NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பாகிஸ்தானை உலக நாடுகளிடம் அம்பலப்படுத்துவோம்; அசாதுதீன் ஒவைசி உறுதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாகிஸ்தானை உலக நாடுகளிடம் அம்பலப்படுத்துவோம்; அசாதுதீன் ஒவைசி உறுதி
    பாகிஸ்தானை உலக நாடுகளிடம் அம்பலப்படுத்துவோம்: அசாதுதீன் ஒவைசி

    பாகிஸ்தானை உலக நாடுகளிடம் அம்பலப்படுத்துவோம்; அசாதுதீன் ஒவைசி உறுதி

    எழுதியவர் Sekar Chinnappan
    May 17, 2025
    06:48 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைக்க, வெளிநாடுகளுக்குச் செல்லும் மத்திய அரசின் அனைத்துக் கட்சிக் குழுவில் ஏஐஎம்ஐஎம் தலைவரும் ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஒவைசியும் இணைந்துள்ளார்.

    பஹல்காம் மற்றும் ரியாசியில் பொதுமக்கள் கொல்லப்பட்டது உட்பட, சமீபத்திய பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பயங்கரவாத உள்கட்டமைப்பை இந்தியா தாக்கி அழித்தது.

    இந்நிலையில், ஊடகங்களிடம் பேசிய ஒவைசி, பயங்கரவாதத்தை ஆதரிப்பதில் பாகிஸ்தானின் நீண்டகால பங்கை அம்பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

    தாக்குதல்கள்

    பயங்கரவாதத் தாக்குதல்களை குறிப்பிட்ட அசாதுதீன் ஒவைசி

    காந்தஹார் விமானக் கடத்தல், 2001 நாடாளுமன்றத் தாக்குதல், 26/11 மும்பைத் தாக்குதல்கள் மற்றும் உரி மற்றும் பதான்கோட் தாக்குதல்கள் போன்ற சம்பவங்களை மேற்கோள் காட்டி, அவர், "முன்னாள் ஜனாதிபதி ஜியா-உல்-ஹக்கின் காலத்திலிருந்தே பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரித்து வருகிறது.

    இந்த வரலாற்றை உலகம் அறிந்து கொள்ள வேண்டும்." என்று கூறினார். பாகிஸ்தானை இஸ்லாமிய நாடு என்று கூறுவதையும் ஒவைசி மறுத்தார்.

    இந்தியாவின் சொந்த முஸ்லீம் மக்கள் தொகையான கிட்டத்தட்ட 200 மில்லியனையும் அதன் மதச்சார்பற்ற அமைப்பையும் எடுத்துக்காட்டினார்.

    இந்தியாவின் செய்தி உலகளாவிய தளங்களில் தெளிவாக முன்வைக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். சசி தரூர், ரவிசங்கர் பிரசாத், கனிமொழி உள்ளிட்ட மூத்த எம்பிக்கள் தலைமையில் மத்திய அரசு இதுபோன்ற ஏழு குழுக்களை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பாகிஸ்தான்
    ஆபரேஷன் சிந்தூர்
    பயங்கரவாதம்

    சமீபத்திய

    பாகிஸ்தானை உலக நாடுகளிடம் அம்பலப்படுத்துவோம்; அசாதுதீன் ஒவைசி உறுதி இந்தியா
    பாகிஸ்தானுக்காக இந்தியாவில் உளவு பார்த்ததாக பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது யூடியூபர்
    ரவி மோகன் குற்றச்சாட்டுகளை மறுத்து அறிக்கை வெளியிட்ட மாமியார் சுஜாதா விஜயகுமார் ரவி
    அதிக கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பதில் இவ்ளோ நன்மைகள் இருக்கா? நாம் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியவை கடன்

    இந்தியா

    Operation Keller: ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 லஷ்கர் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் ஜம்மு காஷ்மீர்
    இந்தக் காரணங்களுக்காக தான் அமெரிக்கா இந்தியர்களுக்கு மாணவர் விசாக்களை மறுக்கிறதாம்! அமெரிக்கா
    'மீண்டும் ஒரு தாக்குதல் நடந்தால், இந்தியா உறுதியான பதிலடி கொடுக்கும்': மோடி ஆபரேஷன் சிந்தூர்
    மிச்சமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் டிஜே வேண்டாம், cheer leaders வேண்டாம், உணர்வுகளை மனதில் கொள்ளுங்கள்: கவாஸ்கர் கோரிக்கை ஐபிஎல் 2025

    பாகிஸ்தான்

    ராவல்பிண்டி வரை எதிரொலித்த இந்திய பாதுகாப்புப் படையினரின் வீரம்; பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு ராஜ்நாத் சிங்
    இனியொருமுறை அத்துமீறினால்... பாகிஸ்தானுக்கு அமெரிக்கா மூலம் மோடி கொடுத்த வார்னிங் நரேந்திர மோடி
    ஆபரேஷன் சிந்தூர்: 35-40 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்தியா அறிவிப்பு இந்தியா
    ஆப் சிந்தூரில், கராச்சியைத் தாக்க இந்திய கடற்படை தயாராக இருந்தது: துணை அட்மிரல் ஆபரேஷன் சிந்தூர்

    ஆபரேஷன் சிந்தூர்

    'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியாவில் தங்கம் விலை குறைந்துள்ளது தங்க விலை
    இந்திய யாத்ரீகர்களுக்கான கர்தார்பூர் வழித்தடத்தை மூடிய பாகிஸ்தான் கர்தார்பூர் வழித்தடம்
    ஆபரேஷன் சிந்தூர் தாக்கம்: விமான சேவைகள் பாதிப்பு - மும்பை vs பஞ்சாப் லீக் போட்டி இடமாற்றம் ஐபிஎல் 2025
    லாகூர், இஸ்லாமாபாத் விமான நிலையங்கள் மீதான வான்வழியை மூடிய பாகிஸ்தான் பாகிஸ்தான்

    பயங்கரவாதம்

    மாட்டிக்கிட்டியே பங்கு! பயங்கரவாதிகளை ஆதரிப்பதை நேரலையில் ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் அமைச்சர் பாகிஸ்தான்
    பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள் 3 பேரின் வீடுகளை ஜம்மு காஷ்மீர் அரசு இடித்தது ஜம்மு காஷ்மீர்
    பஹல்காம் தாக்குதலில் சந்தேகப்படும் நபர் மாணவர் விசாவில் பாகிஸ்தானுக்குள் நுழைந்து பயங்கரவாதியாக திரும்பினார் பஹல்காம்
    பாகிஸ்தானுடனான அனைத்து கிரிக்கெட் உறவுகளையும் இந்தியா முறித்துக் கொள்ள வேண்டும்: சவுரவ் கங்குலி சவுரவ் கங்குலி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025