NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பழனி முருகர் கோயில் கும்பாபிஷேகம் - திண்டுக்கல் முழுவதும் 27ம் தேதி உள்ளூர் விடுமுறை
    அடுத்த செய்திக் கட்டுரை
    பழனி முருகர் கோயில் கும்பாபிஷேகம் - திண்டுக்கல் முழுவதும் 27ம் தேதி உள்ளூர் விடுமுறை
    பழனி முருகர் கோயில் கும்பாபிஷேகம் - திண்டுக்கல் முழுவதும் 27ம் தேதி உள்ளூர் விடுமுறை தமிழக அரசு உத்தரவு

    பழனி முருகர் கோயில் கும்பாபிஷேகம் - திண்டுக்கல் முழுவதும் 27ம் தேதி உள்ளூர் விடுமுறை

    எழுதியவர் Nivetha P
    Jan 24, 2023
    08:33 pm

    செய்தி முன்னோட்டம்

    திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி கோயிலில் வரும் 27ம் தேதி கும்பாபிஷேக திருவிழா நடைபெறவுள்ளது.

    இதனையொட்டி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக போற்றப்படும் பழனி தண்டாயுதபாணி கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு 2023ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

    இறுதியாக கடந்த 2006ம் ஆண்டு பழனி முருகர் கோயிலில் கும்பாபிஷேக திருவிழா நடத்தப்பட்டது என்பது குறிப்பிடவேண்டியவை.

    இதனை முன்னிட்டு தமிழக அரசு 27ம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

    குலுக்கல் முறையில் தேர்வு

    பக்தர்களுக்காண அடிப்படை வசதிகள்-முன்னேற்பாடுகள் தீவிரம்

    பழனி சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி என்று கூறப்படுகிறது. பழனி முருகர் சிலை போகர் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது என்று புராண கதைகள் கூறுகிறது.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலாக போற்றப்படும் இதன் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற பல்வேறு ஏற்பாடுகளும், நடவடிக்கைகளும் கோயில் நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த திருவிழாவில் கலந்துகொள்ள ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்களுள் 2 ஆயிரம் பேரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

    மேலும் அன்றைய தினம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, போக்குவரத்துக்கான சிறப்பு பேருந்து வசதிகள், கழிப்பறை வசதிகள் உள்ளிட்டவற்றிற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    தமிழ்நாடு

    தமிழகத்தில் 5ஜி சேவை: 6 நகரங்களில் தொடக்கம் 5G
    'சர்வர்' முடக்கம் காரணமாக தபால் நிலைய சேவைகள் நிறுத்தம் - திண்டாடும் பொதுமக்கள் கோவை
    ரூ.951 கோடி செலவில் திருச்சி புதிய விமான நிலையம்: பலவிதமான சிறப்பு அம்சங்கள் திருச்சி
    திமுக-பாஜக சண்டைக்குள் சிக்கி கொண்ட தல-தளபதி திமுக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025