    அதிக கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பதில் இவ்ளோ நன்மைகள் இருக்கா? நாம் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியவை கடன்
    2025 அவெனிஸ் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது சுஸூகி; விலை எவ்ளோ தெரியுமா? சுஸூகி

    ரயில் நிலையம்

    செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இறந்து கிடந்த நபர்- 5 மணி நேரமாக சடலம் அகற்றப்படாத அவலம் செங்கல்பட்டு
    உத்தரப்பிரதேசம் விரைவு ரயிலில் தீ விபத்து - 19 பேர் காயம் உத்தரப்பிரதேசம்

    சென்னை

    ஒரு மணி நேரத்தில் சென்னையில் தேங்கும் மழைநீரை அகற்ற நடவடிக்கை - அமைச்சர் கே.என்.நேரு  கனமழை
    முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு டெங்கு தமிழ்நாடு
    வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்கினால் கடும் நடவடிக்கை தமிழ்நாடு
    சென்னைவாசிகளுக்கு தினமும் 1,000 எம்.எல்.டி. குடிநீர் விநியோகம் - அமைச்சர் கே.என்.நேரு   குடிநீர்

    ராமேஸ்வரம்

    ராமேஸ்வர கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்கக்கட்டிகள்-12 கிலோ தங்கம் பறிமுதல் கடற்படை
    கச்சத்தீவு திருவிழா: இந்தியாவிலிருந்து 2,408 பேர் பங்கேற்பு யாழ்ப்பாணம்
    கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா - ராமேஸ்வரத்தில் இருந்து மக்கள் பயணம் இந்தியா
    தமிழகத்தில் 4 இடங்களில் மிதக்கும் இறங்கு தளங்கள் அமைக்க அனுமதி தமிழ்நாடு

    பயணம்

    இந்த வருடம் கோடை விடுமுறைக்கு ஆந்திர மாநிலம் போகலாமா? சுற்றுலா
    காஷ்மீர் சுற்றுலா: அதிகம் பிரபலமாகாத சுற்றுலா இடங்கள் சுற்றுலா
    நடிகர் அஜித்தின் உலக சுற்றுப்பயணம்  குறித்து வெளியான புது தகவல்  நடிகர் அஜித்
    சென்னை மெட்ரோ ரயில் இன்று முதல் வாட்ஸ்அப் இ-டிக்கெட்டுகளை அறிமுகப்படுத்துகிறது!  வாட்ஸ்அப்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025