Page Loader
இந்திய ராணுவ DGMOக்கு போன் போட்டு போர் நிறுத்தம் கோரிய பாகிஸ்தான் DGMO; வெளியுறவு செயலாளர் தகவல்
இந்திய ராணுவ இயக்குனர் ஜெனரலுக்கு போன் போட்டு போர் நிறுத்தம் கோரிய பாகிஸ்தான்

இந்திய ராணுவ DGMOக்கு போன் போட்டு போர் நிறுத்தம் கோரிய பாகிஸ்தான் DGMO; வெளியுறவு செயலாளர் தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
May 10, 2025
06:31 pm

செய்தி முன்னோட்டம்

சனிக்கிழமை இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர்கள் ஜெனரல் (DGMO) இடையேயான உயர்மட்ட அழைப்பைத் தொடர்ந்து இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. நிலம், வான் மற்றும் கடல் வழியாக போர் நிறுத்தம் மாலை 5:00 மணி முதல் அமலுக்கு வரும் என்று வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி குறிப்பிட்டார். மேலும், மே 12 ஆம் தேதி DGMO களுக்கு இடையே அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. "பாகிஸ்தானின் DGMO இந்திய DGMO-வை மதியம் 15:35 மணிக்கு அழைத்தார், மேலும் இரு தரப்பினரும் அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்த ஒப்புக்கொண்டனர். இதை செயல்படுத்த ஏற்கனவே அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன." என்று மிஸ்ரி ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

அமெரிக்கா

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது ட்ரூத் சோஷியல் தளத்தின் பதிவில் இருதரப்பும் அமைதிக்கு ஒப்புக் கொண்டதாகக் கூறினார். "அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் நீண்ட இரவு நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி சமாதானத்திற்கு ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இரு நாடுகளுக்கும் வாழ்த்துக்கள். உங்களை வரவேற்கிறோம்!" என்று அதில் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தானின் துணைப் பிரதமர் இஷாக் டாரும் எக்ஸ் தளத்தில் போர் நிறுத்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை உறுதிப்படுத்தினார்.