NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தஞ்சாவூரில் ஆருத்ரா தரிசனம் - பெரிய கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை
    அடுத்த செய்திக் கட்டுரை
    தஞ்சாவூரில் ஆருத்ரா தரிசனம் - பெரிய கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை
    ஆருத்ரா தரிசனம்

    தஞ்சாவூரில் ஆருத்ரா தரிசனம் - பெரிய கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை

    எழுதியவர் Nivetha P
    Jan 06, 2023
    06:38 pm

    செய்தி முன்னோட்டம்

    மார்கழி திருவாதை நாளில் விரதமிருந்து சிவனை வழிபட்டு ஆருத்ரா தரிசனத்தை கண்டால் சகலவித சுகபோகங்களும் கிடைத்து, பிறவி பிணி நீங்க பெறுவார்கள் என்பது ஐதீகம்.

    திருப்பாற்கடலில் பள்ளிகொண்ட மகாவிஷ்ணு தன் நிலை மறந்து ஆனந்தத்தில் திளைத்திருப்பதை கண்ட ஆதிசேஷன், அது குறித்து விஷ்ணுவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

    அதற்கு தாருகாவனத்தில் சிவன் ஆடிய அற்புத நடனம் குறித்து விஷ்ணு சொல்லியுள்ளார்.

    ஈசன் நடனத்தை காண ஆர்வம் கொண்ட ஆதிசேஷன், பாதி மனிதன், பாதி பாம்பாக பூவுலகில் தோன்றி தவம் இருந்தார்.

    அவரது தவத்தில் ஆனந்தமடைந்த ஈசன், சிதம்பரத்தில் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் மீண்டும் அந்த நடனத்தை ஆடி காண்பித்துள்ளார்.

    இந்த நாள் தான் ஆருத்ரா தரிசன நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    பக்தர்கள்

    தஞ்சை பெரிய கோயிலில் ஐம்பொன்னாலான நடராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள்

    ஆருத்ரா தரிசன நாளையொட்டி இன்று காலை தஞ்சாவூர் பெரிய கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    இன்று மதியம் 2.30 மணியளவில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    தஞ்சையில் ஆண்டுதோறும் நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இன்று ஐம்பொன்னாலான நடராஜருக்கு விபூதி, பழங்கள், சந்தனம் உள்ளிட்ட பல மங்கள பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

    இதனை ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்தோடு பார்த்து சென்றனர். இதே போல், ராமநாதபுரம் அருகே உள்ள உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில், கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில், நெல்லையப்பர் கோயில் உள்பட பல்வேறு கோயில்களில் நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    தமிழ்நாடு

    டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித் திட்டம் தமிழக அரசு
    இன்று முதல் மதர் டைரி பாலின் விலை ரூ.2 உயர்த்த முடிவு; நடப்பாண்டில் இது 5வது விலையேற்றம் இந்தியா
    ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவிழப்பு - டிசம்பர் 29ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு வானிலை அறிக்கை
    கொரோனா தடுப்பு: மருத்துவமனைகளுக்கு அதிரடி உத்தரவிட்ட தமிழக அரசு! கொரோனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025