NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள 6 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள 6 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி
    பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம்

    பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள 6 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

    எழுதியவர் Nivetha P
    Jan 13, 2023
    09:40 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழ் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளில், மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது என்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பழனி சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி என்று கூறப்படுகிறது.

    பழனி முருகர் சிலை போகர் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது.

    ஞானப்பழம் அடைய நடந்த போட்டியில், பிள்ளையாருடன் தோற்ற கோபத்தில் பழனியில் தண்டாயுதபாணியாக காட்சி தருகிறார் என்று புராண கதைகள் கூறுகிறது.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலாக போற்றப்படும் இதன் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற பல்வேறு ஏற்பாடுகளும், நடவடிக்கைகளும் கோயில் நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமையில் கோயில் கும்பாபிஷேகம் தொடர்பாக அதிகாரிகளோடு ஆலோசனை கூட்டம் நடந்தது.

    காலை 8 மணி முதல் 9.30 வரை

    கோயில் கும்பாபிஷேகம் தொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டம்

    நடந்து முடிந்த ஆலோசனை கூட்டத்தில், கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள 6 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும், இதற்கு கோயில் நிர்வாக இணையத்தளம் மூலம் பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து ரோப் கார் மற்றும் விஞ்ச் வழியாக 2 ஆயிரம் பேரும், படிவழி பாதையில் 4 ஆயிரம் பேர் என மொத்தம் 6 ஆயிரம் பேருக்கு அனுமதி என்று கூறப்பட்டுள்ளது.

    மேலும் குடமுழுக்கு விழாவில் கலந்துகொள்ள குலுக்கல் முறையில் 3 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். பழனி முருகன் குடமுழுக்கு விழா காலை 8மணி முதல் 9.30வரை நடைபெறும், பக்தர்கள் காலை 4முதல் 8மணிக்குள் மலை கோயிலுக்குள் சென்றுவிட வேண்டும் என்றும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மதுரை

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    தமிழ்நாடு

    திமுக முன்னாள் எம்பி மஸ்தானின் மரணம் இயற்கையல்ல ஒரு கொலை! திமுக
    தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்களை கண்டறிய சோதனை: டிஜிபி சைலேந்திரபாபு இந்தியா
    'மக்களோடு மக்களாக சுற்றி பார்த்துவிட்டு செல்கிறேன்' என்று காவல்துறையிடம் கூறிய எளிமையான முதல்வர் மகாபலிபுரம்
    ராமேஸ்வரம் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம்-காணொளி காட்சி மூலம் துவக்கி வைப்பு மு.க ஸ்டாலின்

    மதுரை

    கடந்த ஆண்டில் ரூ.11 கோடி மதிப்புள்ள 1400 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 1981 வழக்குகள் பதிவு இந்தியா
    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமையும் - மத்திய அரசு உறுதி இந்தியா
    மதுரையில் பரபரப்பு - ஆட்சியர் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 29,000 சேலைகள் மற்றும் 19,000 வேட்டிகள் கருகின பொங்கல் பரிசு
    அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து சமாதான கூட்டம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025