NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள 6 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி
    இந்தியா

    பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள 6 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

    பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள 6 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி
    எழுதியவர் Nivetha P
    Jan 13, 2023, 09:40 am 0 நிமிட வாசிப்பு
    பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள 6 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி
    பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம்

    தமிழ் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளில், மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது என்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழனி சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி என்று கூறப்படுகிறது. பழனி முருகர் சிலை போகர் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. ஞானப்பழம் அடைய நடந்த போட்டியில், பிள்ளையாருடன் தோற்ற கோபத்தில் பழனியில் தண்டாயுதபாணியாக காட்சி தருகிறார் என்று புராண கதைகள் கூறுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலாக போற்றப்படும் இதன் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற பல்வேறு ஏற்பாடுகளும், நடவடிக்கைகளும் கோயில் நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமையில் கோயில் கும்பாபிஷேகம் தொடர்பாக அதிகாரிகளோடு ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கோயில் கும்பாபிஷேகம் தொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டம்

    நடந்து முடிந்த ஆலோசனை கூட்டத்தில், கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள 6 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும், இதற்கு கோயில் நிர்வாக இணையத்தளம் மூலம் பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ரோப் கார் மற்றும் விஞ்ச் வழியாக 2 ஆயிரம் பேரும், படிவழி பாதையில் 4 ஆயிரம் பேர் என மொத்தம் 6 ஆயிரம் பேருக்கு அனுமதி என்று கூறப்பட்டுள்ளது. மேலும் குடமுழுக்கு விழாவில் கலந்துகொள்ள குலுக்கல் முறையில் 3 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். பழனி முருகன் குடமுழுக்கு விழா காலை 8மணி முதல் 9.30வரை நடைபெறும், பக்தர்கள் காலை 4முதல் 8மணிக்குள் மலை கோயிலுக்குள் சென்றுவிட வேண்டும் என்றும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மதுரை

    சமீபத்திய

    கேம் பிரியர்களுக்காக வரும் ASUS ROG Phone 7 - என்ன எதிர்பார்க்கலாம்? ஸ்மார்ட்போன்
    ரூ.2 லட்சம் மதிப்பிலான ஜாக்கெட்டை அணிந்திருந்த வட கொரிய அதிபரின் மகள் வட கொரியா
    காஷ்மீருக்கு செல்லும் முதல் ரயில் பாதை டிசம்பரில் திறக்கப்படும்: ரயில்வே அமைச்சர் ஜம்மு காஷ்மீர்
    வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் 'விடுதலை' படத்தின் மேக்கிங் வீடியோ வெற்றிமாறன்

    தமிழ்நாடு

    திருச்சியில் ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்தவர் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை திருச்சி
    அடுத்த 5 நாட்களுக்கு தொடர் மழை: எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் புதுச்சேரி
    இதுவரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட தலைவர்கள்: இந்திரா காந்தி முதல் ஜெயலலிதா வரை இந்தியா
    பத்மஸ்ரீ விருது பெற்ற பாம்புப்பிடி வீரர்கள் தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர் பத்மஸ்ரீ விருது

    மதுரை

    தமிழக பட்ஜெட்டில் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு கோவை
    மதுரை மீனாட்சியம்மன் கோயில் நடை வரும் ஏப்ரல் 8ம் தேதி அடைப்பு கோவில் திருவிழாக்கள்
    அமெரிக்காவில் தற்கொலை செய்துகொண்ட தமிழ் தம்பதி - தவிக்கும் குழந்தை அமெரிக்கா
    உசிலம்பட்டியில் 50க்கும் மேற்பட்ட நாய்களுக்கு விஷம் வைத்து கொலை மாவட்ட செய்திகள்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023