NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பல்லடம் கொலை சம்பவம்: CCTV -யில் சிக்கிய முக்கிய குற்றவாளி வெங்கடேஷ்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பல்லடம் கொலை சம்பவம்: CCTV -யில் சிக்கிய முக்கிய குற்றவாளி வெங்கடேஷ்
    பல்லடம் கொலை சம்பவம்: CCTV -யில் சிக்கிய முக்கிய குற்றவாளி வெங்கடேஷ்

    பல்லடம் கொலை சம்பவம்: CCTV -யில் சிக்கிய முக்கிய குற்றவாளி வெங்கடேஷ்

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 05, 2023
    12:38 pm

    செய்தி முன்னோட்டம்

    இரு தினங்களுக்கு முன்னர், பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த கொடூர சம்பவத்தில், குற்றவாளிகளை கைது செய்யும் வரை, உடலை பெற மாட்டோம் என, இறந்தவர்களின் உறவினர்கள் இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில், குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைத்த திருப்பூர் காவல்துறை, செல்லமுத்து என்பவரை நேற்று கைது செய்தது.

    ஆனால், கைதில் இருந்து தப்பிக்கும் நோக்கோடு, அவர் மாடியிலிருந்து தப்பிக்க யத்தனித்ததால், அவர் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், அதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    card 2

    கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதம் மீட்பு 

    செல்லமுத்துவிடம் விசாரணை செய்ததில், கொலைக்கு பயன்படுத்திய அருவாள் மீட்கப்பட்டதாகவும் கூறியது காவல்துறை.

    இதை தொடர்ந்து, சோனை முத்தையா என்பவரையும் கைது செய்து, விசாரித்து வருவதாக கூறப்பட்டது.

    இந்நிலையில், இந்த கொடூர சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும், வெங்கடேசன் என்பவரது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டத்தில், காவல்துறையினர் முகாமிட்டு, வெங்கடேசனின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

    குற்றவாளி வெங்கடேசனின் செல்போன் சிக்னல், கடைசியாக நெல்லை மாவட்டத்தில் காட்டியதாகவும், அதனால், அவர் அந்த ஏரியாவில் பதுங்கியிருக்கலாம் என போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    இதனை தொடர்ந்து, அங்கிருந்து பெறப்பட்ட CCTV பதிவு ஒன்றில், வெங்கடேசன் முகம் பதிவாகியுள்ளதெனவும் கூறியுள்ளனர், காவல்துறையினர்.

    இதனால், கொலையாளியை நெருங்கி விட்டதாகவும், விரைவில் கைது செய்யப்படுவான் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கொலை
    காவல்துறை
    காவல்துறை
    தமிழக காவல்துறை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    கொலை

    டெல்லி இளம்பெணின் கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க கோரிக்கை  இந்தியா
    காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி குக்கரில் அவித்த காதலன்: மும்பையின் கொடூர கொலை வழக்கு  இந்தியா
    மும்பை கொடூர கொலை: குற்றம்சாட்டப்பட்டவருக்கு HIV பாசிட்டிவ் இந்தியா
    தாயின் உடலுடன் காவல்துறையில் சரணடைந்த மகள்: பெங்களூரில் பரபரப்பு  இந்தியா

    காவல்துறை

    தங்கையின் துண்டிக்கப்பட்ட தலையுடன் காவல்துறையில் சரணடைந்த அண்ணன்  உத்தரப்பிரதேசம்
    மணிப்பூரை அடுத்து மேற்கு வங்கத்தில்: அரை நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்ட 2 பெண்கள் மேற்கு வங்காளம்
    சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட பெண் வியாபாரி - 5 பேர் கைது  கொலை
    பீகாரில் 40 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை பீகார்

    காவல்துறை

    கலவரத்தின் போது பதிவு செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான ஜீரோ FIRகள்: அலறும் மணிப்பூர் போலீஸ்  மணிப்பூர்
    என்.எல்.சி.-கடலூரில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்காலிக நிறுத்தம்  காவல்துறை
    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்து - 26 பேர் பலி  பிலிப்பைன்ஸ்
    என்.எல்.சி.க்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் - அன்புமணி ராமதாஸ் கைது  பாமக

    தமிழக காவல்துறை

    காணும் பொங்கல்: சுற்றுலா தளங்களில் குவியும் பொதுமக்கள் பொங்கல்
    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டின் கொள்ளை வழக்கில் சிக்கிய மூன்றாவது ஆள் யார்? வைரல் செய்தி
    ஐஸ்வர்யா வீட்டின் கொள்ளை விவகாரத்தில் புதிய ட்விஸ்ட்: காணாமல் போனதோ 60 சவரன்; மீட்கப்பட்டதோ 100 சவரன்! தமிழ்நாடு
    சென்னை கலாஷேத்ரா மாணவிகளின் பாலியல் தொல்லை விவகாரம் - விசாரணை நடத்த டிஜிபி உத்தரவு சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025