NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தேர்தலில் நவீன நடைமுறைகளை கொண்டுவர பதவியிலிருந்து ஓய்வுபெறும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வலியுறுத்தல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தேர்தலில் நவீன நடைமுறைகளை கொண்டுவர பதவியிலிருந்து ஓய்வுபெறும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வலியுறுத்தல்
    தேர்தலில் நவீன நடைமுறைகளை கொண்டுவர தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வலியுறுத்தல்

    தேர்தலில் நவீன நடைமுறைகளை கொண்டுவர பதவியிலிருந்து ஓய்வுபெறும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வலியுறுத்தல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Feb 17, 2025
    06:52 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஓய்வுபெறும் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தொலைதூர வாக்களிப்பு, வாக்களிப்பதற்கான பயோமெட்ரிக் அங்கீகாரம் மற்றும் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறையைத் தடுக்க வாக்குச்சாவடி வாரியான வாக்கு எண்ணிக்கையை வெளியிடாமல் இருத்தல் ஆகியவற்றை கொண்டுவர வேண்டும் என்றார்.

    ராஜீவ் குமார் தனது பிரியாவிடை உரையில், தேர்தல் நிதியளிப்பில் நிதி வெளிப்படைத்தன்மை மற்றும் சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்களுக்கு எதிர்த்து வலுவான நடவடிக்கைகள் தேவை என்பதை வலியுறுத்தினார்.

    வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிப்பு குறித்து பேசுகையில் தொலைதூரத்தில் இருந்து வாக்களிக்க உதவும் வழிமுறைகளை விரைவாக செயல்படுத்துமாறு அவர் மத்திய அரசை வலியுறுத்தினார்.

    நடைமுறை 

    தற்போதைய நடைமுறை

    வெளிநாடு வாழ் இந்தியர்கள், தற்போதைய நடைமுறைப்படி தேர்தலில் வாக்களிக்க வேண்டுமென்றால் அவர்கள் வாக்குப்பதிவின்போது இந்தியாவில் இருக்க வேண்டும்.

    இந்த நடைமுறையில்தான் மாற்றம் வேண்டும் என்று ராஜீவ் குமார் வலியுறுத்துகிறார். இந்திய தேர்தல் ஆணையம் இதற்காக பல்வேறு தீர்வுகளை முன்மொழிந்துள்ளது.

    ஆனால், அரசியல் கருத்து வேறுபாடுகள் இந்த தீர்வுகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்ல முடியவில்லை.

    இதற்கிடையே, தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் குறித்த விமர்சனங்களை நிராகரித்த ராஜீவ் குமார், குறிப்பாக ஹரியானா மற்றும் மகாராஷ்டிராவில் சமீபத்திய தேர்தல்களின் போது, ​​எதிர்க்கட்சிகள் வாக்களிப்பு போக்குகள் மற்றும் முடிவுகளின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியதை நிராகரித்தார்.

    விமர்சகர்கள் வாக்குப்பதிவு மற்றும் எண்ணும் காலங்களில் குழப்பத்தை ஏற்படுத்த தவறான தகவல்களைப் பரப்புவதாக அவர் குற்றம் சாட்டினார்.

    தொழில்நுட்பம்

    தேர்தலில் தொழில்நுட்பம்

    தேர்தல்களில் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்திய ராஜீவ் குமார், வாக்காளர் ஆள்மாறாட்டத்தைத் தடுக்க பயோமெட்ரிக் அங்கீகாரத்தை கொண்டுவர வேண்டும் எனக் கூறினார்.

    தனிப்பட்ட வாக்குச்சாவடி தரவு வெளியிடப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும், தேர்தலுக்கு பிந்தைய வன்முறை மற்றும் அரசியல் விலக்கைத் தடுப்பதற்கும் டோட்டலைசர் தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதை அவர் ஆதரித்தார்.

    இதற்கிடையே, ராஜீவ் குமாருக்கு பிறகு புதிய தலைமைத் தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் அடங்கிய குழு விரைவில் கூட உள்ளது.

    புதிய தலைவர் 2026இல் நடைபெறவிருக்கும் தமிழகம், பீகார், மேற்கு வங்கம், கேரளா மற்றும் அசாமில் நடைபெறவிருக்கும் தேர்தல்களை மேற்பார்வையிடுவார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தேர்தல் ஆணையம்
    இந்தியர்கள்
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    தேர்தல் ஆணையம்

    2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது தேர்தல்
    கோவை மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2024: இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்ட பாஜகவின் அண்ணாமலை அண்ணாமலை
    விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு இடைத்தேர்தல்
    அமர்நாத் யாத்திரைக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீர் தேர்தல் நடைபெறலாம்; பாஜக யாரோடு கூட்டணி?  ஜம்மு காஷ்மீர்

    இந்தியர்கள்

    நிகரகுவா விமான சர்ச்சை: திட்டம் கசிந்ததால் துபாயிலிருந்து நாடு திரும்பும் 600 இந்தியர்கள் பிரான்ஸ்
    சோமாலியாவில் 15 இந்தியர்களுடன் கடத்தப்பட்ட சரக்குக் கப்பல்: காப்பாற்ற விரையும் ஐஎன்எஸ் சென்னை இந்திய ராணுவம்
    ரஷ்யா போரில் கலந்துகொள்ள இந்தியர்கள் அழைக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு எச்சரிக்கை ரஷ்யா
    குவைத்தில் கட்டிட தீ விபத்தில் 40 மேற்பட்ட இந்தியர்கள் பலி; உடல்களை இந்தியா எடுத்துவர நடவடிக்கை குவைத்

    இந்தியா

    அமெரிக்க அதிபர் டிரம்பை பிப்ரவரி 13ஆம் தேதி சந்திக்க உள்ளார் பிரதமர் மோடி பிரதமர் மோடி
    தினசரி 12 மணி நேர வேலை என மாற்ற திட்டமா? மத்திய அரசு கூறுவது என்ன மத்திய அரசு
    ₹500 கோடியை அதிகம் அறியப்படாத நபருக்கு உயில் எழுதி வைத்த ரத்தன் டாடா; யார் இந்த மோகினி மோகன் தத்தா ரத்தன் டாடா
    சீன உதிரிபாகங்கள் இருக்கக் கூடாது; 400 ட்ரோன்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்தது இந்திய ராணுவம் இந்திய ராணுவம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025