NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜம்மு காஷ்மீர் பேருந்து தாக்குதலுக்கு பொறுப்பேற்றது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜம்மு காஷ்மீர் பேருந்து தாக்குதலுக்கு பொறுப்பேற்றது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பு

    ஜம்மு காஷ்மீர் பேருந்து தாக்குதலுக்கு பொறுப்பேற்றது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Jun 10, 2024
    11:54 am

    செய்தி முன்னோட்டம்

    நேற்று ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்(TRF) என்ற பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

    நேற்று அந்த பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 33 பேர் காயமடைந்தனர்.

    இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற TRF, இது வெறும் ஆரம்பம் மாட்டும் தான் என்றும், இனி "சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் அல்லாதவர்கள்" மீது இதுபோன்ற தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதற்கிடையில், தீவிரவாதிகளை கண்டுபிடிக்க தீவிர தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.

    ஜம்மு காஷ்மீர் 

    அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

    இந்த தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்த தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நியமிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    மாதா வைஷ்ணோ தேவி ஆலயத்தின் அடிவார முகாமான கத்ராவுக்குச் சென்று கொண்டிருந்த பேருந்தின் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    ஷிவ் கோரி கோவிலில் இருந்து அந்த பேருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்தது.

    அருகில் உள்ள வனப்பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகள், ஒரு வாகனத்தில் பதுங்கி இருந்து பேருந்தில் இருந்தவர்களை துப்பாக்கியால் சுட்டனர்.

    அந்த பேருந்தின் ஓட்டுநர் தோட்டாவால் தாக்கப்பட்டு சமநிலையை இழந்ததால் அந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

    இதனால், பேருந்தில் இருந்து 10 யாத்ரீகர்கள் கொல்லப்பட்டனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜம்மு காஷ்மீர்
    என்ஐஏ
    பயங்கரவாதம்
    பாகிஸ்தான்

    சமீபத்திய

    நடிகர் விஷால் திருமணம் செய்யவிருக்கும் நடிகை இவர்தான்! இணையத்தில் வைரலாகும் தகவல் விஷால்
    அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களின் நுழைவை எளிதாக்க கொள்கைகளை மறுசீரமைக்க மத்திய அரசு ஆலோசனை  அணுசக்தி
    இந்தியா விநியோகத்தைக் குறைத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் அணை கட்டுமானத்தை சீனா துரிதப்படுத்துகிறது பாகிஸ்தான்
    கவாசாகி எலிமினேட்டருக்கு போட்டியாக ரெபெல் 500 க்ரூஸரை இந்தியாவில் அறிமுகம் செய்தது ஹோண்டா ஹோண்டா

    ஜம்மு காஷ்மீர்

    ஜம்மு காஷ்மீரில் பேருந்து ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து: 36 பேர் பலி  இந்தியா
    ரஜோரி மோதல்- வெடிகுண்டு நிபுணர் உட்பட இரண்டு தீவிரவாதிகள் கொலை, 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் பாகிஸ்தான்
    உயர்கல்வியில் இஸ்லாமியர்களின் சேர்க்கை 2021ல் 8.5%க்கு மேல் குறைந்துள்ளது: அறிக்கை இந்தியா
    ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த என்கவுன்டரில், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி கொல்லப்பட்டார் பயங்கரவாதம்

    என்ஐஏ

    கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம்-3 மாநிலங்கள் உள்பட 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ.அதிரடி சோதனை கோவை
    கோவை கார் குண்டுவெடிப்பு - குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்த என்.ஐ.ஏ. கோவை
    தமிழகத்தில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை மதுரை
    பழனியில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிர்வாகி கைது  தமிழ்நாடு

    பயங்கரவாதம்

    'பயங்கரவாதத்திற்கு எதிரான தீவிர நிலைப்பாட்டை இந்தியா கொண்டுள்ளது':  வெளியுறவுத்துறை அமைச்சர்  இந்தியா
    நவம்பர் 19 அன்று ஏர் இந்தியா விமானங்களை தகர்க்கப்போவதாக காலிஸ்தான் தீவிரவாதி மிரட்டல்  கனடா
    விமானத்தை தகர்க்கப் போவதாக காலிஸ்தான் பயங்கரவாதி மிரட்டல் விடுத்ததை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது: உளவுத்துறை  காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    லஷ்கர்-ஏ-தொய்பாவின் முக்கிய தளபதி அடையாளம் தெரியாத நபர்களால் பாகிஸ்தானில் கொலை பாகிஸ்தான்

    பாகிஸ்தான்

    இந்தியா உதவியை நிறுத்தியதை அடுத்து, பாகிஸ்தான் மாலத்தீவுக்கு ஆதரவளிப்பதாக உறுதி மாலத்தீவு
    ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியமர்த்தப்பட்ட பாகிஸ்தான் ISI உளவாளி கைது  இந்தியா
    பாகிஸ்தான் காவல் நிலையம் மீது தாக்குதல்: 10 போலீசார் பலி, 6 பேர் காயம் துப்பாக்கி சூடு
    பாகிஸ்தான் வேட்பாளர்கள் அலுவலகத்திற்கு வெளியே நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 25 பேர் பலி குண்டுவெடிப்பு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025